மாற்றுக் கருத்துடையவாகளை விமர்சிக்கலாமா?

மாற்றுக் கருத்துடையவாகளை விமர்சிக்கலாமா?

ரபிக்

கேள்வியே தவறாக உள்ளது. மாற்றுக் கருத்து இருந்தால் தான் விமர்சனமே செய்ய முடியும். உங்களின் கருத்தும் என் கருத்தும் ஒன்றுதான் என்றால் நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்க மாட்டோம்.

விமர்சனம் என்பது இரண்டு வகையில் உள்ளது.

ஒன்று கொள்கை ரீதியிலான விமர்சனம்.

மற்றொன்று தனி நபர் சம்பந்தப்பட்ட விமர்சனம்.

ஒருவர் கொண்டிருக்கிற கொள்கையை மற்றொருவர் தவறு என்று விமர்சனம் செய்வதை தான் கொள்கை ரீதியிலான விமர்சனம் என்கிறோம். அக்கொள்கை தவறு என்பதற்குரிய ஆதாரம் இருந்தால் தாராளமாக இவ்வாறு விமர்சிக்கலாம். விமர்சிக்க வேண்டும். இதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் நிறையவே ஆதாரங்கள் உள்ளன.

ஒருவர் தவறான கொள்கையை மக்களுக்கிடையில் சொல்வாரேயானால் அதைக் காண்பவர்கள் அந்தத் தவறை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்:

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா( நிலையா)கும்.

அறிவிப்பாளர் அபூசயீத் குத்ரீ (ரலி)

நூல் : முஸ்லிம் 186

நாம் காணும் தவறை நாவால் தடுப்பதென்பது விமர்சனம் செய்வதாகவே ஆகும். அவ்வாறு விமர்சனம் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி ஆர்வமூட்டப்பட்டுள்ளது என்பதையும் இந்த செய்தியிலிருந்து அறியலாம்.

இறைவன் திருக்குா்ஆனில் கொள்கை ரீதியாக பல விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றான்.

அல்லாஹ் அருளியதைப் புறக்கணித்து பின்பற்றாமல் இரு்பபவா்களை கால்நடைகள் என்று இறைவன் விமர்சிக்கின்றான்.

"அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 2 170 171

சத்தியக் கருத்துகளை சிந்திக்காமல் அலட்சியம் செய்பவா்களை கால்நடைகளை விடவும் மோசமானவர்கள் என விமர்சிக்கின்றான்.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

அல்குர்ஆன் 7 179

வேதம் வழங்கப்பட்டு அதைப் பின்பற்றாமல் இருப்பவா்களை பொதி சுமக்கும் கழுதைகள் என்பதாக இறைவன் விமர்சிக்கின்றான்.

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

அல்குர்ஆன் 62 5

பிறருக்கு கொடுத்த அன்பளிப்பை திரும்ப பெறுபவனை பற்றி தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்னும் நாயைப் போன்றவன் என்று நபிகள் நாயகம் விமர்சித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவா் இப்னு அப்பாஸ்(ரலி)

நூல் : புகாரி 2622

நபிகளாரின் முதல் மார்க்க பிரச்சாரம் கூட விமர்சனத்தில் தான் ஆரம்பித்துள்ளது. லா இலாஹ இல்லல்லாஹ் அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை என்பது தான் நபிகளாரின் முதல் பிரச்சாரம். பல நூறு கடவுள்களை வணங்கிக் கொண்டிருப்பவா்களுக்கு மத்தியில் கடவுள் ஒருவன் தான் என்று சொல்வது விமர்சனம் இல்லையா?

இவ்வாறு கொள்கை ரீதியிலான விமர்சனங்கள் குா்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறைய காணப்படுகின்றன.

இந்த அடிப்படையில் மாற்றுக் கருத்துடையவா்களை கொள்கை ரீதியாக தாரளாமாக விமர்சிக்கலாம். அவ்வாறு விமர்சிக்கும் போது அவரது கொள்கை தவறு என்பதை தகுந்த ஆதாரங்களை முன் வைத்து விமர்சிக்க வேண்டும்.

மற்றொன்று தனி நபர் விமர்சனம். இதையும் இரண்டாகப் பிரித்து அணுக வேண்டும்.

தனிநபருடைய தனிப்பட்ட விவகாரங்களை பிறருக்கு பாதிப்பில்லாத விவகாரங்களை ஒரு போதும் விமர்சிக்க்க் கூடாது. உதாரணத்திற்கு மாற்றுக் கருத்துடைய ஒருவா் குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறார் அல்லது அவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை என்றால் இது அவருடைய தனிப்பட்ட விவகாரமாகும். அவா் வெளிநாடு சென்றதாலோ மனைவியுடன் பிரச்சனை இருப்பதாலோ யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது.

இது போன்ற தனிநபருடைய தனிப்பட்ட விவகாரங்களை ஒரு போதும் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.

அந்த்த் தனிநபரின் சில செயல்கள் மற்றவரைப் பாதிக்கும் என்றிருந்தால் ஏனைய மக்கள் அவரால் பாதிப்படைவதைத் தவிர்ப்பதற்காக அவரிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பதற்காக தாராளமாக விமர்சிக்கலாம்.

பாத்திமா என்ற ஸஹாபி பெண்மணி தன்னை திருமணம் செய்ய பெண் கேட்பதாக சில நபர்களை சொல்லி நபியவர்களிடம் ஆலோசனை கேட்ட போது இப்பெண் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களில் சிலருடைய குறையை நபியவர்கள் வெளிப்படுத்தி பேசியிருக்கிறார்கள். அதாவது விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

2953 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

...........அவ்வாறே நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியாவோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்'' என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்துகொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந் தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.

முஸ்லிம் 2953

ஹதீஸ்களை அறிவிப்பவர்களை எடைபோட்டு பார்த்து விமர்சிக்கிறோம். நபியின் பெயரால் பொய் சொல்லி இருந்தால் அல்லது தவறுதலாக சொல்லி இருந்தால் அதை முஸ்லிம்கள் கடைப்பிடிக்காமல் தடுப்பது கடமை என்பதால் விமர்சிக்கிறோம்.

பொதுவாக நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் சிலர் மற்றவர்களின் தவறுகளை விமர்சிக்கக் கூடாது என்றும் அது ஒற்றுமையைப் பாதிக்கும் என்றும் நினைக்கிறார்கள். எனவே இது குறித்து முழுமையான தெளிவடைய விரும்புவோர் சிரமம் பாராமல் கீழ்க்காணும் ஆக்கங்களைப் பார்வையிடவும்

http://onlinepj.com/unarvuweekly/otrumayai_ethirpathu_sariya/

http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/muslimkalai_kooru_potathu_en/

http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/pirchanaikku_uriyavai_thevaya/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/pira_iyakangalai_vimarsipathu_sariya/

May 9, 2013, 9:54 PM

விளையாட்டுக்கு அனுமதி உண்டா

விளையாட்டுக்கு அனுமதி உண்டா

எந்தெந்த விளையாட்டுக்கள் தடுக்கப்பட்டுள்ளன.?

முஹம்மத் ரியாஸ்

விளையாட்டுக்களை இஸ்லாம் அனுமதிக்கவே செய்கின்றது. சில சமயங்களில் வலியுறுத்தவும் செய்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்திய செய்தியை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 421, 2868, 2869, 2870, 7336

கடை வீதியில் அம்பு எறியும் போட்டியை அஸ்லம் கூட்டத்தினர் நடத்திக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே வந்தனர். இஸ்மாயீல் நபியின் சந்ததிகளே! நீங்கள் அம்பு எறியுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அவர்கள் அம்பு எறிபவராக இருந்தார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, இரு அணிகளாக இருந்தவர்களில் ஒரு அணியைக் குறிப்பிட்டு,நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்'' என்று கூறி அந்த அணியில் சேர்ந்து கொண்டார்கள். எதிரணியில் இருந்தவர்கள் அம்பு எறிவதை நிறுத்தி விட்டார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது, நீங்கள் இந்த அணியில் ஒருவராகச் சேர்ந்திருக்கும் போது உங்களுக்கெதிராக நாங்கள் எப்படி அம்பு எறிவோம்?'' என்று அவர்கள் விடையளித்தனர். அப்படியானால் நான் இரண்டு அணிக்கும் பொதுவானவனாக இருந்து கொள்கிறேன். இப்போது எறியுங்கள்!'' என்றார்கள்.

அறிவிப்பவர் : ஸலமா பின் அக்வஃ (ரலி)

நூல் : புகாரி 2899, 3373, 3516

நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் நடத்திய போது நான் அவர்களை முந்தி விட்டேன். சில காலம் கழித்து எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்ட போது மீண்டும் ஓடினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை முந்தி விட்டு, அதற்கு இது சரியாகி விட்டது என்றார்கள்'' என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்கள் : அஹ்மத் 22989, 25075, அபூதாவூத் 2214

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது முன்னிலையில் பள்ளிவாசலில் அபீஸீனியர்கள் தங்களின் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு விளையாடினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 455, 950, 988, 2907, 3530, 5190

இது போன்ற வீர விளையாட்டுக்களையும், பயனுள்ள விளையாட்டுகளையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

சூதாட்டம், உடலுக்கோ, அறிவுக்கோ பயன்தராத வீண் விளையாட்டுக்கள், விளையாட்டு என்ற பெயரில் ஆடல், பாடல், கச்சேரிகள் போன்றவைகளை இஸ்லாம் தடுக்கின்றது.

குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.

அல்குா்ஆன் 74 42 43 44 45

அது போன்று பிறரைப் பாதிக்கும் விளையாட்டை நபிகளார் தடுத்துள்ளார்கள்

கல்சுண்டு விளையாட்டிற்கு ("கத்ஃப்') நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும்; பல்லை உடைத்துவிடும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவா் அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல் : புகாரி 6220

விளையாட்டுக்கள் பற்றி மேலும் அறிந்திட கீழ்க்காணும் ஆக்கங்களைப் பாருங்கள்

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/ches_soothatama/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/cricet_vilayadalama/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/seettu_vlayadalama/

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/reslin_parkalama/

April 25, 2013, 8:44 AM

கடுமையான அசுத்தம் பட்டால் மண் போட்டு

கடுமையான அசுத்தம் பட்டால் மண் போட்டு கழுவ வேண்டுமா

கடுமையான நஜிஸ் பட்டால் மண் போட்டு கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள் அது உண்மை தானா?

நஸீம்

தொடர்ந்து படிக்க June 1, 2011, 4:12 PM

இசை ஹராமா

இசை ஹராமா இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்?

ரிபாஸ் கத்தார்

தொடர்ந்து படிக்க March 25, 2011, 9:24 PM

கண்டெடுக்கப்பட்ட பொருளை என்ன செய்யல

கண்டெடுக்கப்பட்ட பொருளை என்ன செய்யலாம் நான் பேருந்தில் பயணித்த போது யாரோ விட்டுச் சென்ற பணம் கிடைத்தது. அந்தப் பேருந்தில் என்னைத் தவிர வேறு பயணிகள் யாரும் இல்லை. அந்தப் பணத்தை நான் என்ன செய்வது?

ஷாஹுல்

தொடர்ந்து படிக்க March 25, 2011, 8:55 PM

முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் மு

முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா 

என்னுடைய நண்பர் ஒரு மாற்றுமத பெண்ணை திருமணம் செய்துள்ளார். அப்பெண் இஸ்லாத்தில் இணைத்து விட்டார். இப்போது அந்த பெண்ணுடய பெற்றோரின் சொத்துக்கள் வாரிசு அடிப்படையிலோ அல்லது மற்ற அடிப்படையிலோ அந்த பெண்ணுக்கு ஆகுமானதா? விளக்கவும்.

முஹம்மத்

தொடர்ந்து படிக்க March 17, 2011, 5:06 PM

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வ

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது  9600 சதுர அடி கொண்ட எங்கள் குடும்ப வீட்டு மனையை 3 ஆண்கள் இரண்டு பெண்கள் எப்படி பிரித்துக் கொள்வது?

அக்தர்

தொடர்ந்து படிக்க March 8, 2011, 7:34 PM

என் தந்தையின் சொத்தை எவ்வாறு பங்கிடு

என் தந்தையின் சொத்தை எவ்வாறு பங்கிடுவது

 என் தந்தை வபாத் ஆகி 10 வருடம் ஆகின்றது .என் தந்தைக்கு சொத்து  (வீடு) உள்ளது .இப்போது இந்தச் சொத்தை சில காரணங்களுக்காக விற்க உள்ளோம் .வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும் .என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது தம்பி ,எனது சகோதரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளோம்.சொத்தை எவ்வாறு பங்கிடுவது? 

தொடர்ந்து படிக்க February 26, 2011, 1:59 PM

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் 

சிலர் எழுத்து, பேச்சுகளை முடிக்கும் போதும் "ஜஸாகல்லாஹூ கைர்" என்கிறார்களே. அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா?

காதிர்

தொடர்ந்து படிக்க February 23, 2011, 8:33 AM

சொத்தை எவ்வாறு பிரிப்பது_1

சொத்தை எவ்வாறு பிரிப்பது-1

என் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். என் தந்தையின் தாயும் உள்ளார். முதல் மனைவிக்கு ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இரண்டாம் மனைவிக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கின்றது. இவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றார்கள். இவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. என் தந்தையின் சொத்தை இவர்களுக்கு எவ்வாறு பங்கு வைப்பது?

 சமீவுல்லாஹ்

தொடர்ந்து படிக்க December 23, 2010, 11:05 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top