பாரத் பந்த் மாநாட்டை பாதிக்குமா

பாரத் பந்த் மாநாட்டை பாதிக்குமா

ஜூலை ஐந்தாம் தேதி பந்த் மாநாட்டைப் பாதிக்குமா

ஜூலை ஐந்தாம் தேதியன்று எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய பந்த் அறிவித்துள்ளன. இதனால் மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று பரவலாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநாடு ஜூலை நான்காம் தேதி சரியாக 11 மணிக்கு முடிந்து விடும். சுமார் 12 மணிக்கு வாகனங்கள் புறப்பட்டாலும் திருச்சி வரை உள்ள மக்கள் காலை ஆறு மணிக்கெல்லாம் ஊர் சென்று விடுவார்கள். திருச்சியைத் தாண்டி உள்ள ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் தான் பந்த் நேரத்தில் சில மணி நேரங்கள் பயணிக்கும் நிலை ஏற்படும்.

பந்த பற்றிய செய்தி கிடைத்தவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரண்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைமை அலுவலகத்துக்கு கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளது. மாநாடு முடிந்து திரும்பிச் செல்லும் மக்கள் காலை 10 மணி வரை திரும்பிச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களூக்கு இடையூறு இல்லாத வகையில் பந்தை நடத்துமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன்பே உங்கள் மாநாட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் அதற்கு எந்த இடையூறும் செய்யாமல் இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் வாய் மொழியாக உறுதி தரப்பட்டுள்ளது. உங்கள் கொடியுடன் வருமாறு வலியுறுத்துங்கள் என அவர்கள் கூறியுள்ளனர். எனவே பந்த் காரணமாக நமது மாநாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அடுத்ததாக நாளை காவல் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து திருச்சிக்கு அப்பால் உள்ள ஊர்களை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தொடராக செல்லும் வகையிலும் முன்னும் பின்னும் காவல் வாகனத்துடன் கூடிய பாதுகாப்பு வழ்ங்குமாறு நாளை கோரிக்கை வைக்கப்படவுள்ளது. பந்த காரணமாக இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

இது தவிர மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து முன்னரே தகவல் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்ஷா அல்லாஹ் பந்த காரணமாக எந்தப் பாதிப்பும் ஏற்பட வழியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்

Published on: 30.06.2010. 15:36 Views: 572

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top