நாத்திக்ர்கள் விவாத பின்னணி என்ன?
நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தின் போது அவர்கள் படு தோல்வி அடைந்ததை வீடியோ காட்சிகள் மூலம் அறிந்திருப்பீர்கள்.
பொதுவாக விவாதங்களின் போது எதிர்த் தரப்பினர் எதிர்பார்க்காத சில வாதங்கள் முன் வைக்கப்படும் போது அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படலாம். பின்னர் அதற்கான விடையை அவர்கள் கண்டு பிடிப்பார்கள். ஆனால் நாத்திகர்களுடன் நடந்த இந்த விவாதம் அத்தகையது அல்ல.
மாறாக இறைவன் இருக்கிறான் என்பதற்கு நாம் என்னென்ன ஆதாரங்களை எடுத்துக் காட்டுவோம் என்பதும், குர் ஆன் இறைவேதம் என்பதற்கு நாம் எத்தகைய சான்றுகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும், நாத்திகர்களின் மூட நம்பிக்கை குறித்து நாம் எத்தகைய கேள்விகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும் பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டன.
பல மாதங்களூக்கு முன்பே கேள்வித்தாள் வழங்கப்பட்டும் பதில் எழுதாத மாணவனைப் போல் அவர்கள் ஆகி விட்டனர். எத்தனை மாதங்கள் அவர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு இஸ்லாம் தெளிவாக இருக்கிறது என்பதும் இதில் நிரூபணமாகியுள்ளது.
உணர்வு வார இதழில் பல வாரங்கள் நான் தொடராக எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட் அதே விஷயங்கள் தான் விவாதத்தின் போதும் கேட்கப்பட்டன்.
நேயர்கள் பயனடைவதற்காக அந்தத் தொடரை இங்கே வெளியிடுகிறோம்.
தொடர்ந்து படிக்க 17.10.2009. 10:42