பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்
பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்
கணவனுடனோ அல்லது மஹ்ரமான உறவினர் துணையுடனோ இல்லாமல் பெண்கள் பயணம் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எது?
இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
காரணம் இது குறித்த அறிவிப்புக்கள் முரண்பட்டதாக உள்ளன.
حدثنا إسحاق بن إبراهيم الحنظلي قال قلت لأبي أسامة حدثكم عبيد الله عن نافع عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لا تسافر المرأة ثلاثة أيام إلا مع ذي محرم
1086, 1087
1086 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1087 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
புஹாரி 1086, 1087
இந்த அறிவிப்பின் படி யாருடைய துணையும் இல்லாமல் பெண்கள் மூன்று நாட்கள் தனியாகப் பயணம் செய்யலாம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.
1864, 1996,
1864 அபூசயீத் (ரலி) கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) கணவனோ மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினரோ இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், சுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளிவாசல் (மஸ்ஜிதந் நபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!
அபூசயீத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரெண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கஸஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
புஹாரி 1864, 1996
இந்த ஹதீஸ்கள் இரண்டு நாட்களுக்கு மேல் ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றன. இரண்டு நாட்களுக்குக் குறைவாக பயணம் செய்வதாக இருந்தால் ஒரு பெண் தனியாக யாருடைய துணையும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
حدثنا آدم قال حدثنا ابن أبي ذئب قال حدثنا سعيد المقبري عن أبيه عن أبي هريرة رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة يوم وليلة ليس معها حرمة تابعه يحيى بن أبي كثير وسهيل ومالك عن المقبري عن أبي هريرة رضي الله عنه
1088
1088 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஒரு நாள் மட்டும் தான் ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யலாம்; அதற்கு மேல் பயணம் செய்யக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
மேற்கண்ட் மூன்று ஹதீஸ்களும் ஒன்றுக்கொன்று நேர் முரணான கருத்தைக் கூறுகிறது..
இம்மூன்றில் ஒவ்வொன்றும் மற்ற இரண்டு ஹதீஸ்களை மறுக்கும் வகையில் உள்ளன.
இது போல் முரண்பாடாக செய்திகள் கிடைக்கும் போது அவற்றை எவ்வாறு அணுகுவது?
இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹதீஸ்களுக்கு மத்தியில் முரண்பாடு காணப்பட்டால் எல்லா ஹதீஸ்களும் சமமான தரத்தில் உள்ளவையா என்று பார்க்க வேண்டும். அவற்றில் ஒரு ஹதீஸ் மிக உயர்ந்த தரத்திலும் மற்றவை குறைந்த தரத்திலும் இருந்தால் தரம் குறைந்ததை விட்டுவிட்டு தரம் உயர்ந்ததை எடுத்துக் கொள்ள வேண்டும். இது முதலாவது அணுகுமுறை.
இந்த ஹதீஸைப் பொருத்தவரை மூன்று ஹதீஸ்களும் நம்பகத் தன்மையில் சமமாக உள்ளதால் எந்த ஒன்றுக்கும் முன்னுரிமை அளிக்க முடியாது.
இப்படிச் செய்ய வழி இல்லாவிட்டால் ஒரு ஹதீஸ் ஆரம்ப காலத்திலும் இஓனொரு ஹதீஸ் பிற்காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்,. இதற்கு ஆதாரம் கிடைத்தால் முன்னர் சொன்னதை விட்டு விட்டு பின்னர் சொன்னதை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னர் சொன்னதை பின்னர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மாற்றிவிட்டனர் என்று முடிவு செய்தால் முரண்பாடு இல்லாமல் முடிவு காண முடியும்.
ஆனால் மேற்கண்ட மூன்று ஹதீஸ்களில் எது முதலில் சொல்லப்பட்டது? எது பின்னர் சொல்லப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அந்த முடிவுக்கும் வர முடியாது.
இந்த இரண்டு வழிகளும் இல்லாவிட்டால் மூன்று ஹதீஸ்களையும் இணைத்து மூன்றுக்கும் இணக்கமான ஒரு கருத்துக்கு வர வேண்டும். இந்த ஹதீஸ்களீல் அப்படி இணைத்து பொதுக்கருத்துக்கு வருவதற்கு இடமில்லாமல் உள்ளது.
இதில் உள்ள முரண்பாடு நீங்குவதற்கு வழி இல்லாவிட்டால் வஹியில் முரண்பாடு இருக்காது என்ற அடிப்படையில் இதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று கருதி முன்றையும் விட்டு விட வேண்டும்
இப்போது பெண்கள் ஒரு நாள் பயணம் செய்யலாம் என்பதற்கும், இரண்டு நாட்கள் பயணம் செய்யலாம் என்பதற்கும், மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்பத்ற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்ற முடிவ்வுக்கு வந்து வேறு ஆதாரங்களைத் தேடவேண்டும்.
அவ்வாறு தேடும் போது கிடைத்த ஒரு ஹதீஸை நாம் முன்னர் ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தோம்.
12484 - حَدَّثَنَا الْحُسَيْنُ بن إِسْحَاقَ التُّسْتَرِيُّ , حَدَّثَنَا يُوسُفُ بن مُحَمَّدِ بن سَابِقٍ , حَدَّثَنَا أَبُو مَالِكٍ الْجَنْبِيُّ , عَنْ جُوَيْبِرٍ , عَنِ الضَّحَّاكِ , عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لا تُسَافِرِ الْمَرْأَةُ ثَلاثَ أَمْيَالٍ إِلا مَعَ زَوْجٍ أَوْ مَعَ ذِي مَحْرَمٍ, فَقِيلَ لابْنِ عَبَّاسٍ: النَّاسُ يَقُولُونُ ثَلاثَةُ أَيَّامِ , قَالَ: إِنَّمَا هُوَ وَهْمٌ مِنْهُمْ. (الطبراني )
இது தான் அந்த ஹதீஸ்.
ஒரு பெண் கணவன் துணை அல்லது மஹ்ரமான ஆண் துணை இல்லாமல் மூன்று மைல் தூரம் பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் கூறினார். மூன்று நாட்கள் என்று மக்கல் கூறுகிறார்களே என்று இப்னு அப்பாஸ் அவர்களிடம் கேட்ட போது அது ஊகம் என்று பதிலளீத்தார்கள்.
ஆதாரம் தபரானி
மேற்கணட் ஹதீஸின் அடிப்படையில் மூன்று மைல் தூரத்துக்கு மேல் பெண்கள் தனியாகப் பயணம் செய்யக் கூடாது என்று முன்னர் நம்து உரையிலும் குறிப்பிட்டோம்.
ஆனால் மேற்கணட் செய்தியில் ஜுவைபிர் என்ற பலவீனமான அறிவிப்பாள்ர் இடம் பெறுவதை நாம் கவனிக்கத் தவறி விட்டோம். எனவே இதை ஆதாரமாகக் கொள்ளக கூடாது. அப்படியானால் இது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே நாம் மேலும் தேடிப் பார்த்த போது ஆதாரப்பூரவமான் மற்றொரு ஹதீஸ் இந்தப் பிரச்சனையில் தெளிவான முடிவு எடுக்க உதவும் வகையில் அமைந்துள்ளது.
அந்த ஹதீஸ் இது தான்
صحيح ابن خزيمة - (ج 4 / ص 135)
2526 - حدثنا يوسف بن موسى حدثنا جرير عن سفيان و حدثنا أبو بشر الواسطي حدثنا خالد عن سهيل عن سعيد بن أبي سعيد عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : لا تسافر امرأة بريدا إلا و معها ذو محرم و قال يوسف : إلا و معها ذو محرم
قال أبو بكر : البريد إثنا عشر ميلا بالهاشمي
قال الأعظمي : إسناده صحيح
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
நூல்: இப்னு குஸைமா, பைஹகீ, அபூதாவூத், ஹாகிம்,
இதன் அடிப்படையில் பெண்கள் 12 மைல் தொலைவு உள்ள தூரத்துக்கு தனியாகப் பயணம் செய்ய அனுமதி உள்ளது. அதற்கு மேல் தனியாகப் பயணம் செய்ய அனுமதி இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
மேலும் ஒரு நாள், அல்லது இரண்டு நாட்கள், அல்லது மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்ற கருத்தும் ஏற்புடையதாக இல்லை. இந்தக் கால கட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு உள்ளது. இஸ்லாம் எதற்காக தனித்து பயணம் செய்வதைத் தடுக்கிறதோ அதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. 12 மைல் என்பது குறைந்த தூரமாக உள்ளதால் இது ஏற்புடையதாக்வும் உள்ளது.
முன்னர் நமது ஜும்மா உரையில் மூன்று மைல்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் எனக் கூறியதை நாம் மாற்றிக் கொண்டோம் என்பதை அல்லாஹ்வுக்கு அஞ்சி சுட்டிக் காட்டுகிறோம்.
Published on: 06.05.2010. 00:29 Views: 558

