செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்

செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்

நல்வழியில் செலவிடும் போது பெருமைக்காக செய்கிறோனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது ஷைத்தானின் வேலையா
?

முஹம்மத் சைபுல்லா

பதில்

பொருளாதாரத்தைச் செலவிடும் போது இரகசியமாகவும் செலவிடலாம். பகிரங்கமாகவும் செலவிடலாம்.

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன்2:271

தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:274

ஆயினும் பகிரங்கமாக செய்யும் போது பெருமை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இரகசியமாகச் செய்யும் போது அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இரகசியமாகச் செலவிட்டு பெருமையடிக்கும் எண்ணம் தலைதூக்காமல் உள்ளதா என்று பார்க்கவும். சொல்லப்போனால் வலது கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்று சொல்லும் அளவுக்கு இரகசியமாகச் செலவிட்டால் நியாயத் தீர்ப்பு நாளில் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்

இரகசியமாக செய்தாலும் ஷைத்தான் பெருமையடிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தினால் அல்லாஹ்விடம் உடனடியாக பாவ மன்னிப்பு தேடிக் கொண்டால் அந்த எண்ணம் தோன்றியதற்காக அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். பெருமையடித்ததாக எடுத்துக் கொள்ளவும் மாட்டான்

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.  (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது  வர்கள் விழித்துக் கொள்வார்கள்.

திருக்குர் ஆன் 7:200, 201

28.04.2013. 08:52

ஆதம் (அலை) நபியா?

ஆதம் (அலை) நபியா?

(ஆதம் (அலை) அவர்கள் நபியல்ல என்ற கருத்தில் ஒரு பிரசுரம் கிடைத்தது. அதில் அபத்தமான வாதங்களை எடுத்து வைத்து அறைகுறையாக ஆய்வு செய்து ஆதம் நபியல்ல என்று வாதிட்டு இருந்தனர்.

ஆதம் நபி என்று சொல்பவர்கள் என்னென்ன ஆதாரங்களை வைக்கிறார்கள் என்பதைக் கூட அறியாமல் இவர்களாகவே வாதத்தையும் அதற்கான பதிலையும் வெளியிட்டு இருந்தனர்.

மேலும் ஆதம் நபி எனக் கூறும் பலவீனமான ஹதீஸையும் எடுத்துச் சொல்லி அதற்குப் பதில் சொல்லி இருந்தனர். அது நாம் எடுத்து வைக்காத வாதம்.

எனவே நாசர் அவர்களுக்கு அப்பிரசுரத்தை அனுப்பி ஆதம் நபி என்பதற்கான ஆதாரங்களையும் அர்த்தமற்ற வாதங்களுக்கான பதிலையும் தயார் செய்து அனுப்புமாறு கேட்டிருந்தோம். அவர் ஆய்வு செய்து அனுப்பியதை இங்கே வெளியிடுகிறோம்.)

முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் நபியா? இல்லையா? என்பதில் சிலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதே நம்முடைய உறுதியான நிலைப்பாடாகும். இதற்கு திருமறைக்குர்ஆன், மற்றும் நபிமொழிகள் சான்றாகத் திகழ்கின்றன.

முதலாவது ஆதாரம்

ஒருவர் நபி என்பதற்கு முதன்மையான ஆதாரம் அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க ரீதியிலான சட்டதிட்டங்கள் அவருக்கு மட்டுமே  வஹியாக அறிவிக்கப்படும். மார்க்கச் சட்டங்கள் நபிமார்கள் தவிர வேறு யாருக்கும் அறிவிக்கப்படாது.

அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்புவதில்லை.

(அல்குர்ஆன் 4  : 64)

மேற்கண்ட வசனம் அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க ரீதியிலான வழிகாட்டுதல்களை அல்லாஹ் நபிமார்கள் மூலமாக மட்டுமே தருவான் என்பதற்கு தெளிவான சான்றாகும். இதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

அல்லாஹ் நபி அல்லாதவர்களுக்கு மார்க்க ரீதியிலான சட்டதிட்டங்களை வஹியாக அறிவிக்க மாட்டான்.

மக்களுக்குத் தேவையான மார்க்க ரீதியிலான சட்டதிட்டங்களை அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு வஹியாக அறிவித்துள்ளான். இதிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பது நிரூபணமாகிறது

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ [البقرة/38]

"இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம்.

(அல்குர்ஆன் 2 : 38)

ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى (122) قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى  [طه/122، 123]

பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர் வழி காட்டினான்.  இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.

(அல்குர்ஆன் 20 : 122, 123)

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு தன்னிடமிருந்து நேர்வழி வரும் என்று குறிப்பிடுகின்றான். அல்லாஹ் ஒட்டு மொத்த சமுதாயத்தை நோக்கி பேசுவதாக மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டாலும் அதில் முதலில் வருபவர் ஆதம் (அலை) அவர்கள்தான்.

மற்றொரு வசனத்திலிருந்தும் ஆதம் (அலை) அவர்களுக்கு மார்க்கச் சட்டங்கள் அருளப்பட்டடிருந்தன என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ [المائدة/27]

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

(அல்குர்ஆன் 5 : 27)

நூஹ் (அலை) அவர்கள்தான் முதல் நபி என்றால் ஆதம் (அலை) அவர்களின் மகன்களுக்கு இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும் ஒரு வணக்கத்தை கற்றுக் கொடுத்தது யார்? என்ற கேள்வி ஏற்படும். ஏனெனில் ஆதம் (அலை) அவர்களின் இருமகன்களும் நூஹ் (அலை) அவர்களுக்கு முந்தியவர்கள் ஆவர்.

எனவே அவர்களுக்குரிய ஷரியத்தை ஆதம் (அலை) அவர்கள் மூலமே அவர்கள் பெற்றிருக்க முடியும் என்பது தெளிவாகிறது

எனவே ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்த காரணத்தினால் அவருடைய மகன்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை ஆதம் (அலை) அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டனர் என்பதே சரியானதாகும்.

இதன் மூலமும் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

சந்தேகமும் விளக்கமும்

மர்யம் (அலை), துல்கர்னைன் (அலை), தாலூத்மூஸா நபியின் தாயார் , போன்ற நல்லடியார்களுக்கும் வஹி அறிவித்ததாக திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. எனவே அவர்களையும் நபி என்று குறிப்பிடுவீர்களா? என சிலர் இவ்விடத்தில் வினா எழுப்புகின்றனர்.

இவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்ட செய்திகள் அவரவருக்குத் தேவையான, அல்லது ஒரு குழுவிற்குத் தேவையான சொந்த விஷயங்கள் ஆகும். இவர்களுக்கு அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க ரீதியிலான சட்டங்கள் வஹியாக அறிவிக்கப்படவில்லை.

நபிமார்களுக்கம், நபி அல்லாத நல்லடியார்களுக்கு அறிவிக்கப்படும் வஹிக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் மிகத் தெளிவானதாகும்

அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க அடிப்படையிலான வழிகாட்டுதல்களை அல்லாஹ் நபிமார்கள் மூலமாக மட்டுமே தருவான். ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் மார்க்க அடிப்படையிலான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளான். எனவே அவர்கள் இறைத்தூதர் ஆவார்கள். திருமறைக்குர்ஆனில் வஹி அறிவித்ததாகக் கூறப்படும் ஏனைய நல்லடியார்களுக்கு அறிவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க அடிப்படையிலான செய்திகள் அல்ல.  

இரண்டாவது ஆதாரம்

صحيح ابن حبان (25/ 421، بترقيم الشاملة آليا(

6296 - أخبرنا محمد بن عمر بن يوسف ، حدثنا محمد بن عبد الملك بن زنجويه ، حدثنا أبو توبة ، حدثنا معاوية بن سلام ، عن أخيه زيد بن سلام ، قال : سمعت أبا سلام ، قال : سمعت أبا أمامة ، أن رجلا ، قال : يا رسول الله أنبي كان آدم ؟ قال : « نعم ، مكلم » ، قال : فكم كان بينه وبين نوح ؟ قال : « عشرة قرون » . أبو توبة اسمه : الربيع بن نافع

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்அல்லாஹ்வின் தூதரே ! ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்தார்களா? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ஆம்! அவர் (இறைவனுடன்) உரையாடியவர்என்று குறிப்பிட்டார்கள். அந்த மனிதர்ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் எத்தனை ஆண்டுகள் இடைவெளி?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள்பத்து தலைமுறைகள் (இடைவெளியாகும்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : இப்னு ஹிப்பான் (6296)

மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதனுடைய அறிவிப்பாளர்களான அபுஸ்ஸல்லாம், ஸைத் பின் அபீ ஸல்லாம், அபூ தவ்பா அர்ரஃபீ பின் நாஃபிவு, ஆகியோர் முஸ்லிமுடைய அறிவிப்பாளர்கள் ஆவர். இன்னும் நம்பகமானவர்களும் ஆவார்.

முஆவியா பின் அபீ ஸல்லாம் என்பவர் புகாரி, மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டின் அறிவிப்பாளராவார்.

முஹம்மத் பின் அப்துல் மலிக் பின் ஸன்ஜவைஹி, மற்றும் முஹம்மத் பின் உமர் பின் யூசுஃப் ஆகிய இருவரும் உறுதியான அறிவிப்பாளர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

சில பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஆதாரமாகக் கொண்டுவரவில்லை. சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டுள்ள செய்தியை மட்டுமே நாம் ஆதாரமாகக் காட்டியுள்ளோம்.

இந்தன் ஹதீஸ் ஆதம் அலை அவர்கள் நபி என்று மட்டும் சொல்லவில்லை. அவர் நபிமார்களில் தனிச்சிறப்பு வழங்கப்பட்ட நபி என்பதும் உறுதியாகிறது. மூஸா நபியுடன் அல்லாஹ் நேரடியாகப் பேசியது போல் ஆதம் (அலை) அவர்களிடமும் பேசியுள்ளான்.

இத்தூதர்களில் சிலரை, மற்றும் சிலரை விடச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:253

மூன்றாவது ஆதாரம்

மறுமை நாளில் மக்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வதற்காக ஒருவரைத் தேடுவார்கள். ஆதம் (அலை), நூஹ் (அலை), இப்ராஹிம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), என்று ஒவ்வொருவராகச் சென்று இறுதியாக நபி (ஸல்) அவர்களிடம் வருவார்கள். இறுதியாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வாரகள் என்ற செய்தி புகாரி, முஸ்லிம், இன்னும் பல கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

மேலும் மிஃராஜ் பயணத்தின் போது முஹம்மது  நபியவர்கள், மூஸா (அலை), இபுறாஹிம் (அலை), இத்ரீஸ் (அலை), யூசுப் (அலை), ஈஸா (அலை), யஹ்யா (அலை), ஹாரூன் (அலை), போன்ற நபிமார்களையும் இவர்களுடன் ஆதம் (அலை) அவர்களைச்  சந்தித்ததாகவும் புகாரி, முஸ்லிம் போன்ற பல நூற்களில் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் கூறப்பட்டுள்ள அனைத்து நபிமார்களின் பெயர்களுடன் ஆதம் (அலை) அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

நாம் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் தான் என்பதற்கு முதல் ஆதாரமாக திருமறைக் குர்ஆன் வசனத்தையும், இரண்டாவதாக ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் கண்டோம்.

எனவே மக்கள் பரிந்துரைக்காக ஆதம் (அலை) அவர்களைச் தேடிச் செல்வது அவருக்கு முதல் மனிதர், அவரை அல்லாஹ் கையால் படைத்திருப்பது, மற்றும் மலக்குமார்களை அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு கூறியது போன்ற தனிச்சிறப்புகள் இருப்பதுடன் அவர் நபியாகவும் இருக்கின்ற காரணத்தினால்தான் என்பது தெளிவாகிறது.

ஏனெனில் மக்கள் ஒவ்வொரு நபியிடமும் சென்று அவருக்கு அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்புகளைக் கூறி அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறார்கள். அது போன்ற ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருக்கின்ற காரணத்தினால்தான் அவருடைய தனிச் சிறப்புகளைக் கூறி தங்களுக்காக பரிந்துரை செய்யுமாறு ஆதம் (அலை) அவர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

மேலும் மிஃராஜ் பயணத்தில் நபியவர்கள் ஒவ்வொரு வானத்திலும் ஒரு நபியைப் பார்க்கின்றாரகள்ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருக்கின்ற காரணத்தினால்தான் அவர்களையும் முதல் வானத்திலே நபியவர்கள் பார்க்கின்றார்கள். இதிலிருந்தும் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பது தெளிவாகிறது.

ஆதம் (அலை) அவர்கள் முதல் நபி இல்லை என்று கூறுபவர்கள் சிலவாதங்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றில் சிலவற்றிற்கு நாம் முன்னர் பதில் கூறிவிட்டோம். மற்ற சில வாதங்களுக்குரிய பதிலை இப்போது காண்போம்.

கேள்வி  1

إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ

நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம். (4:163)

இந்த வசனத்தில் நபி நூஹ் (அலை) அவர்களுக்கும் அவர்களுக்கு பின் வந்த நபிமார்களுக்கும் எவ்வாறு நாம் வஹீ அறிவித்தோமோ அதே போன்று உமக்கும் அறிவிக்கிறோம் என்று அல்லாஹ் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து கூறுகிறான்.

ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்திருந்தால் ஆதமுக்கு நாம் எவ்வாறு வஹீ அறிவித்தோமோ அவ்வாறே உமக்கு அறிவித்தோம் என்று அல்லாஹ் கூறியிருப்பான். ஆனால் இறைவன் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு அறிவித்ததைப் போன்று உமக்கு அறிவிக்கிறோம் என்று அல்லாஹ் கூறுவதின் மூலம் ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் தூதுத்துவத்தை வழங்கவில்லை என்பதை  இந்த வசனத்தின் மூலம் நமக்கு கூறுகிறான்.

என்று கூறுகின்றனர்.

தெளிவான பதில்

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு வஹி அறிவித்தான் என்பதைப் பற்றிக் கூறுகிறான்.

நூஹூக்கும் அவருக்குப் பின்வந்த நபிமார்களுக்கும் அல்லாஹ் எவ்வாறு வஹி அறிவித்தானோ அது போன்றுதான் நபியவர்களுக்கும் அல்லாஹ் வஹி அறிவித்துள்ளான் என்பதே மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.

ஆதம் (அலை) அவர்களின் பெயரை அல்லாஹ் குறிப்பிடாத காரணத்தினால் அவர் நபி இல்லை என்று கருத்து வராது. மாறாக ஆதம் (அலை) அவர்களுக்கு வஹி அறிவித்ததைப் போன்று நபியவர்களுக்கும், ஏனைய நபிமார்களுக்கும் அல்லாஹ் வஹி அறிவிக்கவில்லை என்பதே மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கக் கூடிய கருத்தாகும்.

ஏனெனில் ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதராக இருந்த காரணத்தினால் அவருக்கு அல்லாஹ் அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தது போன்று நேரடியாகப் பேசி அறிவித்துக் கொடுத்தான். இதை முன்னர் நாம் எடுத்துக்காட்டிய நபிமொழியில் இருந்து அறிந்து கொள்ளலாம். அதில் ஆதம் நபி மட்டுமல்ல முகல்லம் இறவனுடன் நேரடியாகப் பேசுபவர் என்று நபியவர்கள் கூறியுள்ளனர். ஆதமுக்கு அறிவித்தது போல் நபியவர்களுக்கு வஹீ அறிவிக்காமல் நூஹ் நபிக்கு அறிவித்தது போல் தான் அறிவித்துள்ளான்..

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வஹி அறிவித்ததைப் போன்று மற்ற எந்த நபிக்கும் அல்லாஹ் வஹி அறிவிக்கவில்லை என்பதே சரியான கருத்தாகும்.

கேள்வி : 2

ஷஃபாஅத் பற்றிய ஹதீஸில் மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்றுநீங்கள்தான் பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த தூதர்களில் முதலாமவர்என்று கூறுவார்கள் என வந்துள்ளது. ( பார்க்க புகாரி 4476, 4712, 6565)

மேற்கண்ட ஹதீஸில் நூஹ் (அலை) அவர்கள்தான் பூமியிலுள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் என்று வருகிறது. எனவே நூஹ் (அலை) அவர்கள்தான் முதல் தூதர். ஆதம் நபி கிடையாது.

தெளிவான பதில் 

மேற்கண்ட செய்தியில் பொத்தாம் பொதுவாக நூஹ் (அலை) அவர்கள் முதல் தூதர் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக.

يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الْأَرْضِ

நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு முதல் தூதர் ஆவீர். (புகாரி 3340)

يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى الأَرْضِ

மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம், "நூஹே! நீங்கள் பூமிக்கு முதல் ரசூல் ஆவீர்கள்'' என்றும் கூறுவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் - 327)

أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ

நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் ஆவீர். (புகாரி 4476)

                   أَوَّلَ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ

பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் நபி (நூஹ்) ஆவார். (7440)

உலகத் தூதராக அனுப்பப்பட்ட முதல் தூதர் நூஹ் அவர்கள் தான். அதனால் தான் அவரது காலத்தில் முழு உலகுக்கும் பிரளயத்தை ஏற்படுத்தில் அழித்தான். அதற்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்கள் ஒரு குடும்பத்துக்கோ ஒரு பகுதிக்கோ ஒரு கோத்திரத்துக்கோ தான் அனுப்பப்பட்டனர். பூமியில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் என்பதில் இருந்து இதனை அறியலாம்.

அதுமட்டுமின்றி நூஹ் நபி தான் முதல் நபி என்றால் அவருக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு இறைவன் எந்த வழிகாட்டலையும் வழங்கவில்லை என்று ஆகும். அதுவரை யார் வேண்டுமானாலும்ம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அல்லாஹ் விட்டுவிட்டான் என்று ஆகும். இறைத்தூதர் வராவிட்டால் தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தையும் அவர்கள் செய்திருக்க முடியாது.

27.04.2013. 21:11

சிறுவர்கள் தற்கொலை செய்தால் நரகமா

சிறுவர்கள் தற்கொலை செய்தால் நரகமா

கேள்வி

ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளில் சிலர் மார்க் குறைவாகவோ அல்லது பெயில் ஆகிவிட்டால் தற்கொலை செய்து கொள்கின்றனா். இது அறியாத வயசு. தற்கொலை செய்வது மார்க்கப்படி தப்பு என்று இந்த பசங்களுக்குத் தெரியாது தானே? அப்போ இவர்களுக்கு நிரந்தர நரகம் தானா? இது எப்படி சரி ஆகும். இரண்டவது கேள்வி தற்கொலை செய்ய தூண்டியவா்கள் மீது பாவமா? இல்லை தற்கொலை செஞ்சவங்க மீது பாவமா?

சல்மான்

தற்கொலை செய்தால் நிரந்தர நரகம் என்று நமது மார்க்கம் சொல்கிறது. இது பள்ளி மாணவர்களுக்குப் பொருந்துமா? என்று கேட்கிறீா்கள்.

பள்ளி மாணவா்களில் இரு வகையினா் உள்ளனா்.

போதிய விபரமறியாத பருவமடையாத சிறுவர்கள் ஒரு வகை. இத்தகைய சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டால் இவா்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை. காரணம் சிறுவன் பெரியவனாகும் வரை அவன் செய்கிற தீமைகள் பதிவு செய்யப்படாது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கின்ற வரை

2. சிறுவன் பெரியவராகும் வரை

3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: ஸாயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

ஆனால் பருவமடைந்த விபரமுள்ள மாணவர்கள் இது போன்று தற்கொலை செய்து கொண்டால் அவா்களுக்கு தற்கொலை செய்ததற்கான தண்டனை இறைவனிடத்தில் உண்டு. இதை அறியாத வயசு என்று சொல்ல முடியாது. நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியக்கூடிய பருவமாகும். இவா்கள் மீது அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலையும், தூதருடைய வழிகாட்டுதல்களையும் அறிந்து கொள்வது கட்டாயமாகும். இந்நிலையில் மார்க்க போதனைகளை அறிந்து கொள்ளாதது இவா்களது தவறாகும்.

மார்க்க போதனைகளை அறிந்து கொள்ளாத காரணத்தால் தான் நரகில் நுழைந்தோம் என்று நரகவாசிகள் மறுமை நாளில் புலம்புவதாக இறைவன் தெரிவிக்கின்றான்.

கோபத்தால் அது (நரகம்) வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் ''எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

அல்குர்ஆன் 67:8

நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 67: 10

மேலும் சில விஷயங்களைப்பற்றி யாரும் விளக்கிச் சொல்லாமலே அதை தீமை என்று புரிந்து கொள்ள முடியும்.

பிறா் பொருளைத் திருடுதல், கொலை, கொள்ளை, விபச்சாரம் போன்றவைகளை யாரும் தீமை என்று கற்றுத்தர வேண்டியதில்லை. இவை தவறு என்று அனைவரும் அறிந்து வைத்திருக்கவே செய்கிறோம். தற்கொலையும் இந்த வகையில் உள்ளது தான். இதை யாரும் சரிகாண மாட்டார்கள்.

எனவே விபரமுள்ள பருவமடைந்த மாணவா்கள் தற்கொலை செய்திருந்தால் அவா்களுக்கு தற்கொலைக்கான தண்டனை உண்டு.

மேலும் இந்த பதிலையும் பார்க்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/tharkolai_seythavrku_pavamannippu/

ஒருவா் தற்கொலை புரிய யார் தூண்டுதலாக இருக்கிறார்களோ அத்தீமையின் பங்கு கூலி அவருக்கும் உண்டு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு'' என்று கூறினார்கள்.

முஸ்லிம் 1848

19.04.2013. 23:19

ஷைத்தான் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பா

ஷைத்தான் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பானா

ஷைத்தான் எந்த நபித்தோழருக்கு ஆயதுல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தான்?

அஹ்மத்

ஷைத்தான் ஆயத்துல் குர்ஸீயைக் கற்றுக் கொடுத்த நபித்தோழர் அபூஹுரைரா (லி) ஆவார்.

அபூஹுரைரா (லி) அவர்கள் கூறுகிறார்கள்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன்  என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, "உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்' என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள்.- (இறுதியில், திருட வந்த) அவன், "நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது "ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்'' என்று கூறினான். (இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், "அவன் பெரும் பொய்யனாயிருப்பினும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கின்றான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்'' என்று கூறியதாகவும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் சீரீன் (ரஹ்),

நூல் : புகாரி 5010

இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்பவன், மனித சமுதாயத்தை வழி கெடுப்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ள உண்மையான ஷைத்தான் அல்ல. தீய மனிதனைத் தான் இங்கு ஷைத்தான் என்று கூறப்படுகிறது.

திருக்குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும். நேரடிப் பொருளில் புரிந்து கொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ மற்ற ஹதீஸ்களுக்கோ இஸ்லாத்தின் அடிப்படைக்கோ முரணாக இருந்தால் அப்போது ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களின் கண்களுக்குத் தென்படாமல் வாழும் நிலையை ஷைத்தான்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வந்தவன் ஷைத்தானாக இருந்தால் அவனை அபூஹுரைரா (ரலி) அவர்களால் பார்த்திருக்க முடியாது.

ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவனைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அவனைத் தன் கைகளால் பிடித்தும் கொள்கிறார்கள். வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருக்கவில்லை. கெட்ட மனிதனாகவே இருந்தான் என்பதை இதன் மூலம் அறியலாம்.

மேலும்  மனிதர்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் ஷைத்தானால் வர இயலும். இது தான் ஷைத்தான்களின் எதார்த்த தன்மையும் கூட. அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருந்தால் அவன் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் வந்து திருடிச் சென்றிருப்பான்.

ஆனால் அவனால் அவ்வாறு செய்ய இயலவில்லை. திருட வந்தவன் அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சுவதிலிருந்து அவன் கெட்ட மனிதன் தான் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

ஷைத்தான்களின் உணவு முறையும் மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும் வேறுபட்டதாகும். கால்நடைகளின் சாணங்களும் எலும்புகளும் கரிக்கட்டைகளும் தான் ஜின்களின் உணவு என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் முன்பு கூறிய பொருட்களை திருடுவதற்காக வரவில்லை. மனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களைத் திருடுவதற்காகவே வந்துள்ளான். வந்தவன் மனிதன் தான் என்பதை இக்கருத்து மேலும் வலுவூட்டுகிறது.

கெட்ட செயலை செய்பவர்களையும் கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ள.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (2 : 14)

கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் )டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3275)

தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லும் மனிதர்களை ஷைத்தான்கள் என்று இந்தச் செய்தியில் நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்ற வார்த்தையும் இது போன்றே நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்டவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருடவந்தவனை பொய்யன் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பது இதையே உணர்த்துகிறது.

ஸகாத் பொருளைத் திருடுவதற்காக வந்தவன் அபூஹுரைரா (ரலி) அவர்களை ஏமாற்றி திருட்டு வேளையில் ஈடுபட்டதால் அவனை ஷைத்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் உண்மையில் அவன் மனிதனாகத் தான் இருந்தான்.

05.04.2013. 01:58

ஜின்களிடம் வைத்தியம் பார்க்கலாமா

ஜின்களிடம் வைத்தியம் பார்க்கலாமா

ஷாஹுல்

ஜின்களைப் பற்றி இஸ்லாம் கூறும் அடிப்படை அறிவு இல்லாததால் இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஜின்கள் எனும் படைப்பு மனிதர்களின் கண்ணுக்கு புலப்பட மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான்.

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

அல்குர்ஆன் 7 : 27

ஜின்கள் நம்முடைய பார்வைக்குத் தெரியவே மாட்டார்கள் எனில் அவர்களிடம் சென்று எப்படி வைத்தியம் பார்க்க முடியும்?

அவர்கள் எங்கிருந்து கொண்டு வைத்தியம் பார்க்கிறார்கள்? இது வரை எத்தனை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார்கள்?

ஜின்கள் மனிதர்களுக்கு வைத்தியம் பார்ப்பார்கள் என்பது புருடாவாகும்.

நான் ஜின்களை வசப்படுத்தி வைத்திருக்கின்றேன், அதன் மூலம் எந்தக் காரியங்களையும் சாதிக்க முடியும் என்று சில ஏமாற்று பேர்வழிகள் ஒன்றுமறியாத அப்பாவிகளிடம் கூறி, ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அது போன்ற யாரோ ஒருவர் உங்களிடம் சொன்ன கட்டுக்கதையை நம்பி இவ்வாறு கேட்டிருக்கீறீர்கள்.

ஜின்களை பற்றி முழுமையாக அறிய இந்த நூலை வாசிக்கவும்.

http://onlinepj.com/books/jin_shaithan/

மேலும் கீழ்க்காணும் ஆக்கங்கள் அனைத்தையும் பார்க்கவும்

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/183-jingalin-atral/

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/327/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/jin_meladuma/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/jin_kelvi_ethirkelvi/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/jinjkalai_kana_mutiyuma/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/jingal_manitha_udalil_nuzaivarkala/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/jingal_manithanukul_meladuma/

05.04.2013. 01:26

உமர்(ரலி) பேசியவை எல்லாம் வஹியா

உமர்(ரலி) பேசியவை எல்லாம் வஹியா

மூன்று விஷயங்களில் அல்லாஹ் உமர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை வஹியாக தெரிவித்தான் என்ற ஹதீஸ் கேள்விப்பட்டுளேன். அந்த மூன்று  விஷயங்கள் என்ன என்பதை விளக்கவும்

ஹாலித்.B

துபாய்

அந்த ஹதீஸ் எது என்பதை விளக்குவதற்கு முன் அந்த ஹதீஸை சிலர் தவறான கொள்கைக்கு ஆதாரமாகப் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறோம்.

நீங்கள்
சுட்டிக்காட்டும் ஹதீஸ் குர்ஆன் ஹதீஸை விட்டும் மக்களை ஓரம் கட்ட நினைப்பவர்கள் அடிக்கடி தங்களின் ஆதாரமாக எடுத்துக் காட்டும் ஹதீஸாகும்.

அதாவது உமர் (ரலி) அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அல்லாஹ் தனது வசனங்களை அருளிக் கொண்டு இருந்தான் என்று கூறி மக்களை வழிகெடுத்து வருகின்றனர்உமர் (ரலி) அவர்கள் எதைச் சொன்னாலும் அது வஹீ தான் என்று சொல்லுமளவுக்கு ஆதாரமற்றவைகளையும் நியாயப்படுத்தி வருகின்றனர்.

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுக்கு முரணாக உமர் (ரலி) அவர்கள் செய்த சில காரியங்களையும் நியாயப்படுத்த இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

உதாரணமாக ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்று கூறினால் அது ஒரு தலாக்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கருதப்பட்டு வந்ததுஅபூபக்ர் (ரலி) ஆட்சிக்காலத்திலும் இவ்வாறே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலிஅவர்களின் ஆட்சியின் துவக்கத்திலும் இவ்வாறே இருந்தது. நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரம் காட்டுகிறார்கள்எனவே மூன்று தலாக் எனக் கூறினால் மூன்று தலாக் என்று சட்டம் இயற்றுவேன் என உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு அவ்வாறு சட்டம் இயற்றினார்கள்.

பார்க்க : முஸ்லிம் 3748, 3747, 3746

உமர் (ரலி) அவர்களின் இந்தச் சட்டம் நபிவழிக்கு மாற்றமானது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகச் சொல்லி இருந்தும் உமர் (ரலி) அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் எனக் கூறி இதை எல்லா மத்ஹபுகளும் ஏற்றுக் கொண்டதற்கு உமர் (ரலி) அவர்கள் பேசுவது ஏறக்குறைய வஹீதான் என்ற நம்பிக்கையே காரணமாகும்.

ஆனால் இந்த ஹதீஸில் இவர்கள் வாதிடுவது போன்ற கருத்து எதுவும் இல்லை.

உமர் (ரலி) அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்து அதற்கேற்ப அல்லாஹ் சட்டம் இயற்றினான் என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. உமர் என்ன சொல்கிறார் என்று கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் படைத்தவனுக்கு இல்லை.

நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் இது தான்:

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் என் இறைவனின் கருத்துக்கு ஏற்ப நானும் கருத்துக் கொண்டேன்:

1..அல்லாஹ்வின் தூதரே! மகாமு இப்ராஹீமை தொழுமிடமாக நாம் ஆக்கலாமே என்று கேட்டேன். அப்போது, "மகாமு இப்ராஹீமில் ஒரு பகுதியை தொழும் இடமாக்கிக் கொள்ளுங்கள்'' எனும் (2:125 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

2. பர்தா (சட்டம்) குறித்த இறைவசனமும் இவ்வாறே இறங்கியது"அல்லாஹ்வின் தூதரே! தங்களின் மனைவியரிடம் நல்லவரும் கெட்டவரும் உரையாடுகின்றனர். எனவே தங்கள் மனைவியரை ஹிஜாபைப் பேணுமாறு தாங்கள் பணிக்கலாமே! '' என்று சொன்னேன். அப்போது ஹிஜாப் குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.

3. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டபோது நான் அவர்கüடம், "இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச்  சிறந்த துணைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்'' என்று சொன்னேன். அப்போது இந்த (66:5ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி 402

முஸ்லிமுடைய அறிவிப்பில் மேலும் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் என் இறைவனின் கருத்துக்கு ஏற்ப என் கருத்து அமைந்து விட்டது.

அவை: 1. மகாமு இப்ராஹீம் விஷயத்தில், 2. பர்தா விஷயத்தில், 3. பத்ருப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் விஷயத்தில்.

நூல் முஸ்லிம் 6359

இதில் பத்ருப்போரில் பிடிக்கப்பட்டவர்கள் விஷயம் மூன்றாவது விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. 

முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முயன்ற போது அதை உமர் (ரலி) அவர்கள்ஆட்சேபித்தார்கள். அதையும் மீறி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இனிமேல் இவ்வாறு செய்யக் கூடாது என்று அதைத் தடை செய்து அல்லாஹ் வசனத்தை அருளினான்.

பார்க்க : புகாரி 1269, 1366, 4670, 4671, 4672, 5796

இது தான் நீங்கள் குறிப்பிடும் அந்தச் செய்தி. இந்தச் செய்தியில்உமர்(ரலி) அவர்கள் பயன்படுத்திய வாசகம் முதலில் கவனிக்கத்தக்கது. வாஃபக்து ரப்பீ என்று அவர்கூறுகிறார். என்இறைவனின்கருத்துக்கு  ஏற்ப என் கருத்து அமைந்துவிட்டது என்பது இதன் பொருள்.

என்  கருத்துக்கு  ஏற்ப  வஹீ  வந்தது  எனக்  கூறாமல்  இறைவனின் கருத்துக்கு  ஏற்ப என்  கருத்தும்  அமைந்து  விட்டது  தற்செயலானது  என்று  கூறுகிறார்.

இறைவன்  முன்னரே  இப்படித்தான்  முடிவு  செய்து  வைத்திருந்தான்.  நான் சொன்னதைப்பார்த்து  அதற்கேற்ப  வஹீ  அருளவில்லை  என்ற  பொருள்பட இவ்வாசகத்தை  அவர்  பயன்படுத்தியுள்ளார்.

குர்ஆனை  அறியாத  ஒருவர்  குர்ஆனில்  இப்படி  ஒரு  வசனம்  இருந்தால்  நன்றாக இருக்குமே  என  நினைக்கிறார் . பின்னர்  அவர் குர்ஆனை  வாசிக்கும்  போது  அவர் எண்ணியது  போல்  ஒரு  வசனம்  இருப்பதைக்  காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இதை  நாம்  எப்படி  புரிந்து  கொள்வோம்?  இவர்  எண்ணியதைப்  பார்த்து  விட்டு அல்லாஹ்  அந்த  வசனத்தை  அருளினான்  என்று  சொல்வோமா?  அல்லது  இப்படி ஒரு  வசனம்  அருளப்படும்  என்பதை  ஞானக்  கண்ணால்  இவர்  அறிந்து  கொண்டு இப்படி நினத்தார்  என்று கூறுவோமா

இரண்டுக்கும்
  எந்தச்  சம்மந்தமும் இல்லைதற்செயலாக இது அமைந்து விட்டது என்று தான் கூறுவோம்

இது போல் தான் உமர் (ரலி) அவர்கள் கூற்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் விஷயத்தில் இது போன்ற நிலை ஏற்படும் போது சரியாகப் புரிந்து கொள்ளும் நாம் இறைவன் விஷயத்தில் மட்டும் ஏறுக்கு மாறாக புரிந்து கொள்கிறோம்.

ஒரு மனிதர் ஒரு கருத்தை நம்மிடம் சொல்லும் போது இதைத் தான் நானும் நினைத்தேன் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் கூறுகிறோம். அந்த மனிதர் நமது கருத்தைத் தான் சொல்லப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. நாமும் அவரது கருத்தில் தான் இருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியாது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமல் தற்செயலாக ஒத்துப் போன விஷயங்கள் என்பது போல் தான் உமர் (ரலி) அவர்களின் கூற்றையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தியும் இதில் உள்ளது. உமர் (ரலி) அவர்கள் தற்செயலாக இறைவன் கருத்துடன் ஒத்துப் போன விஷயங்கள் மொத்தமே ஐந்து தான். இவற்றைத் தவிர வேறு விஷயங்கள் இல்லை என்பது தான் அந்தச் செய்தி. இந்த ஐந்தைத் தவிர மற்ற விஷயங்களில் வஹீ வருவதற்கு முன் அதற்கேற்ப இவர் கருத்துக் கூறியதில்லை எனும் போது அவர் சொல்வதெல்லாம் வஹீ தான் என்பது போல் வியாக்கியானம் கொடுப்பது பகிரங்க வழிகேடு என்பதில் சந்தேகம் இல்லை.

கீழ்க்காணும் ஆக்கத்தையும் பார்க்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/umar_raliku_marivana_vishayam_theriyuma/

மேலும் கீழ்க்காணும் ஏகத்துவம் இதழில் கேள்வி பதில் பகுதியையும் வாசிக்கவும்

http://onlinepj.com/egathuvam/2003-ega/ega_may_2003/

05.04.2013. 01:09

மண்ணறையில் நடப்பதை அறிய முடியுமா

மண்ணறையில் நடப்பதை அறிய முடியுமா

யாசர்

பதில்

மண்ணறையில் நடப்பது குறித்து அல்லாஹ்வின் தூதர் சொல்லிச் சென்றதைத் தவிர வேறு எதனையும் எவரும் அறிய முடியாது. மண்ணறையில் உள்ள ஒருவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை எந்த மனிதனும் அறிந்து கொள்ள முடியாது. மண்ணறையில் சிலர் எவ்வாறு நட்த்தப்படுகிறார்கள் என்பது போல் சிலருக்கு கனவுகள் ஏற்படலாம். ஆனால் அது உண்மையில்லை. ஷைத்தானின் ஊசலாட்டமாகும். ஏனெனில் மண்ணறையில் நடப்பதை எந்த மனிதனும் அறிந்து கொள்ள முடியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

 (திருக்குர்ஆன் 23:100)

இறந்தவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் திரை போடப்படுவதால் மண்ணறை வாழ்வில் நடக்கும் எதையும் இவ்வுலகில் உள்ள மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது.

இதை பின்வரும் நபிமொழியும் விளக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து "முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?'' எனக் கேட்பர். அதற்கு "இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு "(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “"எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்'' என்பான்.  அப்போது அவனிடம் " நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)

புகாரி 1338

வேதனையில் அலறினால் கூட மனிதனுக்கும் ஜின்னுக்கும் அது கேட்காது என்றால் மற்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி 

02.04.2013. 00:10

தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தவனா

தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தான் என்பது சரியா?

"தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்றார்கள் நபிகள் நாயகம்" என்று சூபி கொள்கையை கொண்டவர்கள் கூறுகிறார்கள். இது "அஹம் பிரம்மாஸ்மி" "நான் கடவுள்" என்று கூறும் பிறமதக் கொள்கை போல் உள்ளது. இப்படி ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதாவது உள்ளதா? தயவுசெய்து விளக்கம் தரவும்.

ஹாஜா

பதில்
من عرف نفسه فقد عرف ربه (மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு) தன்னை அறிந்தவர் தன் இறைவன அறிந்தவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக சில சூஃபியாக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது இட்டுக்கட்டி உள்ளனர்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி கூட ஹதீஸ் நூற்களில் இடம்பெறவில்லை. இந்தக் கருத்தில் பலவீனமான ஹதீஸ் கூட ஹதீஸ் நூற்களில் இல்லை.
முஹ்யித்தீன் இப்னு அரபீ, ஷஃரானி போன்ற வழிகெட்டவர்கள் தங்கள் நூற்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இப்படி ஒரு செய்தியைப் புனைந்து எழுதி வைத்துள்ளனர்.
இதற்கு அறிவிப்பாளர் தொடரையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை கேட்ட நபித்தோழரையோ யாராலும் காட்ட இயலாது. அந்த அளவுக்கு இது பொய்யான தகவல்.

وإن لم يصح من طريق الرواية فقد صح عندنا من طريق الكشف
இதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லாவிட்டாலும் நம்முடைய மெஞ்ஞானத்தின் படி இது சரியான செய்தி தான் என்று மனித ஷைத்தான் இப்னு அரபி கூறியிருக்கிறான். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தெளிவுபடுத்தும் விதமாக பிற்காலத்தில் இமாம் சகானீ, அஜ்லூனி போன்ற அறிஞர்கள் நூற்களைத் தொகுத்துள்ளனர். இது இட்டுக்கட்டப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

المصنوع في معرفة الحديث الموضوع (ص: 189)
349 - حَدِيثُ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ قَالَ ابْنُ تَيْمِيَّةَ مَوْضُوعٌ
المقاصد الحسنة (ص: 657)
1149 - حديث: من عرف نفسه فقد عرف ربه، قال أبو المظفر ابن السمعاني: في الكلام على التحسين والتقبيح العقلي من القواطع أنه لا يعرف مرفوعا، وإنما يحكى عن يحيى بن معاذ الرازي يعني من قوله، وكذا قال النووي: إنه ليس بثابت،

இமாம் இப்னு தைமியா அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். இமாம் நவவீ அவர்களும் இப்படி ஒரு செய்தி இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.
இதன் கருத்தைக் கவனித்தால் இது மிகப்பெரிய உளறல் என்பதை அறியலாம்.

தன்னை அறிந்தவர் அல்லாஹ்வை அறிவார் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளான். மனிதனுக்கு அடுத்தவனைப் பற்றி தெரியாவிட்டாலும் தன்னை அறியாத எந்த மனிதனும் இருக்க மாட்டான். அப்படி ஒருவன் இருப்பான் என்றால் அவன் புத்தி சரியில்லாத பைத்தியமாகவே இருக்க வேண்டும்.

தனது நாட்டம் தேவை பலவீனம் பலம் ஆகிய விசயங்களை அவனவன் அறிந்தவனாகவே இருக்கின்றான். என்றாலும் அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்கவில்லை.

தன்னை அறிந்தால் அல்லாஹ்வை அறியலாம் என்றால் அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக குர்ஆன் ஏன் வர வேண்டும்? அல்லாஹ்வைப் பற்றி சரியான கருத்தை மக்களுக்கு புரிய வைப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் வர வேண்டும் ?

குர்ஆனும் தேவையில்லை. நபியும் தேவையில்லை. நாமாக சுயமாகவே அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக அறிய முடியும் என்று இதன் மூலம் இந்த சூபியாக்கள் கூற வருகின்றனர். குர்ஆனையும் நபிவழியையும் ஓரங்கட்டுவதற்காகவே இப்படி ஒரு செய்தியை இட்டுக்கட்டியுள்ளனர்.

மேலும் அனல் ஹக் நான் தான் இறைவன் என்ற கேடுகேட்ட சிந்தாந்தத்தை கூறி காபிராகியவர்கள் இந்த சூபியாக்கள். மனிதன் கடவுளாக முடியும் என்பது இவர்களின் கொள்கை.

தன்னை அறிந்தால் இறைவனை அறியலாம் என்ற போலி தத்துவத்தின் மூலம் இந்த கேடுகெட்ட கொள்கையை சமுதாயத்தில் புகுத்த நினைக்கின்றனர்.

உன்னைப் பற்றி அறிந்தால் இறைவனை அறியலாம். ஏனென்றால் இறைவன் உனக்குள் இருக்கின்றான். நீயே இறைவனாக இருக்கும் போது வேறு இறைவனை எதற்கு தேட வேண்டும்? என்ற நச்சுக்கருத்தையும் இந்த வாசகம் உள்ளடக்கியுள்ளது.

அல்லாஹ்விடமிருந்து நேரடியாக கஷ்பு என்ற ஞானத்தின் மூலம் எங்களுக்கு இந்த உண்மை புலப்பட்டது என்றும் இந்த சூபியாக்கள் உளறியுள்ளனர்.

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் இந்த சூபியாக்கள் விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி கூறவில்லை தான் ஆனால் இதன் கருத்து சரியானது தான் என்று சிலர் குட்டுக் கொடுத்துள்ளனர். அதாவது தான் படைக்கப்பட்டவன் என்று ஒருவன் அறிந்து கொண்டால் தன்னைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து கொள்வான் என்பது போன்ற விளக்கங்களைக் கொடுத்துள்ளனர்.

இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதைப் பற்றி இது பேசவில்லை, ஒரு எறும்பு படைக்கப்பட்டது என்று அறிந்து கொண்டாலும் படைத்தவன் இருக்கிறான் என்று அறிய முடியும்.

மேலும் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இன்னும் இறைவனை அறியவில்லை. அவர்கள் தன்னை அறிந்து கொண்டால் தான் இறைவனை அறிய முடியும் என்பது தான் இதன் கருத்தாகும். அதாவது மனிதனே இறைவனாக இருப்பதால் அதை அறிந்து கொண்டால் அப்போது இறைவனை அறிந்து கொள்ளலாம் என்ற அத்வைதக் கொள்கையை பரப்பவே இது இடுக்கட்டப்பட்ட்து என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

13.12.2012. 22:56

விவாதம் கண்டேன் ஜமாலயிடம் ஒரு கேள்வ

கேள்வி

ஷிர்க் வைப்பவர் விவாதம் கண்டேன். அதில் ஜமாலயிடம்  ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். நான் இஸ்லாத்தை தழுவியவன். அவரின் கூற்று படி நான் எனது வினாயஹரை (இதுக்கு எந்த சக்தியும் கிடையாது) ஆனால் அல்லாஹ் தான் அதற்கு சக்தி கொடுத்திருக்கிறான் என்று எண்ணிக் கும்பிடலாமா ? ஏன் என்றால் அடக்கத்தலத்தின் உள்ளே உள்ள எலும்புக்கூடுக்கு அல்லாஹ் சக்தி கொடுத்துள்ளான்  நம்பப்படும் பொழுது வெளியே உள்ள கல்லை (அல்லாஹ் சக்தி கொடுத்திருக்கிறான் ) என்று எண்ணி கை ஏந்தலாமா ?

பதில் : இஸ்லாத்தில் இருந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அனைவருமே தாங்கள் செய்து கொண்டிருப்பது இணைகற்பித்தல் அல்ல என்று சாதிப்பதற்கு இந்த வாதத்தைத் தான் காலாகாம் எடுத்து வைத்து வருகின்றனர். அல்லாஹ் செய்யும் அனைத்தையும் அவ்லியாக்கள் செய்வதாக நம்பும் இவர்கள் இவர்கள் சுயமாக இப்படி செய்ய மாட்டார்கள். அல்லாஹ் இவர்களுக்கு இந்த் ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணைகற்பித்தல் ஆகாது என்று மக்களை நம்ப வைக்க நினைக்கின்றனர்.

இஸ்லாத்தை ஏற்றுள்ள நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வி இவர்களின் அறியாமையை அம்பலப்படுத்த போதுமானது. இது போன்ற எதிர்க் கேள்விகளை கேட்டிருந்தால் ஜமாலி போன்றவர்கள் உருவாகி இருக்கமாட்டார்கள். கல்லை வணங்கக் கூடியவன் இந்தக் கல் சுயமாக ஒன்று செய்யாது. கடவுள் அத்ற்கு இந்த ஆற்றலை வழ்ங்கியுள்ளா என்று கூறிக் கொண்டால் அது இணைகற்பித்தலில் அடங்காது என்று இவர்கள் கூறுவார்களா

26.11.2012. 07:52

கப்றுகள் உள்ள பள்ளிவாசலில் தொழலாமா?

கப்றுகள் உள்ள பள்ளிவாசலில் தொழலாமா?

 

பள்ளிவாசலின் எல்லலைக்குள் (காணிக்குள்) கப்ரு இருக்க, தொழுவதற்காக வக்பு செய்த எல்லைக்குள் கப்ரு இல்லாமல் இருந்தால் தொழலாமா?

பள்ளிவாசலில் கப்ரு இருக்க சரி நேராக அதன் மேல், மேல்மாடி அமைத்து அதில் தொழ முடியுமா?

பர்ளான தொழுகைகளின் முன் சுன்னதுகளை தவறவிட்டால் அந்த தொழுகைக்குப் பிறகு தொழ முடியுமா? (இதற்கு சுபஹ் தொழுகைக்கான ஆதாரத்தைத் தவிற மற்றைய தொழுகைக்கான ஆதாரங்கள் உள்ளனவா)

 

பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/kabrin_mel_pallivasal/

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/vitupatta_mun_sunnath/

21.11.2012. 07:33

விதியை வெல்ல முடியுமா

விதியை வெல்ல முடியுமா

விதி பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஒரு ஹதீஸ் நான் கேள்விப்பட்டேன். நபி (ஸல்) அவர்கள் அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள், 

தொடர்ந்து படிக்க 14.08.2011. 17:05

மனத்துணிவு பெற என்ன செய்வது?

மனத்துணிவு பெற என்ன செய்வது?

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா? அல்லது என் தவறா?

தொடர்ந்து படிக்க 12.08.2011. 16:08

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்

thaதஜ்ஜால் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றான். அவனுடைய பெயரை யாராவது சொன்னால் அந்தக் கட்டு அவிழ்க்கப்படும். அவனுடைய பெயரை எழுதினால் அவிழ்க்கப்படாது என்று கூறும் ஹதீஸ் இருக்கின்றதா?

தொடர்ந்து படிக்க 03.08.2011. 15:35

கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு மன

கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு மன்னிப்பு கேட்கலாமா

இணைவைப்பு வட்டி போன்ற பெரும்பாவங்களை செய்து கொண்டிருந்த என் தந்தை இவற்றை விட்டுவிடுவதாகக் கூறினார். இதன் பின் அவருக்கு மரணம் ஏற்பட்டது. இவருக்காகப் பாவமன்னிப்புக் கேட்கலாமா?

தொடர்ந்து படிக்க 23.07.2011. 07:37

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top