பெயர் சூட்டு விழா நடத்தலாமா

பெயர் சூட்டு விழா நடத்தலாமா?

இஸ்ஸுல்

பதில்

குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்காக தனியே ஒரு விழாக் கொண்டாடுவதை மார்க்கம் காட்டித் தரவில்லை. இது மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட தேவையற்ற கலாச்சாரமாகும்.

குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அக்குழந்தைக்காக ஆடு அறுக்கலாம். இதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. அன்றைய தினம் குழந்தைக்குப் பெயர் சூட்டுவது நபிவழி. இவ்வாறு செய்வது தவறல்ல.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதன் முடி மழிக்கப்பட்டு அதற்குப் பெயர் சூட்டப்படும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் (2455)

Published on: 12.04.2011. 14:04 Views: 563

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top