கமலின் சுயரூபத்தை
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு தடைபோட்டதை அடுத்து நடிகர்களின்முகத்தில் ஈ ஆடவில்லை. அவர்களில் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்றுதங்களது உள்ளத்தில் விஷம் வைத்துக்கொண்டு, முஸ்லிம்களை கருவறுக்கவேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்த இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்தையும்,இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தவும், முஸ்லிம்கள் மீது தாக்குதல்நடத்துவதற்கும் இதைத் தக்க தருணமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
அத்துடன் இலங்கைப் பெண் ரிசானாவுக்கு மரணதண்டனை கொடுத்த விஷயத்தில்சவூதி அரேபிய அரசை விமர்சிக்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாத்தின் மீதும்,இஸ்லாமியர்கள் மீதும் பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசிப்புளகாங்கிதம் அடைந்தனர்.
இந்த பொய்யர்களுக்கும், கூத்தாடிகளுக்கும் பதிலடி கொடுக்கும் முகமாகவும்,விஸ்வரூபம் எடுத்த கமலஹாசனின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும்மண்ணடியில் மாபெரும் பொதுக்கூட்டம் 27.01.13 அன்று நடைபெறும் என டிஎன்டிஜேஅறிவிப்பு செய்தது.
கடல் அலையாய் திரண்ட மக்கள் வெள்ளம்:
பொதுக்கூட்டத்திற்கு சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் ஆண்களும்,பெண்களும், தங்களது கைக்குழந்தைகளுடன் அலை அலையாய் குவிந்தனர்.
ரிசானா விவகாரத்தில் டிஎன்டிஜேயின் பகிரங்க அறைகூவல்:
பொதுக்கூட்டத்தின் ஆரம்பமாக மாநிலப் பொதுச் செயலாளர் கோவைரஹ்மத்துல்லாஹ் அவர்கள், “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
இஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்கின்றோம் என்ற பெயரில் ரிசானாவிவகாரத்தில் தங்களது இஷ்ட்டப்படி புளுகித்தள்ளியுள்ள நக்கீரன்கோபால்களையும், மிருக புத்திரர்களையும், ஜோஸஃபின் பாபாக்களையும், விகடக்கோமாளிகளையும் பகிரங்க விவாதத்திற்கு அழைத்து டிஎன்டிஜே விடுத்தஅறைகூவல் குறித்து விவரித்தார்.
இஸ்லாத்தை விமர்சிக்கும் நோக்கில் பொய்களையும், புளுகு மூட்டைகளையும்அவிழ்த்துவிட்ட ஆனந்த விகடன், நக்கீரன், மனுஷ்யபுத்திரன், பாரதி தம்பி,ஜே.பி.பாபா ஆகியோரின் பொய்களையும், புரட்டுகளையும், கிறுக்குத்தனமானவாதங்களையும் பட்டியலிட்டார்.
கலைஞர் வைத்த வாதம் எத்தகைய அபத்தமானது என்பதையும், கலைஞருக்குடிஎன்டிஜே விடுத்த விவாத அறைகூவலையும் விவரித்தார்.
கமலின் சுயரூபத்தை அம்பலமாக்கிய விஷ்வரூபம்! – இஸ்லாமிய எதிரிகளை மண்ணைக்கவ்வ வைத்த மண்ணடி பொதுக்கூட்டம்.
மரணதண்டனை வேண்டாம் என்பவர்களின் இரட்டை நிலை:
மரணதண்டனையே கூடாது என்று கூச்சல் போடும் இவர்கள் இலங்கை போர்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்லும்இரட்டை நிலையை அம்பலப்படுத்தினார்.
சவூதி வழங்கிய மரண தண்டனையை கேலி பேசி குறைகூறிய ஜோஸிபின் பாபாஎன்ற கிறித்தவப் பெண் பேராசிரியை சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிசம்பந்தமாக யூட்யூபில் கருத்து சொன்னபோது, மனைவியை கொடுமை பண்ணும்கணவன் குறித்து கருத்து தெரிவிக்கையில், இவனையெல்லாம் அடிச்சே கொல்லவேண்டும் என்று கருத்துச் சொல்லியிருப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.
உலகம் சந்திக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களே தீர்வு என்பதையும் ஆய்வுகள் மற்றும் புள்ளி விபரங்களுடன்விளக்கினார்.
பகிரங்க விவாத அறைகூவல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறைகூவலைஏற்று விவாதிக்க வருவதற்கு டிஎன்டிஜே அவர்களுக்கு விதித்துள்ள கெடு முடியஇன்னும் 72மணி நேரங்களே உள்ளன என்றும், இந்த 72 மணி நேரத்திற்குள் அவர்கள்விவாதத்திற்கு வரவில்லையென்றால் விவாதத்திலிருந்து பின்வாங்கிஓட்டமெடுத்துவிட்டார்கள் என்பதற்கு அதுவே ஆதாரமாகும் என்பதை பகிரங்கஅறிவிப்புச் செய்தார்.
விஸ்வரூபம் - அடுத்தது என்ன?- பீஜே அவர்களின் உரை:
அடுத்ததாக மாநிலத் தலைவர் பீஜே அவர்கள், “விஸ்வரூபம் - அடுத்தது என்ன?”என்ற தலைப்பில் உரையாற்றினார்.
விஸ்வரூபம் என்ற திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்துஎடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்பதால் அதற்கு தடைவிதிக்கச் சொல்லிஇஸ்லாமிய சமுதாயம் தமிழக அரசை கேட்டுக் கொண்டது. அதை ஏற்று தமிழகஅரசு அந்தப்படத்திற்கு தடை போட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாத்தை கருவறுக்க வேண்டும் என்று களமிறங்கியஅரசியல்வாதிகளும், கூத்தாடிக் கூட்டமும் தற்போது தருணம் பார்த்துக்கொண்டிருந்து முஸ்லிம்களைத் தாக்க களமிறங்கியுள்ளனர். அவர்கள்முஸ்லிம்களுக்கு எதிராக வைக்கக்கூடிய வாதங்கள் என்ன என்பதைப்பார்த்துவிட்டு, விஸ்வரூபம் என்ற படம் எப்படிப்பட்ட விஷமக்கருத்துக்களைவிதைக்கின்றது என்று பார்க்கலாம் என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார்.
எதிராக வைக்கப்படக்கூடிய வாதங்கள்:
- இந்தப் படத்தை தடை செய்யச் சொல்வது கருத்துசுதந்திரத்திற்கு எதிரானது.
- இவ்வாறாக ஒரு திரைப்படத்தை வெளியிடவிடாமல்தடுப்பது கலாச்சார தீவிரவாதமாகும்.
- சென்சார் போர்டே அனுமதித்து விட்ட பிறகு அதைத்தடை செய்ய நீங்கள் யார்?
- அதை தமிழக அரசு எப்படி தடை செய்யலாம்?
- மற்ற ஊர்களில் எல்லாம் வெளியிட்டுள்ளார்களே!தமிழகத்தில் மட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்?
- இந்துக்களை கேவலப்படுத்தி எடுக்கப்பட்டதிரைப்படத்தை இந்துக்கள் எதிர்த்தார்களா? நீங்கள்மட்டும் எதிர்ப்பது ஏன்?
- இஸ்லாமியர்களையும், முஸ்லிம்களையும்இழிவுபடுத்தி இதற்கு முன்பு எந்தவொரு படமும்வந்ததே இல்லையா?
- அப்படியானால் அப்போதெல்லாம் அதை எதிர்க்காமல்இருந்துவிட்டு இப்போது ஏன் இதை மட்டும்எதிர்க்கின்றீர்களே. இது நியாயமா?
மேற்கண்ட வரட்டு வாதங்களை முஸ்லிம்களை எதிர்க்கக்கூடியவர்கள்அறிவுப்பூர்வமாக தாங்கள் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு வைக்கின்றனர்.இவர்கள் எவ்வளவு அபத்தமான வாதங்களை வைக்கின்றார்கள் என்று சொல்லிஅக்குவேறு ஆணிவேறாக அந்த வரட்டு வாதங்களுக்கு வரிக்கு வரி பதில் அளித்தார்.
மேலும், முஸ்லிம்களைப் பற்றி படம் எடுக்கின்றாயே! அப்படி நீ படம் எடுப்பதாகஇருந்தால் முஸ்லிம்களைப் பற்றியும், அவர்களது நடவடிக்கைகள் குறித்தும்அவர்களது கொள்கைக் கோட்பாடுகள் குறித்தும் குறைந்தபட்ச அறிவாவது இருக்கவேண்டும் அந்த அறிவுகூட படம் எடுக்கும் எவருக்கும் இருப்பதில்லை என்பதையும்,அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களை இழிவுபடுத்த வேண்டும் என்றநோக்கத்திலேயே திட்டம் தீட்டி முஸ்லிம் வேடங்களில் காட்டக்கூடியவர்களைஅசிங்கப்படுத்தும் விதமாக திரைப்படத்தில் காட்டப்பட்டு வருவதையும்ஆதாரங்களுடன் பட்டியலிட்டார்.
விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்துஎடுக்கப்பட்டுள்ள காட்சிகளை பட்டியல் போட்டு, இத்தகைய காட்சிகள் அடங்கியவிஸ்வரூபம் திரைப்படம் தடைசெய்யப்பட வேண்டும் என்றும், நீதிமன்றமேஅனுமதி கொடுத்தாலும் அந்த அனுமதியை எதிர்த்து எந்த வகையில் அதைத்திரையிட விடாமல் தடுக்க வேண்டும் என்ற வழிமுறைகளை தமிழக அரசு இதற்குமுன்பு கடைப்பிடித்துள்ளது. அதைப் பின்பற்றி முஸ்லிம்களின் உணர்வுகளுக்குமதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறிமுடித்தார்.
Published on: January 31, 2013, 6:36 PM Views: 551
