மீண்டும் மீண்டும் ஓடினாலும் விடமாட்

விவாதத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டுமே சான் குழுவினர் கவனத்தில் கொண்டு கடிதம் எழுதுகின்றனர் என்பதற்கு மற்றுமொரு சான்றாக நேற்றையை (29-2-2012) அவர்களது மெயில் அமைந்துள்ளது.

”சரி நீங்க சொன்னபடியே உங்க மாநிலத்துக்கு வந்து நீங்க சொன்ன தலைப்புல விவாதம் பன்ன நாங்க ரெடி நீங்க ரெடியாக? எப்பன்னு சொல்லுங்க என தெளிவாக அனுப்பிய மெயிலுக்கு அவர்கள் உண்மையில் விவாதம் செய்ய தயாராக இருந்தால் என்ன பதில் எழுதி இருக்கு வேண்டும் இன்ன தேதியில் வைத்துக் கொள்ளலாம் என எழுதி இருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அவர்கள் அவ்வாறு எழுதவில்லை.

 

அவர்களின் மழுப்பல் மெயில்:

Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ be glorified forever and ever. Amen.

Dear Friends at TNTJ,

We are in receipt of your partial reply dated February 28, 2012 to our email dated February 24, 2012. As you have mentioned that you will be sending another reply to our email dated February 24, 2012, we will wait to receive that as well before we respond to this partial reply.

If you cannot reply by March 3 as we requested, and require more time to respond fully, please take time till March 6. However, if you still require more time, do let us know by when you will be able to fully respond.

Or alternatively, if you have a change of mind and wants us to treat this reply as your full and final response to our email dated February 24, 2012, do let us know and we will respond to your suggestions. If not, we will respond to this partial email along with the response for your full email which is yet to be received.

Looking forward for a debate on Quran.

Thanks and regards,

SAN

இரு சாராரின் கடித போக்குவரத்துக்களை படிக்கும் எவரும் ”சான் குழுவினர் விவாதத்திலிருந்து தப்பிக்க மழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு விவாதம் செய்ய திராணி இல்லை” என்றே கருதுவார்கள்

அந்த அவர்களது மழுப்பழுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றுமொரு அதிரடி பதில் மின்னஞ்லை நேற்றே (29-2-2012) அனுப்பியது.

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சான் குழுவினருக்கு,

உங்களது 24.02.2012 மெயிலில் உள்ள பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் பதில் சொல்வது அவசியமாகும். எனினும், விவாதம் நடைபெற வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கமாகும். அதனால் தான் விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு பதில் எழுதுவதை தள்ளிவைத்து விட்டு விவாதம் தொடர்பான விஷயங்களை மட்டும் எழுதினோம்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயத்துக்குப் பதில் எழுதிக் கொண்டு விவாதத்துக்கு வராமல் நீங்கள் திசை திருப்புவதற்கு இடம் தரக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும்.

அதனால்தான் உங்களது பொய்யான செய்திகளுக்குப் பதில் சொல்லும் எங்களது உரிமையைச் சற்று தாமதப்படுத்திவிட்டு, விவாதம் செய்வதற்கு நாங்கள் தயார் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று விவாதத் தேதிகளையும் குறிப்பிட்டு உங்களுக்கு நேற்று பதில் அனுப்பினோம்.

இதன் பிறகும் விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் உங்களுக்கு வசதியான தேதிகளையும் குறிப்பிடாமல் வழக்கம் போல் மழுப்பலான பதிலை அனுப்பியுள்ளீர்கள்.

உங்கள் பொய்களுக்குப் பதிலளிக்கும் உரிமையை நாங்கள் விட்டுத் தரமாட்டோம். விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு விவாதத்தின் போது கூட நாங்கள் பதிலளிக்கலாம். அல்லது விவாதம் முடிந்த பின்னர் கூட நாங்கள் பதிலளிக்கலாம். அது எங்கள் வசதியைப் பொருத்த விஷயம். அந்தப் பதிலுக்கும் தற்போது நடக்க வேண்டிய விவாதத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

எங்கள் பதில் என்னவாக இருந்தாலும் விவாத ஒப்பந்த்துக்கு அது சம்மந்தமில்லாத விஷயம் என்பதால் உங்களது கொச்சியில் உங்களது ஏற்பாட்டில் நீங்கள் சொல்லும் தலைப்பிலேயே விவாதம் செய்யத் தயார் என்று நாங்கள் ஏற்கனவே எழுதிய நிலைபாட்டுக்குத் தான் நீங்கள் பதிலளிக்க்க் கடமைப்பட்டுள்ளீர்கள்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத உங்களது பொய்களை அம்பலப்படுத்தி நாங்கள் எப்போது எழுதுகிறோமோ அப்போது நீங்கள் பதில் தந்தால் போதும். அது உங்களைப் பொய்யர்கள் என்றும் உலகிற்குத் தோலுரித்துக் காட்டும் கடிதமாகத் தான் அது இருக்குமே தவிர விவாத ஒப்பந்தம் சம்பந்தமானவை அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே தாமதமில்லாமல் கொச்சி காவல்துறை ஆணையரை அணுகி அனுமதி ஆணையைப் பெற்று அரங்கை முன்பதிவு செய்து விவாத ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே எழுதிய மெயிலின் வாசகத்தை உறுதி செய்யும் வண்ணமாக அதன் முக்கிய பகுதியை கீழே தருகிறோம்.

  • ஆகவே, உங்கள் கொச்சியிலேயே வந்து மீண்டும் ஒரு முறை குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஏற்கனவே நடந்த இந்த விவாதத்தை நாங்கள் லைவ் ரிலே பண்ணினோம். அதை நீங்கள் முழுமையாகப் பார்த்தீர்கள். முடிந்தால் அதற்குப் பதில் தயாரித்து வாருங்கள்.
  • இந்த விவாதம் முடிந்த மறு வாரம் சனி ஞாயிறுகளில் ஓடி ஒளிந்தது யார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும்.
  • போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்று விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அதன் ஒரிஜினலை எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும்.
  • எங்கள் தரப்பில் 150 நபர்கள் கலந்து கொள்வார்கள். (அவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு வசதியாக போலீஸ் அனுமதியைப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தர வேண்டும்.)
  • காவல்துறையில் அனுமதி பெறும் போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பின்னர் விபரம் தெரிந்தவுடன் அனுமதியை மறுக்கும் நிலை ஏற்படும்.
  • சென்னையில் விவாதம் செய்ய நீங்கள் தயார் என்று சொன்னீர்கள். ஆனால் நேரடி ஒளிபரப்பு செய்ய போலீஸ் தடை விதித்துள்ளது என்று தான் மறுத்தீர்கள். எனவே நீங்கள் வாங்கும் அந்த போலீஸ் அனுமதியில் தொலைக்காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • நீங்கள் ஒப்புக் கொண்டபடி இதற்கான செலவுகளை நீங்களே ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
    மார்ச் 17, 18 அல்லது மார்ச் 24, 25 அல்லது மார்ச் 31, ஏப்ரல் 1 அல்லது ஏப்ரல் 7, 8 அல்லது ஏப்ரல் 14, 15 அல்லது ஏப்ரல் 21, 22 அல்லது ஏப்ரல் 28, 29
  • ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமதமின்றி தெரிவிக்கவும்.
  • இதில் எந்தவொன்றை நீங்கள் ஏற்க மறுத்தாலும் நீங்கள் ஒடி ஒளிந்தீர்கள் உறுதிபட தெளிவாகிவிடும்.

உங்களுக்கு வசதியான தேதியையும் விவாத ஏற்பாடுகளை துவங்கி விட்டோம் என்ற உங்களின் பதிலை மார்ச்-3 ஆம் தேதிக்குள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 

March 1, 2012, 8:47 PM

சான் குழுவினருக்கு பகிரங்க அறைகூவல்!

திருக்குர்-ஆன் இறைவேதமா? என்ற தலைபில் விவாதிக்க வராமல் பொய்க்காரணங்களைக்கூறி ஓட்டமெடுத்த சான் குழுவினர், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி ஒரு மெயிலை நமக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அந்த மெயில் இதோ:





அவர்களுக்கு அளித்த பதிலை இங்கே தருகின்றோம்.

SAN REPLY.pdf

February 18, 2012, 8:37 PM

சான் குருப், விவாதத்திலிருந்து பின்

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
அல்குர்ஆன் 74:49,50,51

என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் முதல் தலைப்பில் விவாதம் செய்த கிறிஸ்தவ அறிஞர்கள், இரண்டாம் தலைப்பில் விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்த நிகழ்வு கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜனவரி 21 மற்றும் 22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும், ஜெர்ரி தாமஸ் குழுவினருக்கும் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றதை சென்ற வார உணர்வு இதழில் நாம் எழுதியிருந்தோம்.

இது ஆன்லைன் பீஜே டாட் காம் இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. உடனடியாக அவை குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டன.

பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பைத் தொடர்ந்து ஜனவரி 28 மற்றும் 29 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில், குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பில் விவாதம் நடத்த இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டு, கிறிஸ்தவ மிஷனரிக்குச் சொந்தமான சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள வித்யோதயா ஆடிட்டோரியத்தில் இந்த விவாதம் நடைபெறுவதாக இருந்தது.

தலைகுனிந்த கிறிஸ்தவ அறிஞர்கள் :

கடந்த வாரம் நடந்து முடிந்த பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக வைக்கப்பட்ட பைபிளிலுள்ள ஆபாச வசனங்களுக்கும், கேவலமான சட்டங்களுக்கும், பொய்யான உளறல்களுக்கும், கணக்கில்லாத முரண்பாடுகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் கிறிஸ்தவ அறிஞர்கள் குழுவினர் திணறினார்கள்.

எதிரணியினரை ஆட்டம் காண வைத்த பீஜேவின் அறிவிப்பு:

பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் பேச வந்த கிறிஸ்தவ அறிஞர்கள் கூட்டம் பைபிளில் உள்ள ஆபாசங்களை நாம் வண்டி வண்டியாக அள்ளிப்போட ஆரம்பித்தவுடனே பதில் சொல்ல முடியாமல் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஆபாசம் உள்ளது என்று கூறி சம்பந்தமில்லாத வசனங்களையும், ஹதீஸ்களையும் கூறி விவாதத்தைத் திசை திருப்ப்ப் பார்த்ததை நாமெல்லாம் அறிவோம்.

இவர்களது இந்த குள்ள நரித்தனத்தைப் பற்றி பீஜே சென்ற விவாதத்தில் குறிப்பிடும் போது இது குறித்து அவர்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தார்.

தயார் நிலையில் 600க்கும் மேற்பட்ட சிலேடுகள்:

பைபிள் இறைவேதம் என்று நிரூபிக்க வந்தவர்கள் குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டி தலைப்புக்கு வெளியே சென்று விட்டனர். இவர்கள் எப்படி பைபிளைப் பற்றி பேசாமல் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி தலைப்புக்கு வெளியே சென்றார்களோ அது போல இவர்கள் காட்டித் தந்த முன்மாதிரியின் அடிப்படையில் நாமும் அடுத்த விவாதத்தில் தலைப்பில் விவாதிப்பதுடன் பைபிளில் உள்ள ஆபாசங்களையும் பட்டியல் போடுவோம்.

பைபிளிலுள்ள ஆபாசங்களில் சொற்பமான அளவுதான் இப்போது போட்டுக் காட்டியுள்ளோம்(சுமார் 20 சிலேடுகள் மட்டும்தான்). இது போல இன்னும் நாங்கள் தயாரித்து வைத்துள்ள 600 சிலேடுகளை அடுத்த விவாதத்தின் போது போட்டுக் காட்டுவோம் என்று பீஜே அறிவிப்பு செய்திருந்தார்.

20க்கே இந்த நாற்றம் என்றால் 600 போட்டால் என்னவாகுமோ?:

பைபிள் பற்றிய தலைப்பில் வெறும் இருபது சிலேடுகளுக்கே இப்படி நாறி நாற்றமெடுத்து விட்டது என்றால், 600 சிலேடுகளையும் போட்டுகாட்டுவார்களேயானால் என்னவாகும் என்று பயந்த அந்தக் குழுவினர் தவ்ஹீத் ஜமாஅத்தின் பிடியிலிருந்து தப்பித்து தலைதெறித்து ஓட்டமெடுக்க வழிதேடிக் கொண்டிருந்தனர்.

வயிற்றில் புளியைக் கரைத்த பீஜேயின் அடுத்த அறிவிப்பு:

600 சிலேடுகள் அடுத்த தலைப்பில் வரவுள்ளன என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றுமொரு விஷயத்தையும் கடந்த விவாதத்தின் போது பீஜே அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.

இவர்கள் இப்னு கஸீர் நூலில் அப்படி உள்ளது; இத்கான் என்ற நூலில் இப்படி உள்ளது; அல்கசாலி அப்படி சொல்லியுள்ளார்; அல்சுயூத்தி இப்படி சொல்லியுள்ளார்; அலிகான் என்பவர் அவ்வாறு கூறியுள்ளார்; அல்கபாரியும், அல்மசூதியும் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்று மனம்போன போக்கில் தங்களது கற்பனைக் கோட்டையின் கதவுகளை திறந்துவிட்டு இஷ்டத்திற்கு புகுந்து விளையாடினர்.

இவர் இவர் இவ்வாறெல்லாம் சொல்லியுள்ளார் என்று சொன்னீர்களே அதற்கெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுடைய மூல நூல்களிலிருந்து விவாத ஒப்பந்தத்தின்படி ஆதாரம் காட்டியாக வேண்டும். எனவே நீங்கள் சொன்ன அனைத்திற்கும் ஆதாரம் தற்போது வேண்டும் என்று பீஜே சென்ற விவாதத்தில் கேட்ட போது அவர்கள் எதற்கும் ஆதாரம் தரவில்லை. புகாரி என்று மேற்கோள்காட்டிய ஒரு ஹதீஸிற்கு மட்டும் முஸ்லிமில் உள்ளதாக பலமணி நேர போராட்டத்திற்கு பின்பு ஆதாரம் தந்தனர்.

பைபிளில் பல வசனங்களைக் காணவில்லை. பல வசனங்களுக்கு பிராக்கேட் (அடைப்புக்குறி) போட்டுள்ளனர். பல வசனங்களில் வெறும் வசன எண் மட்டும் தான் உள்ளது என்று இவர்கள் பைபிளில் செய்துள்ள கைவரிசையை கலீல் ரசூல் அவர்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய போது, அதற்கு விவாதக்குழுவில் ஒருவரான பவுல் என்பவர் பதிலளித்தார். குர்ஆனின் மூலப்பிரதியிலும் இது போன்ற அடைப்புக்குறிகள் போடப்பட்டுள்ளது என்று அப்போது அவர் உளறியவுடனே, பீஜே அவர்கள் அதற்கும் ஆதாரத்தை மூலப்பிரதியிலிருந்து காட்ட வேண்டும் என்று கேட்கவிவாதத்தின் இறுதி வரை அவர்கள் அதற்கு ஆதாரம் தரவில்லை.

இது குறித்து கருத்துச் சொன்ன பீஜே ., இவர்கள் ஆதாரமில்லாமல் சொன்ன விஷயங்கள் பலவற்றிற்கு ஆதாரம் கேட்டோம். அவர்கள் இது வரை எந்த ஆதாரத்தையும் தரவில்லை. ஆனால் அடுத்த தலைப்பில் நாங்கள் இவ்வாறு விடமாட்டோம். குர்ஆன் குறித்த ஏதாவது ஒரு குற்றச்சாட்டை இவர்கள் சொல்வார்களேயானால், அதற்குரிய ஆதாரத்தை மூலப்பிரதியில் இருந்து காட்டினால்தான் அடுத்த அமர்வுக்குச் செல்வோம்; ஒப்பந்தத்தின் படி ஆதாரத்தை எடுத்து காட்ட வேண்டும் என்ற பீஜேயின் அறிவிப்பு அவர்களுக்குக் கலக்கத்திற்கு மேல் கலக்கத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில், இவர்கள் குர்ஆன் பற்றி சுமத்தக்கூடிய குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை இவர்களால் ஜோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களே. இது குறித்து நாம் ஆய்வு செய்த வகையில் அதை உறுதி செய்து கொண்டோம்.

இவர்கள் விவாதத்திலிருந்து எப்படியாவது தப்பியோடிவிட வேண்டும் என்பதற்கான அவசியத்தை பீஜேவின் இந்த அறிவிப்பும் அவர்களுக்கு ஏற்படுத்தியது.

கிறிஸ்தவ அறிஞர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நேரடி ஒளிபரப்பு :

நிலைமை இவ்வாறு இருக்க விவாதம் செய்யும் இரண்டு தரப்பினரும், தங்களது இனையதளங்களின் வாயிலாக பரஸ்பரம் பேசிக் கொண்ட அடிப்படையில் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய ஒப்புக்கொண்டு அவரவர் இணையதளத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மட்டும், ஆன்லைன் பீஜே, டிஎன்டிஜே டாட் நெட், தவ்ஹீத் வீடியோ , ஜீஸஸ் இன்வைட்ஸ் ஆகிய நான்கு தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதையும், ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் இந்த விவாதத்தை உலகம் முழுவதும் கண்டு களித்துள்ளனர் என்ற புள்ளி விபரத்தையும் கடந்த உணர்வு இதழில் தெரிவித்திருந்தோம். அது போல் அவர்களும் தமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

இவர்களுக்கு இது மிகப்பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியதும், உலகம் முழுவதுமுள்ள மக்கள் இவர்களையும், இவர்களது கொள்கையையும் புரிந்து கொள்ளும் நிலை உருவாவதற்கும், பைபிளின் புகழ்(?) உலகம் முழுவதும் பரவுவதற்கு இந்த நேரடி ஒளிபரப்பு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததும் இவர்களுக்கு பெருத்த மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இவர்கள் தப்பியோட வழிவகை தேட அடுத்த காரணியாக அமைந்தது.

கிறிஸ்தவ அறிஞர்களுக்கு பீதியை ஏற்படுத்திய விவாத முறை :

இவர்கள் ஆரம்பம் முதலே நம்மிடத்தில் விவாத அழைப்பு விடுத்ததிலிருந்து, விவாதம் ஒப்பந்தம் போட்டு முடிக்கும் வரைக்கும் ஒரே ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தனர்.

எந்த முறையில் விவாதம் நடத்துவது என்று பேசும் போது ஒவ்வொரு தலைப்பிலும் மொத்தம் விவாதம் செய்ய ஒதுக்கப்பட வேண்டிய நேரம் 3 மணி நேரம். 1 மணி நேரம் அவர்கள் ஒரு உரை நிகழ்த்துவார்களாம்; அடுத்து நாம் 1மணி நேரம் உரை நிகழ்த்த வேண்டுமாம்; அடுத்து இருவரும் அரை மணி நேரம், அரைமணி நேரம் உரை நிகழ்த்திவிட்டு விவாதத்தை முடித்துவிட வேண்டுமாம். இதுதான் உலகம் முழுவதும் விவாதம் செய்ய ஏற்றுக் கொண்டுள்ள நடைமுறை. எனவே நாமும் அதைப்போலத்தான் விவாதிக்க வேண்டும் என்று சொல்லி அடம்பிடித்தனர்.

உலகம் முழுவதும் ஒரு கிறுக்குத்தனத்தைச் செய்து வந்தால் நாமும் அந்த கிறுக்குத்தனத்தை ஏன் செய்ய வேண்டும்? விவாதம் என்பது 2 மணி நேரம் உரை நிகழ்த்திவிட்டு படம்காட்டிவிட்டு செல்வதற்கல்ல. சத்தியம் எது? அசத்தியம் எது? என்று மக்கள் உணர்ந்து கொள்வதற்காகத்தான் விவாதம். எனவே ஒரு தலைப்பிற்கு குறைந்தது மூன்று நாளிலிருந்து ஒரு வாரம் காலமாவது தேவை. அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றால் குறைந்தது இரண்டு நாளாவது விவாதம் நடைபெற வேண்டும்.

அந்த விவாத நேர இடைவெளி கூட தரப்புக்கு பத்து பத்து நிமிடங்கள் தான் இருக்க வேண்டும் என்றும், இதுதான் நாங்கள் பின்பற்றக்கூடிய முறை என்று கூற அரண்டு போன எதிர்தரப்பினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு நாட்கள் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டனர்.

விவாதம் என்றால் என்ன என்று பாடம் நடத்திக்காட்டிய டிஎன்டிஜே :

இவர்கள் நினைத்து வந்ததோ 1 மணி நேர உரை நிகழ்த்திவிட்டு ஓடிவிடலாம் என்று, தவ்ஹீத் ஜமாஅத்தோ இவர்களுக்கு விவாதம் என்றால் என்ன என்று பாடம் நடத்திக் காட்டியது.

கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களை தங்கள் வாழ்நாளிலே இவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அல்லாஹ்வின் பேருதவியால் அவர்கள் துவைக்கப்பட்டனர். அப்போதுதான் இவர்களுக்கு புரிந்திருக்கும் விவாதம் என்றால் இதுதானா? என்று.

காரணமென்னவெனில் இவர்கள் இதற்கு முன்பு நடத்திய விவாதமெல்லாம் ஒரு மணி நேரம் படம் காட்டும் விவாதங்களே!. இப்பொழுதுதான் தங்கள் வாழ்க்கையில் விவாதம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டனர்.

இப்படி அடிவாங்கிக் கொண்டு எத்தனை நாட்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடத்தில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதையும் அனுபவப்பூர்வமாக இவர்கள் உணர்ந்ததும் தப்பியோட வேண்டிய நிர்பந்தமான நிலைக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதற்கான அடுத்த காரணம்.

குர்ஆன் பற்றிய தலைப்பில் தலைதெறிக்க ஓட வேண்டிய அவசியம் என்ன? :

பைபிள் சம்பந்தமாக அத்துனை ஆபாசங்களையும், கேவலங்களையும் அள்ளிப்போட்ட பிறகும் அதைக் கேட்டுக் கொண்டு தாங்கிக்கொண்டு இருந்தவர்கள், குர்ஆன் பற்றிய தலைப்பிலிருந்து ஏன் தப்பியோட வேண்டும் என்ற கேள்விக்கான விடைகள்தான் மேலே நாம் சுட்டிக்காட்டியவை:

பைபிளில் உள்ள அசிங்களில் இன்னும் 600 சிலேடுகள் மிச்சமுள்ளன; அவைகளையும் இந்த தலைப்பில் அள்ளிப் போடுவோம் என்ற பீஜேயின் எச்சரிக்கை ஒருபுறம்
எந்த ஆதாரம் சொன்னாலும் அதற்கான மூலப்பிரதி ஆதாரம் கேட்போம் என்ற பீஜேயின் எச்சரிக்கை ஒருபுறம்
உலகம் முழுவதும் தலைக்குனிவை ஏற்படுத்தும் நேரடி ஒளிபரப்பு மறுபுறம்

கிடுக்கிப்பிடி போட்டு கேள்விகேட்டு அடித்தளத்தை ஆட்டம் காணவைக்கும் டிஎன்டிஜேயின் விவாத முறை மறுபுறம்
இவ்வளவையும் சகித்துக் கொண்டு எப்படி இவர்களோடு விவாதம் செய்வது? எனவே ஏதாவது காரணம் சொல்லி தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினால் மட்டுமே நம்முடைய கொள்கையை தக்க வைக்க முடியும். இல்லை என்றால் இவர்கள் நம்முடைய கொள்கைக்கு சமாதி கட்டி, இந்த வெத்துக்கோட்பாட்டை சிலுவையில் தொங்கவிட்டு விடுவார்கள் என்று பயந்த காரணத்தினால் தான் பின்வாங்கி ஓட்டமெடுத்துள்ளனர்.

ஓட்டமெடுப்பதற்கு கிடைத்த நம்பர் ஒன் நொண்டிச்சாக்கு :

எப்படியாவது தப்பியோடி விடலாம் என்று இவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கு ஒரு நொண்டிச்சாக்கு கிடைத்தது.

கிறுஸ்தவ மிஷனரிக்குச் சொந்தமான வித்யோதயா ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று இவர்களது அமைப்புக்கு மட்டும் போலீஸ் தரப்பு தடை போட்டுள்ளதாக ஒரு செய்தியை ஜனவரி 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை கூறினர்.

வித்யோதயா ஆடிட்டோரியம் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் சாக்‌ஷி ஆகிய இரு அமைப்புகள் பெயரிலும் தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மட்டும் எப்படி தடை உத்தரவு போட்டார்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த பரம ரகசியம். இது குறித்து காவல்துறை நமக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதே இவர்கள் உள்வேலை செய்துள்ளார்கள் என்பதற்குச் சரியான ஆதாரமாக உள்ளது.

இவர்கள் வெளியிட்ட போலீஸ் கமிஷனர் அலுவலக கடிதத்தில் உள்ள ஒரு வாசகம் கவனிக்கத் தக்கது.

கிறிஸ்தவர்களும், இந்துக்களும் டி.என்.டி,ஜே தவிர மற்ற முஸ்லிம்களும் இதை நடத்தக் கூடாது என்று கோரிக்கை வைத்ததாக அந்த கடிதத்தில் உள்ளது. சான் அமைப்பைத் தவிர மற்ற கிறிஸ்த்தவர்கள் இப்படி கேட்டுக் கொண்டதாக கமிஷனர் கடிதம் சொல்லவில்லை. இதில் இருந்து கோரிக்கை வைத்த கிறிஸ்தவர்களில் இவர்களும் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஆட்சேபனை செய்தாலும் அதில் டிஎன்டிஜே இருக்கவில்லை என்றும் கமிஷனர் கடிதம் கூறுகிறது.

இதன் பின்னர் நம்மை அவர்கள் தொடர்பு கொண்டு விவாதம் தடை செய்யப்பட்ட தகவலைச் சொன்னார்கள். வித்யோதையா அரங்கத்தில் தடை செய்யப்பட்டால் கவலை இல்லை. திட்டமிட்டபடி விவாதம் நடக்க வேண்டும். எனவே எங்கள் தலைமை அலுவலகத்தில் இதை நடத்திக் கொள்வோம் என்று நாம் தொலைபேசியில் தெரிவித்தோம்.
பார்வையாளர்களை மட்டும் ஒரு தரப்புக்கு 25 பேர் எனக் குறைத்துக் கொள்வோம் என்றும் நாம் கூறினோம்.
இதை ஏற்றுக் கொண்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள். அத்துடன் டி.என்.டி.ஜே தலைமை அலுவலகத்தில் நடத்திட எழுத்துமூலம் அழைப்பு தருமாறு அதில் குறிப்பிட்டனர்.

இது வெள்ளிக்கிழமை இரவு 7.46 க்கு அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல்

 

கருத்தாக்கம்- TNTJ வினருக்கு துணை ஆணையாளர் விவாதத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து உங்கள் மாநிலத் தலைமையில் 25 பார்வையாளர்கள் அனுமதியுடன் விவாதம் நடத்தலாம் என தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தீர்கள் அதை அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் மூலமாக அழைப்பு விடுமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றோம்.

அதன்படி 09.01 மணிக்கு நாம் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு கொடுத்து கீழ்க் கண்ட அழைப்பையும் அனுப்பினோம். எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் உரிய பாதுகாப்புடன் இதை நடத்துவோம் என்று உறுதி மொழியும் அளித்தோம்.

நாம் 9.01 க்கு அனுப்பிய மின்னஞ்சல்

இடத்தையும், பார்வையாளர்கள் எண்ணிக்கையும் தவிர மற்ற அனைத்தும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்கும் என்றும் நாம் மெயில் அனுப்பியவுடன் வெள்ளிக்கிழமை இரவு 9.07க்கு மணிக்கு தலைமையகத்தில் வைத்து விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்தனர்.

நமது அதிகாரப்பூர்வ அழைப்பை தொடர்ந்து இரவு 9.07 க்கு அவர்கள் அனுப்பிய மெயில்

 

கருத்தாக்கம் – TNTJ நண்பர்களுக்கு உங்கள் அலுவலகத்தில் வைத்து விவாதம் நடத்த எங்களை அழைத்ததற்கு மிக்க நன்றி உங்கள் அலுவலகத்தில் நடைபெறும் விவாத்திற்கு நாங்கள் வருவோம் என உறுதி அளிக்கின்றோம்.

இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு நாங்கள் உறங்கச் சென்ற பின்னர் நள்ளிரவில் 12.40 மணிக்கு ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார்கள். அதில் நேரடி ஒளிபரப்பை தவிர்ப்பது நல்லது என்ற கருத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். அதை நிபந்தனையாக சொல்லவில்லை. இந்த மெயிலை நாங்கள் காலையில் தான் பார்த்தோம்.

நள்ளிரவு 12.40 க்கு அவர்கள் அனுப்பிய மெயில்

கருத்தாக்கம் – TNTJ விற்கு காவல் துறை துணை ஆணையாளர் உத்தரவிற்கு இனங்க தாங்கள் நாளை விவாத நிகழ்ச்சியில் நேரடி இணையதள ஒளிரப்பை வைத்துக் கொள்ள வேண்டாம்.

இணையதள ஒளிபரப்பு இருந்தால் நாங்கள் விவாத்திற்கு வர மாட்டோம் என சனிக்கிழமை 28-1-2012 காலை 7.30 க்கு மணிக்கு அவர்கள் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து

8.47 க்கு அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல்

 

கருத்தாக்கம்: இணையதள ஒளிபரப்பை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டால் நாங்கள் விவாத்திற்கு வரத் தயார்.

உடனே நேரடி ஒளிபரப்பைத் தவிர்க்க மாட்டோம் அதனால ஒரு பிரச்சனையும் வராது. வந்தால் அதை நாங்கள் சுமந்து கொள்கிறோம் என்று மறுத்து

நாம் அனுப்பிய மின்னஞ்சல்

இதன் பின்னார் விவாதம் நடப்பதற்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது தான் நேரடி ஒளிபரப்பை நிறுத்துவதாக சொன்னால் தான் நாங்கள் வருவோம் என்று மின்னஞ்சல் அனுப்பினார்கள். இது தான் நடந்த உண்மை.

இணையதள நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்ற துணை ஆணையாளர் உத்தரவிடவில்லை. என்று

அவர்களே ஒப்புக் கொண்டு 9:19 க்கு அனுப்பிய மின்னஞ்சல்

விவாதத்திற்கு வர வேண்டியது உங்கள் மீது கடமை எனக்கூறி நாம் 9:46 க்குஅனுப்பிய மின்னஞ்சல்

அப்பட்டமான பொய்கள்:

தலைமையகத்தில் வைத்து விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்து இரவு 9.07 மணிக்கு இவர்கள் மின்னஞ்சல் அனுப்பிய போது, நேரடி ஒளிபரப்பு சம்பந்தமாக எதுவும் அவர்கள் பேசவில்லை. ஆனால் இதுகுறித்து ஜெர்ரிதாமஸ் அவர்கள் “நாங்கள் ஏன் விவாதத்திலிருந்து பின்வாங்கினோம்?””’“ என்று விளக்கமளித்து நேரடி ஒளிபரப்பு செய்த போது புளுகிய அண்டப்புளுகுகளின் பட்டியல்:

புளுகள் 1 :
விவாதத்தின் போது நேரடி ஒளிபரப்பை ரத்து செய்தால்தான் விவாதத்திற்கு நாங்கள் வருவோம் என்ற நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் தலைமையகத்தில் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டோம் என்று அப்பட்டமாக புளுகித் தள்ளியுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவில் நம்முடைய தலைமையகத்தில் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டார்கள் விவாதம் நடப்பதற்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது தான் அர்த்தமற்ற நிபந்தனையை விதித்தார்கள்.

புளுகள் 2 :
அதுமட்டுமல்லாமல் விவாதம் தொடங்குவதற்கு முன்னரே கிறிஸ்தவ தரப்பில் 25 பார்வையாளர்கள் தலைமையகத்திற்கு வந்துவிட்டார்கள் என்றும் தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யை ஜெர்ரி அவிழ்த்துவிட்டுள்ளார்.
நம்முடைய தலைமையகத்தில் 16 இடங்களில் கண்கானிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. சனிக்கிழமை காலையில் இருந்து விவாதம் துவங்கும் வரை உள்ள பதிவுகளைக் காட்டி இவர்கள் தரப்பில் ஒருவரும் வரவில்லை என்று நிரூபிக்க நாம் தயாராக இருக்கிறோம்
.
புளுகள் 3:
அதோடுமட்டுமல்லாமல், ஜெர்ரி தனது விளக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று துணை ஆணையருடைய உத்தரவில் தெளிவாக உள்ளது என்று கூறி மக்களை முட்டாளாக்க முயற்சித்துள்ளார்.
துணை ஆணையருடைய உத்தரவில் டிவி சேனல்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று உள்ளதைத் தான் தனக்கு ஏதுவாக மாற்றி புளுகியுள்ளார்.

விரட்டிச்சென்ற தவ்ஹீத் ஜமாஅத் :

இரவு விவாதத்திற்குரிய அனைத்து முன் ஏற்பாடுகளும் நமது மாநிலத் தலைமையகத்தில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

எப்படியாவது போலீஸ் பெயரைச் சொல்லி தப்பி விடலாம் என்று ஐடியா பண்ணினால் அவர்களது தலைமையகத்திலேயே வைத்து நடத்தலாம் என்று சொல்லி விட்டார்களே! இனிமேலும் எப்படி தப்பியோடுவது என்று ஆலோசித்து அடுத்த கட்டநடவடிக்கையாக நள்ளிரவு 12.40க்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்கள்.

டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று சொன்ன விஷயத்தை, இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று இவர்களாக திரித்து கள்ளத்தனம் செய்துள்ளனர் என்பது பிறகு நமக்கு தெரியவந்தது.

சட்டம் ஒழுங்கை ரொம்ப(?) மதிப்பவர்களாம்:

எப்படியாவது தப்பியோடி மானத்தையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மானத்தையும் விவாதம் செய்கின்றோம் என்ற பெயரில் இழந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்த அந்தக்கூட்டம் நேரடி ஒளிபரப்பை நிறுத்தினால்தான் வருவோம் என்று அடம்பிடித்தனர்.

நேரில் வாருங்கள்; நாம் தலைமையகத்தில் அமர்ந்து ஆலோசனை செய்து கொள்வோம் என்று நாம் அழைத்தும், எங்கே அங்கு போனால் அப்படியே கோழியை அமுக்குவது போல அமுக்கி விவாத களத்தில் உட்கார வைத்து விடுவார்களோ என்ற பயத்திலும், நடுக்கத்திலும், தலைமையகத்திற்கு வரவும் மறுத்துவிட்டனர்.
விவாத ஒப்பந்தம் செய்வதற்காக பல முறை அவர்கள் நம்முடைய அலுவலகம் வந்தனர். நாம் எவ்வளவு கண்ணியமாக அவர்களை நடத்தினோம் என்பது அவர்களுக்கே தெரியும்.

உச்சகட்ட காமெடி :

கிறிஸ்தவர்கள் சட்டம் ஒழுங்கை மதிக்கக் கூடியவர்கள். எனவே தான் துணை ஆணையாளருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று டிஎன்டிஜேவினரை கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. எனவே தான் சட்ட ஒழுங்கை மீறக்கூடாது என்பதற்காக விவாததிலிருந்து பின்வாங்கி விட்டோம் என்று பொய்க் காரணத்தை கூறியுள்ளதுதான் உச்சகட்ட காமெடி.

இவர்கள் சட்ட ஒழுங்கை மதிப்பவர்களாக இருந்தால், துணை ஆணையாளருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக இருந்தால் வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று துணை ஆணையாளருடைய உத்தரவு நகல் இவர்களது கையில் கொடுக்கப்பட்டவுடனே இவர்கள் நிகழ்ச்சிக்கு வரமாட்டோம் என்று சொல்லியிருக்க வேண்டும்.

பைபிள் பாணியில் உதாரணம் :
நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்ற போலீஸ் துறையின் உத்தரவை மீறுவார்களாம்; போலீஸ் போடாத உத்தரவான இணையதள நேரடி ஒளிபரப்பு விஷயத்தில் போலீஸுக்குக் கட்டுப்படுவார்களாம். பைபிளைப் போலவே இவர்களது பேச்சும் செயலும் முரண்பாடாகவும், உளறலாகவும் உள்ளது. தாங்கள் பைபிளை பின்பற்றக்கூடியவர்கள் எனபதை இப்படியும் இவர்கள் நிரூபித்து விட்டனர்.

ஒரு வழியாக ஏதோ ஒரு நொண்டிச்சாக்கைச் சொல்லி பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டமெடுத்த கூட்டம் தங்களது இணையதளத்தில் உட்கார்ந்து கொண்டு நேரலை நிகழ்ச்சி நடத்தி குர்ஆனை விமர்சித்து பேசியதுதான் இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதற்குப் பலமான ஆதாரம்.

விவாதம் நடத்துவதாக நம்மிடம் ஒப்புக்கொண்டு போலீஸ் உத்தரவை மீறி சட்டம் ஒழுங்கை(?) நிலைநாட்டியது ஒருபுறம் அவர்களது இணையதளத்தில் உட்கார்ந்து கொண்டு திருக்குர்ஆனை விமர்சித்து நேரலை நிகழ்ச்சி நடத்தி இவர்கள் எந்த நொண்டிச்சாக்கைக் கூறினார்களோ அதை அவர்களே மீறி தங்களைப் பொய்யர்கள் என்று நிரூபித்தது மறுபுறம் அல்லாஹ் இவர்களது நயவஞ்சகத்தனத்தை இவர்களை வைத்தே நிரூபித்து விட்டான்.

திருக்குர்ஆன் இறைவேதமே!:

அவர்கள் வராமல் ஓடிவிட்டாலும் பரவாயில்லை; இணையதளத்தில் உலகம் முழுவதும் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருந்த நேயர்களுக்கும், விவாதத்தைக் காண பல நூறு கிலோ மீட்டர்களைக் கடந்து வந்திருந்த பார்வையாளர்களுக்கும், இந்த உலகத்திற்கும் இது குறித்த ஆதாரங்களை எடுத்து வைப்பது நாம் கடமை என்பதால் தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளைக் கொண்டு நிரூபித்தனர்.

மேலும், இந்த அரைவேக்காடுகள் கேட்ட மற்றும் கேட்கக்கூடிய கேள்விகளைப் பட்டியல் போட்டு அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பீஜே அவர்கள் வரிக்குவரி அவற்றிற்குப் பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சி நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பது மீண்டும் நிரூபணமானது.

எஸ்கேப்….. எஸ்கேப்…. எஸ்கேப்….

ஆக மொத்த்த்தில் பைபிளின் ஆபாசங்களையும், கேவலங்களையும், முரண்பாடுகளையும், உளறல்களையும், பொய்களையும் கேட்டுவிட்டு கடந்த விவாதத்தில் அவர்கள் தரப்பு பார்வையாளர்களாக வந்தவர்களில் 85 பார்வையாளர்கள் எஸ்கேப். ஆனால் தற்போது விவாதம் செய்ய வந்த மதபோதகர்களே எஸ்கேப் ஆகிவிட்டனர் என்றால் இதுவே சொல்கின்றது. பைபிள் இறைவேதமல்ல என்று.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும் பாதிரி களையும் மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளை யிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.

அல்குர்ஆன் 9:31,32
 

Download Video

January 30, 2012, 5:10 PM

S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு

S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்ட்து.

இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து நட்த்தி வந்த்து.

இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடாணை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டனர். இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பின்னர் வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்துச் செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலைத் திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார். இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிவாசல் திறக்கப்பட உள்ளது. இன்ஷா அல்லாஹ். காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர்.

மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று பள்ளிவாசலில் பொது அறிவிப்பு செய்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கடைப்பிடித்துக் காட்டிய முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஆர்ப்பாட்டமோ அமர்க்களமோ இல்லாமல் திறப்பு விழா என்ற பெயரில் அதிக மக்களைக் கூட்டி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியான முறையில் இன்ஷா அல்லாஹ் திறக்கப்பட உள்ளது.

அனைவரும் துஆ செய்யுங்கள். இதற்காக ஆர்வத்துடன் வெளியூர் மக்கள் குழும வேண்டாம் எனபதற்காக கடைசி நேரத்தில் இச்செய்தி வெளியிடப்படுகிறது.

நல்ல படியாக பிரச்சனை ஏதுமில்லாமல் பள்ளிவாசல் திறக்கப்பட்டு இறைப்பணி நடக்க வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக் கொள்கிறோம்.





வட்டாட்சியர் ஆணை

April 9, 2012, 10:49 PM

விவாதம் உறுதி செய்யப்பட்டது!

திருக்குர்-ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் ஏப்ரல் 28, 29 சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

விவாதத்திலிருந்து தப்பி நழுவி ஓடுவதற்காக அவர்கள் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற பொருந்தாக்காரணத்தை கூறி வந்தனர்.

அவர்களை தப்பி ஓடவிட்டுவிடக்கூடாது என்பதற்காக நாம் இறங்கி வந்து, நேரடி ஒளிபரப்பு இல்லாமலேயே விவாதம் செய்ய நிர்பந்தித்து அவர்கள் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனவே, நேரடி ஒளிபரப்பும், விளம்பரமும் இல்லாமல் தரப்புக்கு 25 பார்வையாளர்களைக் கொண்டு இவ்விவாதம் நடைபெற உள்ளது.

விவாதம் முடிந்த பிறகு தாமதமின்றி முழு விவாத வீடியோக்கள் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்

April 13, 2012, 6:42 PM

“திருக்குர்-ஆன் இறைவேதமே!” நிரூபித்த

“திருக்குர்-ஆன் இறைவேதமே!”

- அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.

அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் “திருக்குர்ஆன் இறைவேதமே!”

என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.

கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக சான் தரப்பினர் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நம்முடன் இந்தத் தலைப்பில் விவாதிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, விவாதத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு 1.40க்கு விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாங்கள் வரமாட்டோம் என்று கூறி விவாதத்திலிருந்து நழுவி ஓடினர். விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று நாம் ஒப்புக் கொண்டால் தான் விவாதத்திற்கு வருவோம் என்று விடாப்பிடியாக அவர்கள் இருந்ததால், இவர்களுடன் இந்தத் தலைப்பில் விவாதித்தே ஆக வேண்டும். இவர்களை விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற அவர்களது நிபந்தனையையும் ஏற்று இந்த விவாதத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

ஆரம்பமே அதிர்ச்சி:

ஜனவரி 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்ற “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் அவர்களுக்கு நாம் வைத்த அந்த விஷப்பரீட்சை அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இதுவரை இன்னும் மீளவில்லை என்பது இந்த வாதத்திலும் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

சென்ற வாதத்தில், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் “பைபிள் இறைவேதம் தான்” என்பதற்கு ஒரு சான்றைக்கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக நாம் பைபிளிலிருந்து காட்டிய ஆபாசங்களுக்கும், கேவலங்களுக்கும், உளறல்களுக்கும் விளக்கம் சொல்ல முடியாமல் திணறிப்போய் பைபிளைப் போலவே தாங்களும் உளற ஆரம்பித்தனர்.

ஆனால், “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற இந்தத் தலைப்பில், இந்த வேதம் படைத்த இறைவனிடத்திலிருந்துதான் வந்தது என்பதையும், இது அவனுடைய வேதம் தான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் அடுக்கடுக்கான சான்றுகள் எடுத்து வைக்கப்பட்டன.

எதிர்த்தரப்பினரை ஆட்டம் காண வைத்த அடுக்கடுக்கான சான்றுகள் :

- இது போன்றதொரு குர்ஆனை கொண்டு வரமுடியுமா? என்ற திருக்குர்ஆனின் அறைகூவல்

- குறைந்த வார்த்தையில் அதிகப் பொருள் தரக்கூடிய திருமறையின் நடை

- சிந்தித்துப் பார்க்கச் சொல்லி சிந்தனையைத் தூண்டக்கூடிய வான்மறையின் வழிகாட்டல்

- எளியநடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள திருக்குர்ஆனின் நடை

- முஹம்மது நபிக்கு இந்த வேதத்தில் பங்கு இல்லை என்ற தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு

- தீமையைத் தூண்டாத தெளிவான வழிகாட்டுதல்கள்

- இறைவனது இலக்கணக்கங்களைத் தெளிவுபடுத்தும் வேதம்

என்று தர்க்க ரீதியாக “இது இறைவனுடைய வேதம் தான்” என்பதை நிரூபிக்கும் வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிசயிக்க வைத்த அறிவியல் சான்றுகள் :

1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட இந்த வேதத்தில், எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வேதத்தில், இந்த நூற்றாண்டு மனுதனுக்குக்கூட தெரியாத எண்ணற்ற அறிவியல் சான்றுகள் உள்ளனவே? இது எப்படி முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதனுக்குத் தெரியும்? படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியக்கூடிய பற்பல அறிவியல் உண்மைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இது படைத்த இறைவனிடம் இருந்துதான் வந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது என்று கூறி அடுக்கடுக்கான அறிவியல் சான்றுகள் அள்ளிவைக்கப்பட்டன.

காட்டப்பட்ட அறிவியல் சான்றுகளில் சில:

- வேதனையை உணரும் நரம்புகள் மனிதனது தோல்களில் தான் உள்ளன

- தேனியின் வயிற்றிலிருந்து தான் தேன் உருவாகின்றது என்ற அதிசயம்

- மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம் என்ற அறிவியல் உண்மை

- மனிதனது மூளையில் முன்னெற்றி பாகம் தான் பொய் சொல்லத் தூண்டுகின்றது என்பதற்கான சான்று

- கால்நடைகளில் பால் உற்பத்தியைப் பற்றி குர்ஆன் தத்ரூபமாக விளக்கும் அதிசயம்

- மலையின் உச்சி அளவுக்கு மனிதன் பூமிக்கு அடியில் போக முடியாது என்று திருக்குர்ஆன் விடுக்கும் சவால்

- விந்து வெளியேறும் இடத்தை விவரிக்கும் திருமறையின் அற்புதம்

- பூமியைக் கடந்து செல்ல முடியும்; அதற்கு ஆற்றல் தேவை என்ற திருமறையின் வழிகாட்டல்

- விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்று சொல்லும் திருமறையின் அதிசயம்

- குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஆண் தான் தீர்மானிக்கின்றான் என்ற அறிவியல் உண்மை

- திருக்குர்ஆன் விவரிக்கும் பெருவெடிப்புக் கொள்கை

- இரும்பு விண்ணிலிருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம்

இப்படி அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை நாம் அள்ளிப்போட்டவுடன் செய்வதறியாது திகைத்த கிறித்தவ போதகர்கள் ஏதேதோ சொல்லி சமாளித்துப் பார்த்தனர். முடியவில்லை.

தங்களை அறியாமல் ஒப்புக் கொண்ட எதிர்த்தரப்பினர் :

இறுதியில் இவைகளை மறுக்க வழியில்லாமல், விஞ்ஞான உண்மைகள் இருந்தால் அது இறைவனுடைய வேதமாக ஆகிவிடுமா? என்று அறிவுஜீவிகளைப் போல கேள்வி கேட்டனர். மேலும், மேற்கண்ட அறிவியல் உண்மைகளையெல்லாம் முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். வேறு ஏதோ ஒரு சக்திதான் அவருக்கு இதைச் சொல்லிக் கொடுத்துள்ளது. அது கெட்ட ஆவியாகத்தான் இருக்கும் என்று உளற ஆரம்பித்து விட்டனர்.

அப்படியானால், கெட்ட ஆவிக்கு எப்படி இவ்வளவு அறிவியல் உண்மைகளும் தெரியும்? என்று நாம் கேட்க அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.

கடவுளை மகிமைப்படுத்துவது கடவுளுடைய வேதமா?

அவரைக் கேவலப்படுத்துவது கடவுளுடைய வேதமா? :

மேலும், இறைவனுடைய வேதம் என்றால் அதைப் படித்தாலே இது கடவுளிடத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். திருமறைக்குர்ஆன் அவ்வாறுதான் உள்ளது. இந்த அற்புத வேதத்தில்,

- உளறல் இல்லை

- முரண்பாடுகள் இல்லை

- ஆபாசங்கள் இல்லை

- அசிங்கங்கள் இல்லை

- தரங்கெட்ட வார்த்தைகள் இல்லை

- அருவறுப்பு இல்லை

- இறைவனைக் கேவலப்படுத்துதல் இல்லை

- கேவலமான சட்டங்கள் இல்லை

- பொய்கள் இல்லை

என்று மேற்கண்ட செய்திகளை நிறுவியதுடன் கிறித்தவ போதகர்களுக்கு உரைக்கும் வண்ணமும், ஏற்கனவே அவர்கள் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் திருக்குர்ஆனை இழுத்ததன் காரணமாகவும் மேற்கூறிய அத்தனை அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படும் பைபிள் எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு கீழ்க்கண்ட கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

1. யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா?

2. தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் என்ற கேவலத்தை சட்டமாக பைபிள் சொல்லலாமா?

3. உடலுறவு கொண்ட பின்பு தனது மனைவி கன்னிதானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி பைபிள் சொல்லும் சட்டம் சரிதானா?

4. அடிமைப்பெண்களுடன் உடலுறவு வைக்கலாம் என்று அல்லாஹ் கூறும் சட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் உங்களது வேதத்தில் அண்ணன் பொண்டாட்டியை தம்பி அனுபவிக்கலாம் என்று எழுதி வைத்துள்ளீர்களே இது நியாயமா?

5. உங்களது பைபிளில் புருஷசம்யோகத்தை அறியாத இளசுகளாகப் பார்த்து உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது சரியா?

6. ஒருவன் செய்த தவறுக்காக அவன் பொண்டாட்டியை அடுத்தவன் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி சாபம் போடும் கர்த்தரின் சாபம் சரிதானா?

7. ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லி அநீதியிழைக்கும் கர்த்தரின் சட்டம் சரியா?

8. இறந்த சிங்கத்தின் உடலுக்குள் தேனீ கூடுகட்டுவதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே! இது நடக்குமா?

9. இராஜாக்களின் முலைப்பாலை குடிக்கச் சொல்லி பைபிள் போடும் கட்டளையை எப்படி நிறைவேற்றுவீர்கள்?

10. சிம்சோன் என்ற நல்லவர்(?) செய்த சில்மிஷங்களின் பட்டியல்களுக்கு பதில் என்ன?

11. ஒரு வயது போன தாத்தாவை வளைத்துப் போட தனது மருமகளுக்கு வழிகாட்டிய மாமியாரின் மன்மத லீலைகளுக்கு பதில் என்ன?

12. வீட்டுக்கு குஷ்டரோகம், ஆடைக்கு குஷ்டரோகம் என்று பைபிள் சொல்லும் அதிசய குஷ்டரோகத்திற்கு உங்களது பதில் என்ன?

13. மாதவிடாய்ப் பெண்களைத் தொட்டால் தீட்டு, அவள் உட்கார்ந்த இடத்தைத் தொட்டால் தீட்டு, தொட்டவனைத் தொட்டால் தீட்டு என்று கொடுமையான சட்டத்தை பைபிள் சொல்லக் காரணம் என்ன?

14. சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி பெண்ணுரிமையை(?) பைபிள் பேணக்கூடிய லட்சணம் என்ன?

15. ஸ்தீரியிடத்தில் பிறந்தவன் சுத்தமாவதில்லை என்ற பைபிள் கூற்றுப்படி ஏசு அசுத்தமானவரா?

16. விருத்தசேதனம் செய்யாதவன் ஜெருசலத்திற்குள் வரமாட்டான் என்று பைபிள் சொல்லும் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதே!

17. சிரங்கு வந்த மொட்டைத்தலையனோ அரை மொட்டையனோ தீட்டு, தீட்டு என்று கத்தினால் சொறி, சிரங்கு போய்விடும் என்று பைபிள் சொல்லும் அற்புதச் சட்டத்தின் விளக்கம் என்ன?

18. பைபிளில் சொல்லிக் காட்டியுள்ளபடி கர்த்தர் அம்மணமாகத்தான் ஓடுவாரா?

19. பைபிளில் சொல்வது போல கர்த்தர் ஆந்தையைப் போல அலறி, நரியைப் போல ஊளையிடுவாரா?

20. கர்த்தர் மனஸ்தாபப்பட்டு இளைத்துப் போவாரா?

21. நான் ஒரு லூசு என்று பவுல் பைபிளில் தன்னைப்பற்றி சுய அறிமுகம் செய்கிறாரே! அந்த பைத்தியம் எழுதி வைத்தவை எப்படி வேதமாக முடியும்?

22. இது எனது அபிப்பிராயம் என்று பவுல் சொல்லுவதெல்லாம் வேதமா?

23. நான் விசாரித்து அறிந்ததை சொல்லுகின்றேன் என்று லூக்கா சொல்லுவது உங்களுக்கு வேதமா?

24. ஏசுவுக்கு முத்தம் கொடுத்து அதுவும் ஓயாது முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்து காலில் தைலம் பூசிவிட்டாளே! அந்தப் பெண்ணை ஏசு தடுக்காமல் காலைக் காட்டிக் கொண்டிருந்ததேன்?

25. விதவையையும், விவாகரத்தான பெண்ணையும் திருமணம் முடிக்கக்கூடாது என்பதுதான் கர்த்தர் சொல்லும் அற்புதச் சட்டமா?

26. ஓணான் என்பவன் தனது விந்தை தனது அண்ணன் பொண்டாட்டியோடு உடலுறவு கொள்ளும் போது தரையில் விட்டதற்காக அவனை தண்டித்த கர்த்தர், அவளோடு விபச்சாரம் செய்ததைக் கண்டிக்காதது ஏன்?

27. ஏசுவை கெட்ட நட்த்தை உள்ளவர் என்று பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்ட கிங் ஜேம்ஸ் என்ற மன்னர் சொல்லியுள்ளாரே! அதுக்கு உங்கள் பதில் என்ன?

28. திருக்குர்ஆன் மறுமையில் கிடைக்கும் பேறுகளைக் குறிப்பிட்டு சொல்லும் வசனங்களைக் கொச்சையாகச் சொல்லுகின்றீர்களே, ஒரு மனைவியை விட்டவனுக்கு அது போல நூறு மனைவி கிடைக்கும் என்று சொல்லித்தானே ஏசு உங்களையும் ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார். உங்களுக்கு மட்டும் அது நியாயமா?

29. ஒருவனை சபிக்கின்றோம் என்ற பெயரில் கூறுகெட்டதனமாக கர்த்தர் சபிப்பதாக பைபிளில் உள்ளதே! அது சரியா?

30. கடவுளைத் துதிப்பதாக வரும் இடங்களில் கூட மச்சங்களே! ஆழங்களே! கிழவிகளே! குமரிகளே! பெரியோர்களே! தாய்மார்களே! என்ற ரீதியில் பைபிள் வழ வழா என்று பேசுகின்றதே! இதுதான் இறைவேதமா?

இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் கேட்க, ஆடிப்போன சான் தரப்பினர் திருக்குர்ஆனுக்கு முன்னால் சரண்டர் ஆகிவிட்டனர்.

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை :

மேற்கண்ட பழமொழி இவர்களுக்கு கனகச்சிதமாக பொருந்திப்போகும். காரணமென்னவென்றால், முதலில் திருக்குர்ஆன் அனைத்து விஷயத்திற்கும் தீர்வு சொல்லும் வேதம் என்கின்றீர்களே! அப்படியானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் குறித்து முழுமையாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? என்ற ரீதியில் தான் முக்கால் வாசி கேள்விகளை எழுப்பினர்.

அதற்குரிய விளக்கமும் குர்ஆனிலேயே உள்ளது. நபியவர்கள் வசனங்களை ஓதிக்காட்டிய பிறகு, தான் ஓதிக்காட்டிய வசனங்களுக்கு விளக்கம் சொல்லுவதற்காகத்தான் அல்லாஹ் தனது நபியை அனுப்பியதாக கூறுகின்றான். அவர்களது விளக்கத்தில் இதற்கான விபரங்கள் உள்ளன என்று பீஜே சொல்லச் சொல்ல திரும்பத் திரும்ப கேட்ட அதே கேள்வியையே சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல ஜெர்ரி தாமஸ் கேட்டுக் கொண்டே இருந்தது மிகவும் கேலிக்குரியதாக இருந்தது.

குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு அவர்கள் வைத்த வாதங்கள் சிறுபிள்ளைத்தனமாக அமைந்திருந்தன.

குர்ஆனில் எழுத்துக்கள் மாறியுள்ளனவே! அவைகளை ஒரு சில நபித்தோழர்கள் மாற்றி ஓதியுள்ளனரே! என்று பெரிய பட்டியல் வாசிக்க, அவை எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனெனில் அவை ஓரிருவர் அறிவிக்கக்கூடிய செய்திகள்; திருக்குர்ஆன் என்பது கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படும் என்று இறைவன் சொல்லியுள்ளான். தற்போது கோடிக்கணக்கான மக்கள் மனனம் செய்து வைத்துள்ள மூலப்பிரதிகளுக்கு மாற்றமாக உள்ள இந்தச் செய்திகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர்.

விவாதத் துளிகள் :

- விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு ஒளிபரப்பு செய்தால் நாங்கள் விவாதிக்க வரமாட்டோம் என்றும் சொல்லி அதை ஒரு நிபந்தனையாக்கியதால், இணையதளத்தில் நாம் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை

- ஆனால், தமிழகம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாநிலத் தலைமையகத்தை தொடர்பு கொண்ட நமது சகோதரர்கள் ஆவலோடு அவ்வப்போது விவாதத்தின் நிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.

- உலகத்தின் பல பகுதிகளிலிருந்துமுள்ள நமது சாகோதரர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்க விவாதம் முடிந்த மறுநாள், 30.04.12 திங்கள் மற்றும் 01.05.12 செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள், “ஆன்லைன் பீஜே” இணையதளத்தில் விவாதத்தை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

- இதற்கு பிறகு தான், பல நாடுகளிலிருந்துமுள்ள இணையதள நேயர்களின் அன்புத் தொல்லை கொஞ்சம் குறைந்தது.

- பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத டிவிடிக்களில் ஒளிப்பதிவு செய்யும் போது நாம் எந்தக் கூடுதல் குறைவும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரேமிலும் நேரத்தை குறிப்பிட்டு ஒளிப்பதிவு செய்திருந்தோம்.

- ஆனால், ஒப்பந்தத்திலும் இவ்வாறு தான் நேரத்தோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கும் நிலையில் சான் தரப்பினர் தங்களது இணையதளத்தில் யூ ட்யூப் இல் வெளியிட்ட வீடியோவில் நேரம் பதிவு செய்யப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி இந்த விவாதத்திலாவது ஒப்பந்த அடிப்படையில் நேரப்பதிவோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.

- நமது தலைமையகத்தில் இந்த விவாதம் நடைபெற்றதால் நம் இடத்திற்கு வருகை தந்திருந்த கிறித்தவ தரப்பு விவாதக் குழுவினர், நல்ல முறையில் நாம் உபசரித்ததற்காக நமக்கு விவாத இறுதியில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

- விவாதத்தில் ஒரு நபரை அழைத்து வந்திருந்தனர். அவர் திருக்குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதிக் காட்டினார். அதற்காகவே அவரைத் தேடிப்பிடித்து அழைத்து வந்திருந்தனர் போலும். அவர் குர்ஆன் வசனங்களையும் அரபி உச்சரிப்புகளையும் கொலை செய்தார்

- அவரை வைத்து ஒரு சில பைபிள் வசனங்களை அரபியில் வாசித்துக் காட்டிவிட்டு திருக்குர்ஆனைப் போல நாங்களும் கொண்டு வந்து விட்டோம் என்று ஜெர்ரி அவர்கள் காமெடி பண்ண, அதற்கு பீஜே இவர் அரபியில் வாசித்த லட்சணத்தை அரபி படித்தவர்களிடம் போய்க் கேளுங்கள். இவரைக்கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தான் சேர்க்கச் சொல்லுவார்கள் என்று சொல்ல சபையில் ஒரே சிரிப்பலை.

- விவாதம் செய்யும் போது எதிர்த்தரப்பில் விவாதித்த ஒரு நபர் கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக தண்ணியடித்துவிட்டு வந்து உளறும் மனிதரைப்போல பேசிக் கொண்டு எழுந்து நின்று வரம்பு மீறினார். இது போன்ற போதையில் உளறும் ஆட்களையெல்லாம் இனிமேல் விவாதிக்க அழைத்து வரவேண்டாம் என்று பீஜே சொல்ல, ஜெர்ரியும் சபையிலேயே அந்த போதை பார்ட்டியைக் கண்டித்தார்.

- கிறுக்குத்தனமாகவும்,ஏட்டிக்குப் போட்டியாகவும் குர்ஆன் வசனங்களைக்காட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் பீஜே அவர்கள் ஒவ்வொரு குர்ஆன் வசனங்களாக மேற்கோள்காட்டியும், லாஜிக்காகவும், பைபிள் வசனங்களை இணைத்தும் சொன்ன பதில்கள் ஆக்கப்பூர்வமாகவும், அறிவிப்பூர்வமாகவும் இருந்தன.

- கர்த்தர் தொடைக்குள் கையை விட்டு யாக்கோபின் மர்ம உறுப்பைத்தான் பிடித்தார் என்று கலீல் ரசூல் சொல்ல, அதற்கு ஆதாரம் கேட்ட எதிர்தரப்பினருக்கு கிரேக்க மொழியில் ஆணுறுப்பைத்தான் கர்த்தர் பிடித்தார் என்று வரும் ஆதாரத்தை எடுத்துக்காட்டியவுடன் கேட்டவர் கப்சிப்.

- தேனீக்கள் பூக்களில் உண்பதோடு மட்டுமல்லாமல், கனிகளிலும் உண்கின்றது என்று சொல்லும் குர்ஆன் வசனம் பொய் என்று ஜெர்ரி சொல்ல மறு அமர்விலேயே அதற்கான ஆதாரத்தை அள்ளிப்போட்டவுடன் ஜெர்ரியும் கப்சிப். இந்த நூற்றாண்டில் கூட இவர்கள் அறிந்து கொள்ளாத உண்மைகளையும் 1400 வருடத்திற்கு முன்பாக போகிற போக்கில் திருக்குர்ஆன் சொல்லியுள்ளது என்பதை நினைக்கும் போது “இது அல்லாஹ்வுடைய வேதம் தான் என்பது மறுபடியும் நிரூபணமாகின்றது.

விவாதத்தில் பீஜே சொன்னதை உண்மைப்படுதிய கிறித்தவ தரப்பு பார்வையாளர்கள் :

விவாத டிவிடிக்களை வெளியிட வெட்கப்பட்ட கிறித்தவ போதகர்கள்:

வாதத்தை துவக்கிய பீஜே அவர்கள் தனது முன்னுரையில் “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் பைபிள் இறைவேதமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்தோம். எந்த அளவிற்கென்றால், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்களை நீங்கள் வெளியிட வெக்கப்படுகின்ற அளவிற்கு உங்களை அந்த விவாதம் தள்ளியுள்ளது என்ற உண்மையை தனது துவக்க உரையிலேயே போட்டு உடைத்தார்.

அதற்கு பதிலளித்த சான் தரப்பினர் நாங்களும் டிவிடிக்களை வெளியிட்டுள்ளோம் என்று சப்பைக்கட்டு பதிலை கொடுத்தனர். ஆனால், அவர்களது இந்த மழுப்பல் சில மணி நேரத்திலேயே வெளியானது. உணவு இடைவேளையின் போது நம்மைச் சந்தித்த கிறித்தவ தரப்பிலிருந்து பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருந்த கிறித்தவ சகோதரர்கள் நம்மிடம் “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. உங்களால் தர இயலுமா? என்று நம்மிடம் கேட்க, விவாத அரங்கத்திற்குள் ஒப்பந்தப் பிரகாரம் எதுவும் கொடுக்கக்கூடாது என்று இருப்பதால் அருகில் உள்ள எங்களது அலுவலகத்தில் டிவிடிக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று பதிலளித்தனர். இந்த விஷயத்தை பீஜே அவர்கள் தனது உரையில் விவாதத்தின் இரண்டாவது அமர்வில் சுட்டிக்காட்டியவுடன் சான் தரப்பினர் முகம் சுருங்கிவிட்டது.

முதல் நாள் விவாதத்தின் இறுதியிலும், மறுநாள் விவாதம் முடிந்த பிறகும் பல கிறித்தவ சகோதரர்கள் நமது அலுவலகத்திற்கு வந்து விவாத டிவிடிக்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

வரும்! – ஆனா வராது! :

ஆரம்பத்தில் பீஜே அவர்கள், தனது உரையில் இறைவனுடைய இலக்கணத்தை சொல்லக்கூடிய வேதத்தில் இப்படி கிறுக்குத்தனங்கள் இருக்கலாமா? என்று கேட்டு பைபிளில் உள்ள சில உளறல்களை பட்டியலிட்டார்.

அதற்கு ஆவேசமாக பதிலளித்த ஜெர்ரி அவர்கள், பைபிள் குறித்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் நாங்கள் பதிலளிப்போம் என்று ஒரு வேகத்தில் கூறிவிட்டார். பைபிளில் உள்ள கேவலங்களாஇயும், ஆபாசங்களையும், அசிங்கங்களையும், உளறல்களையும் அள்ளிப்போட்டப் போட செய்வதறியாது திகைத்தவர்கள், “இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லமாட்டோம்” என்று கூறி அந்தர்பல்டி அடித்தனர்.

பெண்ணுரிமை பேணும் லட்சணம் இதுதானா?:

பெண்களை இஸ்லாம் அடிக்கச் சொல்கின்றது. பெண்களிடம் இஸ்லாம் தனது இஷ்டத்திற்கு அவர்களது கணவனை உடலுறவு கொள்ளச் சொல்லி அனுமதி வழங்குகின்றது. இது சரியா? என்று ஏதோ பெண்கள் மேல் ரொம்ப அக்கறையுள்ளவர்கள் போல கேள்விகளைக் கேட்டனர்.

அதற்கு விளக்கமும் அளித்துவிட்டு, இதைக் கேட்க உங்களுக்கென்ன அருகதை இருக்கின்றது என்று கேட்டு, கர்த்தர் அடுத்தவன் மனைவியை எடுத்து இன்னொருவனுக்கு கையளித்தாரே! இது தான் பெண்களுக்கு நீதி செலுத்தும் லட்சணமா? பாதிரியாரிடம் அழைத்து சென்று கன்னிப்பரிசோதனை செய்யச் சொல்லுவதும், விபச்சாரம் செய்துவிட்டாளா? இல்லையா? என்பதற்கு மனைவியை நாற்றமெடுத்த தண்ணீரை குடிக்கச் சொல்லுவதும், சபைகளில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லுவதும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை பாடாய்ப்படுத்தி எடுப்பதும் தான் பெண்ணுரிமை பேணும் லட்சணமா? என்று கேட்க கடைசி வரைக்கும் வாய்திறக்கவில்லை.

விளக்கம் கொடுப்பது ஒப்புக் கொள்வதா?:

“முத்ஆ” திருமணம் செய்வது சரியா?, அடைமைப் பெண்களுடன் உறவு வைக்கலாமா? என்ற ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, “திருக்குர்-ஆன் என்பது, சிறுகச் சிறுக 23ஆண்டுகள் இறக்கப்பட்ட வேதம். ஆரம்பத்தில் அந்த மக்களிடத்தில் அறியாமைக்காலத்திலிருந்த பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாகத்தான் இறைவன் தனது வேத அறிவிப்பின் மூலம் தடை செய்தான். அந்த அடிப்படையில் ஆரம்பகட்டத்தில் எப்படி வட்டி, மது போன்ற விஷயங்கள் அனுமதிக்கப்பட்டு, பிறகு தடை செய்யப்பட்டதோ அதைப் போல மேற்கண்ட பழக்க வழக்கங்களும் அந்த மக்களிடத்திலிருந்த நிலையில், பின்னர் வேத அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பீஜே விளக்கமளித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு தாங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை பீஜே ஒப்புக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்களே! பார்க்கலாம். இவர்களது சிந்தனைத்திறன் இவ்வளவு தான் என்பதை அங்கே தெளிவாக அறியமுடிந்தது.

விசித்திரமான விவாதம் :

ஒரு மாணவனுக்கு தான் பரீட்சை எழுதப் போவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவனது தேர்வு வினாத்தாளை கொடுத்தால் எப்படியிருக்குமோ அதைப்போலத் தான் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி இவர்கள் ஓட்டமெடுத்த நாள் அன்றே, இப்போது வைக்கப்பட்ட விவாதத்தில் பெரும்பகுதி வைக்கப்பட்ட ஆதாரத்தையும், வாதங்களையும் நாம் வைத்துவிட்டோம். அந்த விவாதத்தை நாம் நேரடியாக “ஆன்லைன்பீஜே” இணையதளத்திலும் ஒளிபரப்பு செய்தோம். அதை நாம் நேரடி ஒளிபரப்பு செய்ததை பார்த்துவிட்டு வந்திருந்த இவர்களுக்கு அந்த வாதங்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை என்றால் உண்மையிலேயே இது ஒரு விசித்திரமான விவாதம் தான் என்று பீஜே தனது இறுதி உரையில் குறிப்பிட்டார்.

பீஜே தர்காவிற்கு போனது ஆதாரமாகுமா? :

1986 ஆம் ஆண்டு பீஜே தனது பத்திரிகையில் சூனியம் உண்டு என்று சொன்னாராம். அதை நாங்கள் ஆதாரமாகத் தருகின்றோம் என்று கூறி சில ஆதாரங்களை மேற்கோள்காட்டினார்கள். நாங்கள் அறியாமல் இருந்த போது செய்த தவறை ஆதாரமாகக் காட்டுகின்றீர்கள். 1986 அல்ல அதற்கு இன்னும் சில வருடங்களுக்கு முன்னால் சென்று தேடிப்பார்த்தால் “தர்கா” தட்டு தகடு தாயத்தை நான் ஆதரித்ததற்கும் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும். இதுவெல்லாம் ஒரு ஆதாரமா? என்று கேட்க அந்த கேள்வி அதோடு சப்பையாகிவிட்டது.

புளித்துப்போன பழைய கஞ்சி :

பரவலாக குர்-ஆனின் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, சல்மான் ருஷ்டி என்ற கிறுக்கன் எழுதிய சாத்தானிய வேதம் என்ற நூலில் அவன் வைக்கும் குற்றச்சாட்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதை குடித்துவிட்டு வந்தது போல வந்து பேசிக் கொண்டிருந்த சான் தரப்பு சகோதரர் ஒருவர், ஏதோ மிகப்பெரிய ஆதாரத்தை எடுத்து வைப்பது போல எடுத்து வைக்க, இதற்கு 1990ஆம் வருடத்திலேயே, “வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டு பதில் கொடுத்துவிட்டோம் என்று பதிலையும் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்ட அந்த வாதம் புஷ் என்று போகிவிட்டது. இது புளித்துப்போன பழைய கஞ்சி என்பது அவருக்கு தெரியவில்லை போலும்.

தேவதூதர்களுக்கு எதுவும் பத்தாதா? :

சுவனத்தில் அழகிய பெண்களை மணமுடித்து வைப்போம் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டும் வசனங்களை மேற்கோள்காட்டி இப்படித்தான் உங்கள் வேதம் உங்களை அழைக்கிறது என்று குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அனைவரும் மரித்தவுடன் வானுலகத்தில் தேவ தூதர்களாக வாழ்வார்கள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்படியானால், வானிலுள்ள தேவ தூதர்கள் கீழுலகத்திற்கு இறங்கி வந்து இங்குள்ள பெண்களோடு உடலுறவு கொண்டார்கள் என்று ஆதியாகமத்தில் உள்ளதே. தேவதூதர்களுக்கு அங்கே கிடைப்பது போதவில்லை என்று தானே இங்கே இறங்கி வருகிறார்கள் என்றும், ஒரு மனைவியை தியாகம் செய்தால் உனக்கு நூறு மனைவி கிடைப்பாள் என்று சொல்லித்தானே ஏசுவும் உங்களை ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார் என்றும் பீஜே கேட்க அமைதியானார்கள் ஊழியக்காரர்கள்.

May 1, 2012, 11:22 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top