குர்-ஆன் அரபிமொழியில் இருப்பது ஏன்?

குர்-ஆன் அரபிமொழியில் இருப்பது ஏன்?

குர்ஆன் ஏன் அரபியில் ஏழுதப்பட்டுள்ளது? ஏன் அரபியில் படிக்கப்படுகின்றது? முஸ்லிம்கள் ஹஜ்ஜை மட்டும் மக்காவில் குறிப்பிட்ட இடத்தில் ஏன் செய்கிறார்கள்?

தொடர்ந்து படிக்க 06.04.2010. 17:43

எல்லாம் விதிப்படியா?

எல்லாம் விதிப்படியா?

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது என்றால் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படி தானே நடக்கின்றது. ஒருவன் தீமை செய்வதும் நன்மை செய்வதும் அல்லாஹ்வின் விருப்பப்படி தானே நடக்கிறது. அல்லாஹ் விதித்த விதிபடித்தான் எல்லாம் நடக்கிறது என்றால் நாம் சொர்க்கம் செல்வதும் நரகம் செல்வதும் முன்கூட்டியே விதிக்கப்பட்டுவிட்டதல்லவா? அப்படியானால் நாம் அமல்கள் செய்வதால் என்ன பயன்? நம் இஷ்டப்படி வாழ்ந்து விடலாமே. விதியை பற்றி ஒரு அளவிற்கு மேல் சிந்திக்காதீர்கள் என்று ஹதீஸில் படித்திருக்கின்றேன். என்னுடைய இந்த குழப்பத்திற்கு தெளிவான பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் போதுமானவன்.

தொடர்ந்து படிக்க 30.03.2010. 22:37

ஜின்களைக் காண முடியுமா

ஜின்களைக் காண முடியுமா?

அப்துர்ரஹ்மான்

இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம்.

தொடர்ந்து படிக்க 08.03.2010. 16:18

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து

 ஒரு ஒன்பது மாதக் குழந்தையின் மீது குர்ஆன் எழுத்து தெரிகிறது என்று சமீபத்தில் நான் யூட்யூபில் நான் பார்த்தேன். இக்குழந்தையின் பெற்றோர் முஸ்லிம்கள் அல்லர் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன?

தொடர்ந்து படிக்க 08.03.2010. 08:51

பெண்களுக்கு ஹூருல் ஈன்கள்

ஆண்களுக்கு ஹூருல் ஈன்கள் கிடைப்பது போல் பெண்களூக்கும் உண்டா?

ஆஸாத் அலி

இது குறித்து திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். பார்க்க

அரபு மொழி அறிவு இல்லாமல் ஜாகிர் நாயக் இது பற்றி கூறியுள்ள விளக்கம் அறியாமையின் தொகுப்பாகும். ஹூர் என்ற வார்த்தைக்கு தவறாக யாரோ சொல்லிக் கொடுத்ததைப் படிக்கும் போது வேதனையாக இருந்தது.

04.03.2010. 20:56

ஜின் இனம் குறித்த கேள்வியும் எதிர்க்

ஜின் இனம் குறித்த கேள்வியும் எதிர்க் கேள்வியும்

1996 ஆம் ஆண்டு ஜின் குறித்த கேள்விக்கு பீஜே அளித்த போது அதற்கு இலங்கை உலமாக்கள் மறுப்பு தெரிவித்தனர். அந்த மறுப்புக்கும் பீஜே பதில் அளித்தார். அதை சகோதரர் ஹஃபீழ் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். அதை இங்கே வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க 15.02.2010. 13:53

மனிதன் மீது ஜின் மேலாடுமா?

மனிதன் மீது ஜின் மேலாடுமா?

1996 ஆம் ஆண்டு அல்ஜன்னத்தில் பீஜே அளித்த பதிலை ஹஃபீழ் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றிகள்.

 மனிதன் மீது ஜின் மேலாடுமா?

 மதீனாவில் ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்து விட்டது. உடனே மதீனா யுனிவர்சிடியில் உள்ள ஆலிமை அழைக்க வந்தனர். முஸ்லிமான ஜின் அந்தப் பெண்ணைப் பிடித்துள்ளதை அவர் கண்டுபிடித்தார். நீ ஒரு முஸ்லிம். இன்னொரு முஸ்லிமுக்கு நோவினை செய்யலாமா? என்று அவர் கேட்டார். அதற்கு அவளைப் பிடித்திருந்த ஜின், “பாத்ரூமில் குளிக்கும் போது என் மேல் இவள் வெந்நீரை ஊற்றினாள்” என்று என்று பதிலளித்தது. ’நீ இருப்பது தெரியாமல் தானே அவள் வெந்நீரை ஊற்றினாள்’என்று அந்த ஆலிம் விளக்கினார். அதற்கு அந்த ஜின், “நபி (ஸல்) அவர்கள் பதிரூமில் ஓத வேண்டும் என்று கூறியதை அவள் ஓதியிருந்தால் நான் அங்கிருந்து வெளியேறி இருப்பேன்” என்றது. தெரியாமல் நடந்து விட்டது; நீ போய் விடு என்று அந்த ஆலிம் கூறியதும் ஜின் ஓடிவிட்டது. இந்தச் சம்பவத்தை உமர் அலி (இலங்கை) என்பவர் யாஸீன் விளக்கவுரை என்ற ஒலி நாடாவில் பேசி உள்ளார். இவ்வாறு நடக்க குர்ஆன் ஹதீஸ்படி சாத்தியம் உள்ளதா?

தொடர்ந்து படிக்க 15.02.2010. 13:33

முஹம்மது ஏன்று திக்ரு செய்யலாமா

முஹம்மது ஏன்று திக்ரு செய்யலாமா?

(மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய இர்ஃபானுல் ஹக்' (உண்மை விளக்கம்) எனும் நூலில், முஹம்மது என்ற திக்ரு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியை இங்கே அப்படியே தந்துள்ளோம்.)

தொடர்ந்து படிக்க 26.08.2009. 18:48

செம்பு வளையம் அணியலாமா

இங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சி வடிவிலான செம்பு வளையம் விற்கப்படுகிறது. இதைக் கையில் அணிந்து கொண்டால் இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்லது என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா? அல்லது தாயத்து போன்ற ஷிர்க் ஏற்படுமா?

தொடர்ந்து படிக்க 26.08.2009. 17:30

ஓதிப்பார்த்தல் கூடுமா

ஓதிப் பார்ப்பதற்கு அனுமதி உண்டா? அனுமதி உண்டு என்றால் ஓதிப்பார்ப்பதற்கு கூலி வாங்கலாமா? முஸ்லிமல்லாதவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா?

தொடர்ந்து படிக்க 23.08.2009. 01:57

இரகசிய ஞானம்

இரகசிய ஞானம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது திருக்குர்ஆனின் 2:159,160 வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே!

தொடர்ந்து படிக்க 15.08.2009. 06:40

ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?

ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?
 ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!' என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது.

(அஹ்மது, ஹாகிம், பைஹகீ)

 'மாலையும் இரவும் சந்திக்கும்) அந்தி நேரத்தில் உங்கள் குழந்தைகளை வீட்டினுள் வைத்திருங்கள்,அது ஷைத்தான் வெளிவரும் சமயம் ஆகும்' நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),

நூல்: முஸ்லிம்).'

பாலைவனங்களிலும் குகைகளிலும் தனித்திருப்பது தடுக்கப்பட்டுள்ளது ஏனெனில் அங்கு ஷைத்தான் இருப்பான்' நபிமொழி.(மனிதர்கள் மலம், ஜலம், கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள்(ஜின்,ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும்.எனவே உங்களில் ஒருவர்(அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர்,'அவூது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி' என்று கூறுவாராக! என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது 6)'

ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஓர் ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஒர் ஆதிக்கம் உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி),

நூல்: திர்மிதி)

இந்த ஹதீஸ்கள் ஆதரப்பூர்வமானதா? இதன் அடிப்படையில் ஷைத்தான் மனிதன் மீது மேலாடுவான் என்று எடுத்துக் கொள்ளமா?

அப்துல் அலீம் அய்யம்பேட்டை

பதில் :

இந்த ஹதீஸ்கள் சரியானவையா என்பதை அறிவதற்கு முன்னால் இன்னொரு முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

ஷைத்தான் என்றால் யார்? அவனுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் என்ன? ஷைத்தான் என்று கூறப்படும் அனைத்து ஹதீஸ்களிலும் ஷைத்தான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டுமா? இதை புரிந்து கொண்டால தான் மேற்கணட் ஹதீஸ்களையும் இந்தக் கருத்தில் அமைந்த மற்ற ஹதீஸ்களையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள முடியும்.

 ஜின் இனத்தைச் சார்ந்தவன் தான் ஷைத்தான். ஷைத்தான் நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லோரிடமும் இருக்கிறான். இதற்கு நல்லவர்களோ சஹபாக்களோ விதிவிலக்கில்லை.

ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் உள்ள ஷைத்தான் மட்டும் நபியவர்களுக்குக் கட்டுப்பட்டு விட்டான். இவன் மற்ற அனைவரிடமும் இருந்து கொண்டு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துவான். நல்லவர்கள் இவன் கூறுவதைப் புறக்கணித்து விடுவார்கள். தீயவர்கள் செயல்படுத்துவார்கள் என்பது ஷைத்தானைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம்..

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنْ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ(201)7

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

அல்குர்ஆன் (7 : 201)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்ட போது, "ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?'' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்' என்றார்கள். "ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் "ஆம்' என்றார்கள். நான், "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான்'' என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் (5422)

எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையைப் பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படும் போது அவர்களிடத்தில் மட்டும் ஷைத்தான் வந்துவிட்டதாக தவறாக நம்புகிறார்கள்.

ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான்.

ஆனால் இவ்வாறு அனைவருக்கும் பைத்தியமோ மோசமான நோய்களோ உளறல்களோ ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் இது போன்ற பலவீனங்கள் ஏற்படுகிறது. இறைவனுடைய நாட்டத்தால் இந்த பலவீனங்கள் ஏற்படுகிறதே தவிர ஷைத்தானால் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

3281حَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا رواه البخاري

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்கüடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். - உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான்  ...அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்'' என்று சொன்னார்கள்.

புகாரி (3281)

ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே ஷைத்தான் நமது உடலில் இரண்டறக் கலந்துள்ளான் என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.

அடுத்து உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தைப் போட்டு விடுவான் என்று அஞ்சுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உடலில் இரண்டறக் கலந்துள்ள ஷைத்தானால் உள்ளத்தில் தீய எண்ணங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ளஷைத்தான் நமது உடலுடன் கலந்திருந்தாலும் தீய எண்ணங்களை மட்டுமே அவனால் ஏற்படுத்த முடியுமே தவிர கை கால்களை முடக்குவதோ நோய்களை ஏற்படுத்துவதோ பைத்தியமாக்குவதோ ஷைத்தானால் முடியாத காரியம்.

 ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்

ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடஞ்சல்களை விவரிக்கும் சில ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள்.

ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.

இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு ஹதீஸ்களில் சொல்லப்பட்ட இடஞ்சல்கள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?

தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹதொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுவதாக ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.

அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்குத் தொழுகையில் கவனம் திரும்பாதா? அவர்களுக்கு இனி கொட்டாவியே வராதா? அவர்கள் சுப்ஹதொழுகையை விடாமல் கடைப்பிடிப்பார்களா? ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதா? இந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டியப் பொய் என்பதை அறியலாம்.

 அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?

 ஷைத்தான் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாக கூறும் போலி ஆண்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப்பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?

நபிமார்களுக்கு ஷைத்தான் இடஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.

அல்குர்ஆன் (6 : 112)

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.

அல்குர்ஆன் (22 : 52)

 ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள் ஷைத்தானை விரட்டுகிறார்களா?

 ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

அல்குர்ஆன் (26 : 221)

ஷைத்தானை விரட்டுவதாகக் கூறுபவர்கள் மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான் இருக்கிறான்.

ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளையும் அறிவையும் இழந்துவிட வேண்டாம்.

ஷைத்தானால் ஏற்படும் தீங்கு

தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.

மனிதன் தான் ஷைத்தானிற்கு கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான்.  இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் (4 : 119)

அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.

அல்குர்ஆன் (2 : 169)

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.

அல்குர்ஆன் (114 : 5)

அதிகபட்சமாக ஷைத்தானால் கணவனைப் பற்றி மனைவியிடத்திலும் மனைவியைப் பற்றி கணவனிடத்திலும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி இருவரையும் பிரிக்கும் வேûயைத் தான் செய்ய முடியும். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், "(சொல்லிலிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (5419)

வேறெதுவும் செய்ய முடியாது?

ஒருவரை பைத்தியமாக மாற்றுவது உடல் உறுப்புக்களைச் செயலிழக்கச் செய்து முடக்கிப் போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு

அல்குர்ஆன் (14 : 22)

"எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.

அல்குர்ஆன் (17 : 65)

அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.

அல்குர்ஆன் (34 : 21)

குர்ஆன் கூறும் இந்த அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டால் பில்லி சூனியம் ஏவல் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். பில்லி சூனியம் ஏவல் போன்ற காரியங்கள் ஷைத்தானின் உதவியால் நடப்பதாகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்து எரிகிறது.

 தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்

 நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல் தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டும் உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளளவு கூட ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானிற்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.

"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் (48 : 11)

தீமைகளை ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் செயலே என்று திருக்குர்ஆன் கூருகிறது.

"அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (5 : 76)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

அல்குர்ஆன் (10 : 106)

இந்த விபரங்களை நன்கு மனதில் பதிவு செய்து கொண்டு நிங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ்களை அணுக வேண்டும். மேற்கண்ட ஆதாரங்களுக்கு முரணாக இல்லாத வகையில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களைப் பற்றிய விளக்கம்

முர்ரா பின் வஹப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் தன் குழந்தையுடன் வந்தார். அக்குழந்தைக்கு பைத்தியம் பிடித்திருந்தது. அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு. நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அக்குழந்தை குனமடைந்தது.

அஹ்மது (16890)

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஷைத்தானால் பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்பது போல் தெரிகின்றது.

ஷைத்தானுக்கு தீய எண்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறு அதிகாரம் வழங்கப்படவில்லை. தீங்கை ஏற்படுத்தும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது என்பதை முன்பே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிரூபித்திருக்கின்றோம்.

ஷைத்தானுக்கு பைத்தியம் ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று நம்புவது குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிரான நம்பிக்கையாகும். எனவே இந்த ஹதீஸை அதன் நேரடிப் பொருளில் விளங்கினால் குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் மோதவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.

பின்வரும் அடிப்படையை புரிந்து கொண்டால் மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இந்த ஹதீஸை விளங்கிக் கொள்ள முடியும்.

ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்

கெட்ட காரியங்களையும் வெறுப்பிற்குரிய விஷயங்களையும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அரபுமொழியிலும் உள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

அல்குர்ஆன் (5 : 90)

மது அருந்துவது சூதாடுவது பலிபீடங்களை உருவாக்குவது குறிபார்ப்பதற்கு அம்புகளை பயன்படுத்துவது இவையனைத்தும் கெட்ட மனிதர்களின் செயல்பாடுகளாகும். ஆனால் இவற்றை அல்லாஹ் ஷைத்தானின் செயல்களாக மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான்.

"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.

அல்குர்ஆன் (18 : 63)

மறதி உட்பட எல்லா தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது

அய்யூப் (அலை) அவர்கள் தனக்கு நோய் ஏற்பட்டிருக்கின்றது என்பதை தெரிவிக்க ஷைத்தான் என்னைத் தீண்டிவிட்டான் என்ற வார்த்தையை கூறியிருக்கிறார்கள்.

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

அல்குர்ஆன் (38 : 41)

நோயை ஏற்படுத்துவது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய ஆற்றலாக இருந்தாலும் வெறுக்கத்தக்க விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்ற மரியாதை நிமித்தமாகவே நோயை ஷைத்தான் ஏற்படுத்தியதாக அய்யூப் (அலை) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனில் வேறொரு இடத்தில் அய்யூப் (அலை) அவர்கள் செய்த இதே பிரார்த்தனையை அல்லாஹ் விவரிக்கிறான்.

"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

அல்குர்ஆன் (21 : 83.84)

38:41 வது வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை இந்த வசனம் தெளிவாக விவரிக்கிறது. 21:83 இந்த வசனத்தில் ஷைத்தானைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை. எனக்குத் துன்பம் நேர்ந்துவிட்டது என்றே அய்யூப் (அலை) அவர்கள் கூறியதாக உள்ளது.

தனக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தான் அய்யூப் (அலை) அவர்கள் ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று குறிப்பிடுகிறார்கள். நோயை ஷைத்தான் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது என்பதற்கு அய்யூப் (அலை) அவர்களின் இக்கூற்று மிகச் சிறந்த சான்றாக உள்ளது.

 இஸ்லாமிய நம்பிக்கைப்படி பைத்தியங்கள் எந்தத் தீமை செய்தாலும் அவர்கள் பாவிகளாக மாட்டார்கள். ஷைத்தானின் வேலை அனைவரையும் பாவிகளாக்குவது தான்.

பைத்தியமாக்கப்படுவதால் ஷைத்தானுக்கு நட்டமே தவிர லாபம் இல்லை. எனவே ஷைத்தான் யாரையும் பைத்தியமாக்கும் அதிகாரத்தை பெறவில்லை. அது அவனது அலுவலும் இல்லை.

கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் உள்ளவர்களுக்கு ஷைத்தான் என்று கூறப்படும்

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (2 : 14)

கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3275)

 (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்' எனுமிடத்தில்  பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி)

நூல் : முஸ்லிம் (4548)

தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடித்திரிபவரையும் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு சொல்லப்பட்டுள்ள ஷைத்தான் என்ற வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் விளங்க மாட்டோம்.

நேரடிப் பொருளில் விளங்கினால் தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடுபவரையும் ஷைத்தான் என்று கூற வேண்டிய நிலை வரும்.  இவர்களிடம் கெட்ட செயல் உள்ளது என்ற அடைப்படையில் தான் இவர்களை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.

ஒட்டகத் தொழுவத்தில் தொழுவது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத் தொழுவத்தில் தொழாதீர்கள். ஏனென்றால் ஒட்டகங்கள் ஷைத்தான்களாகும் என்று கூறினார்கள். ஆடுகளை கட்டுமிடத்தில் தொழுவது பற்றி கேட்கப்பட்ட போது அங்கே நீங்கள் தொழுகலாம். ஏனென்றால் அவை பரகத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல் : அபூதாவுத் (156)

ஒட்டகங்கள் ஆடுகளைப் போன்று அமைதியாக இருக்கும் பிராணி இல்லை. தொழுது கொண்டிருக்கும் போது தொழுகையாளியின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் இடஞ்சல்களைத் தரும் பிராணி என்பதால் நபியவர்கள் ஒட்டகங்களை ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள்.

எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் எதிரி என்று கூறப்பட்டிருக்கும் வார்த்தை ஷைத்தானைக் குறித்தாலும் அதன் மூலம் நாடப்படுவது ஷைத்தான் அல்ல. மறாக பைத்தியம் என்ற நோயாகும்.

3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ أَوْ أَمْسَيْتُمْ فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَتْ سَاعَةٌ مِنْ اللَّيْلِ فَخَلُّوهُمْ وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا رواه البخاري                              

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவின் முற்பகுதி வந்து விட்டால் -அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெüயே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெüயே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெüயே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

புகாரி (3304)

மேற்கண்ட செய்தியைப் பற்றியும் விளக்கம் கேட்டிருந்தீர்கள். இதற்கும் நாம் முன்பு கூறிய விளக்கமே பொருந்தும். விஷ ஜந்துக்களைத் தான் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இருள் பரவத் தொடங்கும் போது சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்றும் இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு வெளியில் விடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆங்காங்கே சுற்றத் திரியும் விஷ ஜந்துக்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காக இந்த நேரத்தில் தான் தனது இருப்பிடத்தை நோக்கி விரைகின்றன. மாலை நேரம் வந்து விட்டால் பறைவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் தனது இருப்பிடத்தை நோக்கிச் செல்வதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

சிறுவர்கள் விபரம் அற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனக்குறைவாக இந்த விஷப் பிராணிகளை மிதித்து விட்டால் அதனால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே விடவேண்டாம் என்கிறார்கள்.

மேலும் இந்த ஹதீஸில் இந்தத் தடையுடன் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

இரவில் உறங்கும் போது கதவுகளை பூட்டி விட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ஷைத்தான் பூட்டப்பட்ட கதவை திறக்க மாட்டான் என்றும் கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் தான் என்பதை இது தெளிவாக விளக்குகிறது.

ஷைத்தான் மனதில் ஊடுருவி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த வல்லவன். கதவை பூட்டிவிடுவதால் அவனுடைய வருகையை யாராலும் தடுத்துவிட முடியாது. இரவில் கதவை பூட்டிவிட்டால் வீட்டிற்குள் பாம்பு பள்ளி எலி போன்ற இடஞ்சல் தரும் பிராணிகள் உள்ளே வராது என்பது தான் இதன் கருத்து.

முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு இந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

3755حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْبَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَحُلُّ سِقَاءً وَلَا يَفْتَحُ بَابًا وَلَا يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا أَنْ يَعْرُضَ عَلَى إِنَائِهِ عُودًا وَيَذْكُرَ اسْمَ اللَّهِ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டுவிடுங்கள்; விளக்கை அணைத்துவிடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடிவைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி(விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்.

இதை ஜாபிர் (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (4099)

ஷைத்தான் எந்த பையையும் அவிழ்க்கமாட்டான். மூடப்பட்ட எந்தக் கதவையும் பாத்திரத்தையும் திறக்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கெடுதல் தரும் பிராணிகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். எலியின் அபாயத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்திருப்பதும் நமது விளக்கத்தை மேலும் வலுவூட்டுகிறது.

பாலைவனங்களிலும் குகைகளிலும் தனித்திருப்பது தடுக்கப்பட்டிருக்கின்றது ஏனெனில் அங்கு ஷைத்தான் இருப்பான் என்று ஒரு நபிமொழி இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.

நீங்கள் கூறியவாறு நபிமொழியை நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் கருத்துப்பட திர்மிதியில் ஒரு நபிமொழி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الرَّاكِبُ شَيْطَانٌ وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ وَالثَّلَاثَةُ رَكْبٌ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பயணிக்கும் ஒருவர் ஷைத்தான் ஆவார். பயணிக்கும் இருவர் ஷைத்தான் ஆவார்கள். மூன்று நபர்களே பயணிகளாவார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதி (1597)

தனியாகவோ இருவர் மட்டுமோ பயணம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். அவ்வாறு பயணம் செய்பவர்களை ஷைத்தான் என்றும் கூறுகிறார்கள்.

தனியாக பயணம் செய்யும் போது காட்டு விலங்குகளால் தாக்கப்படலாம். தீடிரென ஒரு ஆபத்து நேர்ந்தால் அதை நம்மால் சமாளிக்க முடியுôமல் போய்விடும். இதுபோன்ற பல காரணங்களால் தான் இவ்வாறு பயணம் செய்ய வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

நீங்கள் குறிப்பிட்ட செய்தியும் இதேக் கருத்தைத் தான் தருகிறது. பாவைனத்திலும் குகைளிலும் தனியாக இருந்தால் அது கண்டிப்பாக ஆபத்தான சூழ்நிலை தான். எந்த நேரத்திலும் நம் உயிருக்கு பேராபத்து ஏற்படலாம். காட்டு விலங்குகளால் விஷ ஜந்துக்களால் ஏற்படலாம். கொள்ளையர்களால் தாக்கப்படலாம்.

மேலும் ஷைத்தான் எல்லா இடங்களிலும் எல்லோருடனும் இருக்கும் போது பாலைவனத்தையும் குகைகளையும் குறிப்பிட்டு அங்கே ஷைத்தான் இருக்கின்றான் என்று கூறுவதென்றால் அங்கே மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறப்பட்டுள்ளது என்பதை சந்தேகமற அறியலாம்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَا حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ فَإِذَا دَخَلَ أَحَدُكُمْ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ رواه إبن ماجه

இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகைதரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, "இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : ஸைது பின் அர்கம் (ரலி)

நூல் : இப்னு மாஜா (292)

மேற்கண்ட ஹதீஸின் விளக்கத்தை கேட்டுள்ளீர்கள். இந்த ஹதீஸில் கழிப்பிடங்கள் ஷைத்தான்கள் வருகை தரும் இடங்கள் என்றும் அவற்றின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் முன்பு கூறிய அடிப்படைகளுக்கும் விளக்கங்களுக்கும் மாற்றமான எந்த அம்சமும் இந்த ஹதீஸில் இல்லை.

ஷைத்தான்களால் தீங்கு ஏற்படாது என்று நாம் கூறவில்லை. மாறாக தீய எண்ணத்தை ஏற்படுத்தும் தீங்கை மட்டுமே ஷைத்தான்களால் செய்ய முடியும் என்றே கூறுகிறோம்.

ஆங்காகங்கே அரசாங்கத்தால் கட்டப்பட்டிருக்கும் கழிவறைக்குள் சென்று பார்த்தால் இந்த ஹதீஸ் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அறியலாம்.

மலம் ஜலம் கழிப்பதற்காகவே கழிவறை பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அந்த கழிவறைக்குள் சென்றவர்கள் ஆபாசமான படங்களையும் அசிங்கமான வரிகளையும் மாநகராட்சி கழிவறைக்குள் எழுதி வைத்திருக்கின்றனர். இன்னும் இந்த மாநாகராட்சி கழிவறைகள் விபச்சாரத்திற்கும் ஓரினைச் சேர்க்கைக்கும் கேந்திரமாக பயன்படுகிறது.

கழிவறையில் ஷைத்தான் ஏற்படுத்திய தவறான எண்ணங்களால் இவ்வளவு அசிங்கம் நடக்கின்றது. இதனால் தான் என்னவோ நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் செல்லும் போது ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு நமக்கு கூறியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு. தீய எண்ணத்தை ஏற்படுத்துவதும் உண்மையை மறுத்துவிடுமாறு கூறுவதுமே ஷைத்தானின் ஆதிக்கம். நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவதும் சத்தியத்தை உண்மைப்படுத்துமாறு கூறுவதுமே வானவரின் ஆதிக்கம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : திர்மிதி (2914)

இந்த ஹதீஸின் விளக்கத்தையும் கேட்டிருந்தீர்கள். இச்செய்தியில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெறும் அதாஉ பின் சாயிப் என்பவர் பலவீனமானவர் ஆவார்.

இவர் நினைவாற்றல் பாதிக்கப்பட்டவராவார். இவர் மேற்கண்ட செய்தியை நல்ல நினைவாற்றல் இருக்கையில் அறிவித்தாரா அல்லது நினைவாற்றல் பாதிக்கப்பட்ட பிறகு அறிவித்தாரா என்று தெரியவில்லை. எனவே இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறமுடியாது.

இத்துடன் நாம் கூறிய விளக்கத்துக்கு மாற்றமான எந்த கருத்தையும் இந்த ஹதீஸ் கூறவில்லை. மாறாக ஷைத்தானுக்கு தீய எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு ஆற்றல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று நாம் கூறிய கருத்தையே இதுவும் கூறுகின்றது.

26.04.2010. 01:52

சலபிக் கொள்கை என்றால் என்ன

 சலபிக் கொள்கை என்றால் என்ன

கேள்வி : சலபி, சலபிக் கொள்கை என்றால் என்ன? கொஞ்சம் விளக்கவும்.
inimai

பதில் :

ஸலபி என்னும் இந்த வார்த்தையை வைத்துக் கொண்டு மக்களைப் பலர் நிறையவே குழப்பி வருகிறார்கள்.

அகராதியில் ஸலஃபு எனும் சொல்லுக்கு முன்னோர்கள் என்பது பொருள். நம்முடைய தந்தையின் காலத்தைச் சேர்ந்தவர்கள் முதல் ஆதல் அலை அவர்கள் அவரி வாழ்ந்த அனைவருமே அகராதிப்படி ஸலபுகள் ஆவார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் கூட ஸலபிகளாக ஆகிவிடுவோம்..

குர்ஆனிலோ நபி மொழியிலோ ஸலபுக் கொள்கை என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

வரலாற்று ரீதியாக குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு ஏற்பட்ட போது தான் ஸலலுக் கொள்கை என்பது உருவாக்கப்பட்டது.

அல்லாஹ் தன்னைப் பற்றி பேசும் போது தனது ஆற்றலைப் பற்றியும் பேசுகிறான். தனது தோற்றத்தைப் பற்றியும் பேசுகிறான்.

ஆற்றலைப் பற்றிப் பேசும் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனது கை எனது முகம் என்பன போன்ற சொற்களை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ்வின் கை என்றால் கை என்றே நபித்தோழர்கள் காலத்தில் புரிந்து கொள்ளப்பட்டது. கை என்றால் அல்லாஹ்வின் ஆற்றல் என்று கருத்து கொடுக்கப்படவில்லை. நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே பொருள் கொண்டனர். ஆனால் தபவுத் தாபியீன்கள் காலத்தில் நேரடி அர்த்தம் கொள்ளாமல் இது போன்ற சொற்களுக்கு வேறு கருத்தை சில அறிஞர்கள் கொடுக்கலானார்கள். அப்போது தான் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் அல்லாஹ்வை பற்றி நம்முடைய ஸல்புகள் அதாவது சஹாபாக்கள், தாபியீன்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று முதன் முதலில் ஸலபு என்பதை கொள்கையுடன் தொடர்பு படுத்தி பயன்படுத்தினார்கள்.

இதன் பிறகுதான் யார் நபித்தோழர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டார்களோ அவர்கள் ஸலபுகள் என்று குறிப்பிடப்பட்டனர்.

இறைவன் தனக்கு எந்தத் தன்மைகள் இருப்பதாக கூறுகின்றானோ அவற்றுக்கு நாம் மாற்று விளக்கம் கொடுக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் தனக்கு இருப்பதாகக் கூறிய எந்த அம்சத்தையும் மறுத்துவிடக் கூடாது என்பதே நபித்தோழர்களின் நம்பிக்கை.

இறைவனுக்கு கை கால் முகம் ஆகிய உறுப்புகள் இருப்பதாகவும் உருவம் இருப்பதாகவும் குர்ஆன் கூறுகின்றது. இறைவன் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் எனவும் அவன் பார்க்கின்றான் கேட்கின்றான் எனவும் அவன் நடந்து வருவான் எனவும் மறுமையில் இறைவனை நல்லவர்கள் காண்பார்கள் எனவும் குர்ஆன் கூறுகின்றது.

இவ்விஷயங்கள் அனைத்தையும் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும். இவற்றுக்கு மாற்று விளக்கம் கொடுப்பதோ இவை எப்படி இருக்கும் என்று கற்பிப்பதோ கூடாது என்பதே சஹாபாக்களின் நம்பிக்கை.

ஆதம் (அலை) அவர்களை எனது கையால் படைத்தேன் என்று அல்லாஹ் சொல்வது, கையால் படைத்தான் என்ற அர்த்த்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது சஹாபாக்களின் நம்பிக்கை/ எனது வலிமையைக் கொண்டு படைத்தோம் என்றே அர்த்தம் செய்ய வேண்டும் என்று பிற்காலத்தவர்கள் விளக்கம் கூறினார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வுடைய பண்புகளில் தன்மைகளில் அல்லாஹ்வுடைய உருவம் சம்பந்தப்பட்டதாக வரும் விஷயங்களில் வியாக்கியானம் கொடுத்து வந்தனர்.

ஸலபுகள் - அதாவது ஸஹாபாக்கள் கண் என்றால் கண் என்றும் காது என்றால் காது என்றும் வேறு வியாக்கியானம் செய்யாமல் எழுதிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் உறுப்புகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதும் அதற்கு விதம் கற்பிப்பதும் கூடாது. மறுமையில் அவனை காணும் போதே இந்த விபரங்கள் புலப்படும் என்று கூறி விட்டார்கள். இது தான் ஸலஃபி கொள்கையாகும்.

ஆனால் பின்னால் வந்த தாபியீன்கள் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் முகம் என்றால் திருப்தி என்றும் , கை என்றால் சக்தி என்றும் அர்ஷ் என்றால் அதிகாரம் என்றும் வியாக்கியானம் செய்தனர். இது கலபுகளின் அதாவது பின்வந்தவர்களின் கொள்கையாகும்.

இந்த விஷயத்தில் சஹபாக்கள் எடுத்த முடிவே சரியானது. இதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆக ஸலபி என்கிற இந்த வார்த்தை அல்லாஹ்வுடைய தோற்றம் பற்றிய விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவானதே தவிர இன்று பலரும் சொல்லி வருவது போல் எல்லா விஷயங்களிலும் ஸஹாபாக்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைக்  குறிப்பது அல்ல.

சஹாபாக்கள் மார்க்கம் தொடர்பாக எதைக் கூறினாலும் எந்த விளக்கம் அளித்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் ஸலஃபி கொள்கை என்று தவறான தோற்றத்தை இன்றைக்கு சமுதாயத்தில் சிலர் ஏற்படுத்துகின்றனர். சுருங்கச் சொல்வதென்றால் சஹாபாக்களைப் பின்பற்றுவது தான் ஸலஃபிக் கொள்கை என்று கூறுகின்றனர்.

பின்வரும் மக்கள் தன்னையே பின்பற்ற வேண்டும் என எந்த நபித்தோழரும் கூறவில்லை. ஏனைய நபித்தோழர்களைப் பின்பற்றுமாறும் நபித்தோழர்கள் கூறவில்லை. ஏன் ஒரு நபித்தோழர் இன்னொரு நபித்தோழரைப் பின்பற்றவில்லை. மாறாக அவர்கள் அனைவரும் குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்றச் சொன்னார்கள்.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்க ஆதாரம் என்ற நமது நிலைபாட்டிலேயே சஹாபாக்கள் இருந்தார்கள். இது தான் ஸலபுகளின் அதாவது நபித்தோழர்களின் கொள்கை.

குர்ஆன், ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதனை 80 களில் இருந்து நாம் கூறி வருகிறோம். தமிழகத்தில் பலரும் இதனைக் கூறி வந்தனர். ஜாக்கின் தலைவராக இருக்கும் எஸ்.கமாலுத்தீன் மதனீ குர்ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.  இதன் காரணமாகத் தன் அப்போது இயக்கத்துக்கு பெயர் வைக்கும் போது ஜம்மியது அஹ்லில் குரான் வல் ஹதீஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. அதாவது குர் ஆன் ஹதீஸை பின்பற்றுவோர் சங்கம் என்பது இதன் பொருள். ஜம்மியது அஹ்லில் குர் ஆன் வல்ஹதீஸ், வஸ்ஸலப் என்று பெயர் சூட்டவில்லை.

2000-ம் வரை கூட இதைத் தான் ஏகத்துவத்தைப் பேசும் அனைவரும் குர்ஆன் சுன்னாவைத் தவிர வேறு இல்லை என்று தான் கூறி வந்தார்கள்.

ஆனால் இன்றைக்கு இந்த இயக்கத்தினர் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டனர். குர்ஆன் ஹதீஸை அடுத்து ஸலபுகள் என்று மூன்றாவதாக ஸலபு மத்ஹபை கொண்டுவந்து விட்டனர்.

ஆரம்ப காலத்திலேயே தராவீஹ் பற்றி நாம் கூறும் போதும் இருபது ரக்அத்கள் இல்லை என்று மறுத்தோம்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் 20 ரக்அத்கள் தொழப்பட்டாலும் நாம் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறினோம்.

அப்போது அதனைச் சரி கண்டவர்கள் இன்று ஸஹாபாக்களைப் பின்பற்றுவோம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இப்பொழுது அஸ்திவாரத்தையே மாற்றி விட்டார்கள். அல்லாஹ் இவர்களுக்கு நேரான வழியை காட்டுவானாக.

அல்லாஹ்வின் உருவம் குறித்து ஜூலை மாதம் பீஜேக்கும், ஷேக் அப்துல்லா ஜமாலிக்கும் இடையே நடக்கவுள்ள் விவாதத்தில் இது குறித்து முழுமையாக இன்ஷா அல்லாஹ் தெளிவுபடுத்தப்படும்.

14.06.2010. 10:20

சூனியத்தால் என்ன செய்ய முடியும்

சூனியத்தால் என்ன செய்ய முடியும்  
கேள்வி
என் உறவுக்காரப் பெண் சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். முடிச்சுக்களில் ஊதும் பெண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு தேடுமாறு 113 வது அத்தியாயம் கூறுகிறது. 2:102 வசனத்திலும் இரண்டு வானவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது

முஸ்தஃபா

 பதில் :

சூனியம் இருக்கின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. அப்படி ஒரு கலை இருப்பதாகவே குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன.

சூனியம் என்றொரு கலை இருக்கின்றது. அக்கலையில் பொய்யும் பித்தலாட்டமும் மட்டுமே அடங்கியிருக்கும். அக்கலையால் தெளிவில்லாதவர்களை ஏமாற்றுவதைத் தவிர வேறெந்த தீங்கும் செய்ய முடியாது என்றே நம்ப வேண்டும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்விதச் சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் உள்ளது. முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுள்ளவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். இது பில்லி சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும் என்பதை நாம் நம்பலாம். கண்கூடாக இதை நாம் காண்பதால் மார்க்க அடிப்படையில் இதற்கு ஆதாரத்தைத் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச்சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்று நாம் ஆராயும் போது மக்களை ஏமாற்றுவதற்காகவும் கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம். உண்மையில் சூனியம் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை என்பதை அறியலாம்.

சூனியம் என்பதற்கு அரபுமொழியில் "ஸிஹ்ர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்ட பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பதற்குப் பித்தலாட்டம், மோசடி, பொய் ஏமாற்றும் தந்திர வித்தை கண்கட்டி வித்தை என்பது தான் பொருள் என்பதைச் சந்தேகமின்றி அறிந்து கொள்ளலாம்.

பொய் சொல்லுவதே சூனியக்காரனின் தன்மை. அவன் கூறுவதும் செய்வதும் பொய்யாகவே இருக்கும் என்று இறை மறுப்பாளர்கள் கருதிவந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآَيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ (23) إِلَى فِرْعَوْنَ وَهَامَانَ وَقَارُونَ فَقَالُوا سَاحِرٌ كَذَّابٌ (24) 40

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். "பெரும் பொய்யரான சூனியக்காரர்'' என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் (40 : 24)

وَعَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ(4)38

அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். "இவர் பெரும் பொய்யரான சூனியக்காரர்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.

அல்குர்ஆன் (38 : 4)

சூனியம் என்றால் அது பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்தது என்ற கருத்திலே இந்த வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது

فَلَمَّا جَاءَهُمْ مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ(36)28

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

அல்குர்ஆன் (28 : 36)

هَذِهِ النَّارُ الَّتِي كُنتُمْ بِهَا تُكَذِّبُونَ(14)أَفَسِحْرٌ هَذَا أَمْ أَنْتُمْ لَا تُبْصِرُونَ(15)اصْلَوْهَا فَاصْبِرُوا أَوْ لَا تَصْبِرُوا سَوَاءٌ عَلَيْكُمْ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ(16)52

அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள். நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே. இது சூனியமா? அல்லது நீங்கள் பார்க்காதவர்களா? "இதில் கருகுங்கள்! (இதைச்) சகித்துக் கொள்ளுங்கள்! அல்லது சகிக்க முடியாமல் இருங்கள்! (இரண்டும்) உங்களுக்குச் சமமே. நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கே கூலி கொடுக்கப் படுகின்றீர்கள்'' (எனக் கூறப்படும்).

அல்குர்ஆன் (52 : 13)

மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் நரகவாசிகள் இந்த உலகத்தில் வாழும் போது நரகவாழ்வு பொய் என கருதிக் கொண்டிருந்தனர். நரகத்தை அவர்கள் சிஹ்ர் அதாவது சூனியம் என்று கூறி மறுத்துள்ளார்கள். எனவே சிஹ்ர் என்றால் பொய் கற்பனை என்பதே அதன் அர்த்தம்.

கண்கட்டி வித்தை என்ற பொருளிலும் சிஹ்ர் என்ற வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنْ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ(14)لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ(15)15

அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், "எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்'' என்றே கூறுவார்கள்.

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு, தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான். உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும் எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதமாகும்.

கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து, அதைத் தொட்டுப் பார்த்தாலோ அல்லது சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாகவே இருந்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அது தந்திர வித்தை மேஜிக் என்று கூறுவோம். இறைத் தூதர்கள் செய்து காட்டியது முதல் வகையானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும் ஏமாற்றுதலும் கிடையாது.

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் வகையில் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக இவர் நமக்குத் தெரியாதவாறு தந்திரம் செய்கிறார். நம்மை ஏமாற்றுகிறார் என்று அவர்கள் நினைத்தனர். இதைக் குறிப்பிட ஸிஹ்ர் (சூனியம்) என்ற சொல்லையே பயன்படுத்தினர்.

ஸிஹ்ர் என்பதற்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள். இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார் என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறி நிராகரித்தனர்.

இறைத் தூதர்கள் செய்து காட்டிய அற்புதங்கள்

இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்களுக்கு அற்புதங்களை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவற்றை ஏற்க மறுத்தவர்கள் அதை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறியே மறுத்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. "இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 7:107

"மக்களை எச்சரிப்பீராக'' என்றும், "நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக'' என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? "இவர் தேர்ந்த சூனியக்காரர்'' (ஸிஹ்ர் செய்பவர்) என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 10:2

5:110, 6:7, 7:116, 10:75, 20:66, 20:69, 21:3, 26:31, 28:36, 28:48, 34:43, 37:14, 38:4, 40:23, 43:30, 46:7, 61:6 ஆகிய வசனங்களிலும் ஸிஹ்ர் என்ற வார்த்தை தந்திரம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூனியத்தை தெளிவாக விவரிக்கும் நிகழ்வு

சூனியம் என்றால் என்ன? சூனியத்தால் அதிகபட்சமாக என்ன செய்ய முடியும்? என்பதைத் தெள்ளத் தெளிவாக மூசா (அலை) அவர்களின் சம்பவம் எடுத்துரைக்கின்றது.

மூசா (அலை) அவர்களின் காலத்தில் சூனியக் கலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருந்தது. இக்கலையில் பாண்டித்துவம் பெற்ற எத்தனையோ பேர் இக்கலையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தச் சமுதாயத்தில் மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதியுடன் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதை அற்புதம் என்று எதிரிகள் நம்ப மறுத்தனர். மூசா செய்வது தந்திர வித்தை தான் அதாவது சூனியம் தான் என நம்பினர். ஃபிர்அவ்னுடன் இருந்த சூனியக்காரர்களும் மூசா நம்மைப் போன்ற ஒரு சூனியக்காரர் என்றே நம்பினர்.

எனவே சூனியக் கலையில் மூசா நபியை தங்களால் வென்றுவிட முடியும் என நம்பினர். மூசா (அலை) அவர்களைப் போட்டிக்கு அழைத்தனர். இந்தப் போட்டியில் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த அத்தனை சூனியக்காரர்களும் அழைக்கப்பட்டனர்.

وَقَالَ فِرْعَوْنُ ائْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ(79)10

"திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

அல்குர்ஆன் (10 : 79)

يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ(112)7

"இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.

அல்குர்ஆன் (7 : 111)

உலத்தில் உள்ள திறமையுள்ள அனைத்து சூனியக்காரர்களும் மூசா (அலை) அவர்களுக்கு எதிராக ஒன்று திரள்கிறார்கள். இவ்வாறு திரண்ட இவர்களால் மூசா (அலை) அவர்களைப் பைத்தியமாக்கவோ அவர்களது கை கால்களை முடக்கவோ முடியவில்லை. மாறாக போலி வித்தையைத் தான் செய்ய முடிந்தது.

قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ(116)7

"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று கேட்டனர். "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர்.

சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். "அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர்.

அல்குர்ஆன் (7 : 115)

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى(66)20

"இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

அல்குர்ஆன் (20 : 66)

சூனியக்காரர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் பாம்பாக மாற்றிக் காட்டவில்லை. மாறாக சீறுவது போல் ஒரு பொய்யான தோற்றத்தையே ஏற்படுத்தினர். இதைத் தான் பிரம்மாண்டமான சூனியம் என்று அல்லாஹ் வர்ணிக்கிறான்.

இன்றைக்கு இதையெல்லாம் விட பன்மடங்கு விஞ்சும் வகையில் மேஜிக்காரர்கள் வியத்தகு வித்தைகளைச் செய்து வருகின்றனர். எனவே சூனியம் என்பது சாதாரண கண்கட்டி வித்தையாகும் என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அடுத்து 113 ஆவது அத்தியாயத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று கூறப்படுகின்றது. இது சூனியம் செய்யும் பெண்களைக் குறிப்பதாக உங்கள் உறவினர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக சரியான விளக்கத்தை கேட்டுள்ளீர்கள்.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்

"முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்'' (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர்.

முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர்.

இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை.

இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிட மிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிலிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.

"முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்'' என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.

ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)

நாம் நல்லறங்கள் செய்து விடாதவாறு ஷைத்தான் தடைகளை ஏற்படுத்துகிறான். அந்தத் தடைகளைத் தான் இங்கே முடிச்சுக்களில் ஊதுதல் எனப்படுகிறது. அதிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் இறைவன் இவ்வசனத்தின் மூலம் நமக்குக் கற்றுத் தருகிறான்.

முடிச்சு என்றவுடன் நூலில் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள குறைபாட்டை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது முடிச்சு என்று தான் கூறினார்கள்.

எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள். (திருக்குர்ஆன் 20:26, 27)

நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஹதீஸ்களில் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது.

ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 651)

தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண்பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண் பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

 2 : 102 ஆவது வசனத்தைப் பற்றி விளக்கம் கேட்டுள்ளீர்கள்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். "நாங்கள் படிப் பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

அல்குர்ஆன் (2 : 102)

ஹாரூத் மாரூத் வானவர்களா?

மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் ஹாரூத் மாரூத் என்பவர்கள் வானவர்கள் என்றும் இந்த வானவர்களே சூனியத்தை கற்றுக் கொடுத்ததாக தவறான நம்பிக்கை மக்களிடம் இருக்கின்றது. முதலில் இந்த நம்பிக்கை சரியானதா? என்று பார்ப்போம். 

அதாவது சூனியத்தை இறைவன் புறத்திலிருந்து மலக்குகள் கற்றுக் கொண்டு அதை அம்மலக்குகள் மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக நம்புகின்றனர்.

ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்பிப்பது, குப்ர் எனும் இறை மறுப்பாகும். இத்தகைய இறை மறுப்பான காரியங்களை மலக்குகள் ஒரு போதும் செய்திருக்க முடியாது.

இந்த வசனம் சூனியம் தொடர்பாக அன்று நிலவிய பல தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கிறது.

1 ஸுலைமான் நபியுடன் இதைத் தொடர்புபடுத்துதல்

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த யூத குருமார்கள் சூனியத்தின் மூலமும், பிற தவறான வழிகளிலும் பொருளீட்டிக் கொண்டிருந்தனர். மேலும், இதை நியாயப்படுத்த பொய்யான வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

"இந்தக் கலை தங்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதன்று; மாறாக, சுலைமான் நபி அவர்கள் வழியாகவே எங்களை வந்தடைந்துள்ளது. எனவே இந்தக் கலையில் ஈடுபடுவதும், இதன் மூலம் பொருளீட்டுவதும் தவறானதல்ல'' என்பது அவர்களின் முதல் வாதம்.

"சுலைமான் நிராகரிப்பவராக இருந்ததில்லை. சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்களாக இருந்தனர்'' என்று அவர்களின் வாதம் இங்கே மறுக்கப்படுகிறது.

சூனியம் என்பது இறை மறுப்பாகும். இதற்கும் சுலைமான் நபிக்கும் சம்மந்தம் இல்லை. ஸுலைமான் நபி காஃபிராக இருந்தால் தான் இதைக் கற்றுக் கொடுத்திருக்க முடியும். அவர் காஃபிர் அல்ல. மாறாக ஷைத்தான்கள் தான் இதைக் கற்றுக் கொடுத்தனர் என்பது இதன் கருத்து.

2-வானவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுப்பார்களா

அடுத்து இந்தக் கலையை ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய இரு வானவர்கள் வழியாகவே நாங்கள் கற்றிருக்கிறோம் என்றும் கூறி அன்றைய யூதர்கள் மக்களை ஏமாற்றி வந்தனர்.

அதுவும் இவ்வசனத்தில் மறுக்கப்படுகிறது.

"அந்த இரு வானவர்கள் மீது சூனியம் அருளப்படவில்லை'' என்ற வாக்கியத்தின் மூலம் அவர்களின் இந்த வாதமும் மறுக்கப்படுகிறது.

அந்த இரண்டு மலக்குகள் என்பது எப்படி ஜிப்ரீல் மீகாயீலைக் குறிக்கும்? இவ்வசனத்தில் அந்தப் பெயர்களைக் காணவில்லையே? இதற்குப் பின் ஹாரூத் மாரூத் என்ற பெயர்கள் தானே இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளன? என்று பல கேள்விகள் பிறக்கின்றன.

இவ்வசனத்தில் மலகைனி எனக் கூறாமல் அல்மலகைனி என்று கூறப்படுகிறது. மலகைனி என்றால் இரு வானவர்கள் என்பது பொருள். அல்மலகைனி என்றால் அந்த இரு வானவர்கள் என்பது பொருள்.

"அந்த இரு வானவர்கள்' என்று எப்போது கூற முடியும்? முன்னரே கூறப்பட்டிருந்தால் தான் அவ்வாறு கூற முடியும். எனவே அந்த இரு வானவர்கள் என்ற சொல் பின்னால் கூறப்படும் ஹாரூத், மாரூத்தைக் குறிக்காது.

ஐந்து வசனங்களுக்கு முன்னால் கூறப்பட்டுள்ள ஜிப்ரீல் மீகாயீல் ஆகிய இரு வானவர்களையே அந்த இரு வானவர்கள் என்ற சொல் குறிக்கும்.

 ஜிப்ரீல், மீகாயீல் என்ற வானவர்களுக்கும், சூனியக் கலைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

அப்படியானால் ஹாரூத், மாரூத் என்போர் யார்? அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.

ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததையே இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று இவ்வசனம் துவங்குகின்றது.

ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் ஷைத்தான்களே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது தீய மனிதர்களை இங்கே ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுகின்றதா?

இதை முதலில் நாம் விளங்க வேண்டும்.

"ஷைத்தான்' என்ற சொல் உண்மையான ஷைத்தானுக்குப் பயன்படுத்தப்படுவது போலவே, மோசமான மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. (பார்க்க : அல்குர்ஆன் 2:14, 6:112, 114:5,6)

தனியாகப் பயணம் செய்பவன் ஷைத்தான் என்றும் (அபூதாவூத் 2240, திர்மிதீ 1597) கவிஞர்களை ஷைத்தான் என்றும் (முஸ்லிம் 4193) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான ஷைத்தான்களைக் குறிக்கின்றதா? என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை அகற்றுவதற்கே இறைவன் "ஹாரூத் மாரூத்'' என்கிறான்.

அதாவது இவர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் அவர்கள் ஹாரூத் மாரூத் எனும் பெயர் கொண்ட மோசமான மனிதர்களாவர் என்று அடையாளம் காட்டுகிறான்.

அரபு மொழியில் பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இதை "பத்ல்' என்று அரபு இலக்கணம் கூறும். ஷைத்தான்கள் என்பதன் விளக்கமே ஹாரூத், மாரூத் என்பது.

யூதர்களுக்கு சூனியக் கலையைக் கற்றுத் தந்தது சுலைமான் நபியுமன்று. ஜிப்ரீல், மீகாயீல் என்ற மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத், மாரூத் என்ற (மனித) ஷைத்தான்களே கற்றுத் தந்தனர் என்பது இது வரை நாம் கூறியவற்றின் சுருக்கமான கருத்தாகும்.

தப்ஸீர் கலையில் மேதையாகிய இமாம் குர்துபி அவர்கள் "இந்த வசனத்திற்குப் பல்வேறு வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும் இதுவே மிகச் சிறந்த விளக்கமாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

குர்துபி அவர்கள் குறிப்பிட்ட இந்த விளக்கத்தை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெழுதுகிறார்கள்.

சூனியத்தால் ஏற்படும் பாதிப்பு என்ன?

2 : 102 ஆவது வசனத்தில் சூனியக்கலை என ஒன்று இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதை நாம் மறுக்கவில்லை. சூனியக்கலை என ஒரு கலை இருப்பதாகவே நாமும் நம்புகிறோம். ஆனால் சூனியத்தால் உடலில் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று கூறுவதற்கு இந்த வசனத்தில் எந்த முகாந்தரமும் இல்லை.

சூனியக்கலையில் ஈடுபட்ட ஹாரூத் மாரூத் ஆகிய இருவரும் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் காரியத்தை கற்றுக் கொடுத்ததாக இவ்வசனம் கூறுகின்றது.

சூனியம் என்றால் பொய்யை உண்மை போல் காட்டும் வித்தை என்று முன்பு விளக்கம் அளித்திருந்தோம். இந்த விளக்கம் இந்த வசனத்திலும் பொருந்திப் போகின்றது.

பேச்சில் சூனியம் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

5146حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ جَاءَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا رواه البخاري

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து  இரண்டு  மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், " பேச்சில் சூனியம் (கவர்ச்சி) உள்ளது'' என்று சொன்னார்கள்.

புகாரி (5146)

கவர்ச்சியாகப் பேசினால் பொய்யைக் கூட உண்மை என்று நம்பவைத்து விடலாம். இதுவும் சூனியக் கலையின் ஒரு அம்சமாகும். கவர்ச்சியான பேச்சின் மூலம் கணவனிடம் மனைவியைப் பற்றி தவறான அப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். இதே போன்று கவர்ச்சியாகப் பேசி மனைவியிடம் கணவனைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். முடிவில் கணவன் மனைவி பிரியும் சூழல் இதனால் ஏற்படும்.

இப்பாவத்தைச் செய்யக்கூடிய பலர் சமுதாயத்தில் இருக்கின்றனர். இவர்கள் எத்தனையோ குடும்பங்களை தங்களது நாவால் பிரித்திருக்கின்றனர். ஷைத்தான் இவ்வாறே கணவன் மனைவியைப் பிரிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5032حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற(ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (5419)

எனவே சூனியக்கலை ஒன்று இருக்கின்றது. இக்கலையால் பொய்யை உண்மையாக காண்பிக்கும் வித்தையை மட்டுமே செய்ய முடியும். ஒருவரின் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தவோ உறுப்புக்களை செயலிழக்கச் செய்யவோ இதன் மூலம் முடியாது. பாமரர்களை ஏமாற்றி கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்த முடியும். .இக்கருத்தையே மேலுள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.
சூனியம் குறித்து முழுமையாக அறிய கீழ்க்காணும் செய்திகளையும் வாசிக்கவும்
பில்லி சூனியம் உண்மையா
ஸிஹ்ர் ஓர் ஆய்வு
சூனியம் என்பது கற்பனையே
நபிகள் நாயகத்துக்கு சூனியமா
ஹாரூத் மாரூத் மலக்குக்ளா
இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்
ஸிஹ்ர் ஓர் விளக்கம்

24.05.2010. 21:29




கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
6208033
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
78 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):