Beware of Qaadhiyani Qur’aan app:

Beware of Qaadhiyani Qur’aan app:

The following links displayed here are made by Qaadhiyaanis.Several words are interpolated into the verses of this Qur’an app and the software is under name of Ahmadiyya Muslim Community

Android link
https://play.google.com/store/apps/details?id=net.masood.quranarabic 


iphone link (they have two such links “us” and “in”)

https://itunes.apple.com/us/app/the-holy-quran-arabic-text/id374999029?mt=8
https://itunes.apple.com/in/app/holy-quran-arabic-text-english/id374999029?mt=8 


Hence, those who use android or i-phone software platforms should be very cautious and always check well before they download any software in the name of Qur‘aan. Kindly do let know this to all your friends.

27.12.2012. 09:46

Be Aware : காதியான குர்ஆன் app

பின் வரும் இணைப்புகளில் உள்ள குர்ஆன் மென்பொருள் காதியானிகளால் உருவாக்கப்பட்டது. இதில் இறைவனின் வசனங்கள் பல இடங்களில் திரித்து எழுதப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் Ahmadiyya Muslim Community என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.



Android link
https://play.google.com/store/apps/details?id=net.masood.quranarabic 

iphone link (இரண்டு இணைப்பில் இரண்டு பெயரில் வைத்துள்ளனர் us and in)
https://itunes.apple.com/us/app/the-holy-quran-arabic-text/id374999029?mt=8
https://itunes.apple.com/in/
app/holy-quran-arabic-text-english/id374999029?mt=8
 



எனவே குர்ஆனிற்கான ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு மென்பொருகள்களை பதிவிறக்கம் செய்ய விரும்புவோர்கள் கவனமாக இருந்து மேற்கண்ட மென்பொருள்களை குர்ஆன் மென்பொருள் என கருதி பதிவிறக்கம் செய்து விட வேண்டாம். இதை தங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்  

27.12.2012. 08:34

25th DECEMBER IS NOT JESUS BIRTH DAY!

டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம்! – கிறித்தவ மக்கள் அதிர்ச்சி!! என்ற ஆக்கத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு

25th DECEMBER IS NOT JESUS BIRTH DAY! POPE REVEALS – CHRISTIANS SHOCKED!

Christian brothers celebrate Christmas on December 25th every year. They believe that Jesus was born on that date. But the Pope has revealed that the Christians belief and celebration of Jesus’s birthday is not authentic.

The Pope’s statement is given shock to the Christian community who have been celebrating Christmas on 25th December every year. The Pope not only said that, but also smashed out that the year of the Jesus birth is misbelieve.

The Infancy Narratives:

Pope the Benedict XVI revealed in the 3rd page of his book ‘Jesus of Nazareth: The Infancy Narratives’ that it is not true that December 25th is the birth day of Christ and there is a huge gap in between the actual year of the Christ birth and the of the Christians belief.

Our Christian brothers don’t have answer to a question that you have any proof in the Bible to celebrate Christmas on 25th December. But the Pope’s explanation has confirmed the truth that there is no proof in the Bible.

Though many scholars, historians and spiritual leaders indicated that the belief about the history of Jesus is wrong, it is the first time a Pope , the most superior leader of the major Catholic Christian Community had revealed the truth openly.

As many as millions copies of these books have been printed in 20 languages to be circulated to 72 nations worldwide.

Already 2 volumes of the book ‘The Infancy Narratives’ have been published and in the 3rd volume, Pope Benedict XVI has written about the birth and childhood of Jesus. In this book he had revealed about the authenticity of the birth date of Jesus. He had also said in the same book that the year of the birth of Jesus is also untrue and it should have been much before the year which is in belief.

He had also said that the calendar used today which was invented by Dionysius Exiguus, a 6th century monk, was calculated wrongly the year of Jesus Christ’s birth.

Even before there had been difference of opinions among the Christians with regard to the birth of Jesus. Most of the Christians believe that he might have been born between 6 BC and 4 BC. The irony is that the advent of the terminology of BC and AD is related to the birth of Jesus Christ. But, the birth of Jesus is yet to be proven has made a mockery of the calendar the world is following now. It shows the utter weakness of the Jesus Christ’s history.

Next Shocking News:

The Pope Benedict XVI, 85 year old spiritual leader of more than a billion Catholic Community has revealed one more shocking news, in which many Christian brothers are finding tough to digest. It is that the Pope had raised the issue of the presence of animals at the birth of Jesus. He reveals that there is no mention of animals in the Gospels. There were no oxen or donkeys in the nativity scene of the birth of Jesus.

He had also said that as said in Christian belief, there were no songs sung by Angels or Shepherds predicted the miraculous birth of Jesus Christ and it is mere theological filling. There is no proof from the Gospels about this incident.

Jesus was not born in Cow Shed:

We can see that many Christians are setting a scene as if Jesus was born in a cow shed and keep dolls with Jesus lying in the Cow Shed in the Christmas celebration. But the Pope had broken those belief also. He clarified that there is no proof for Jesus was born in the cow shed.

The Christians worldwide consider Bible as their holy book., But the truth is that there is no clear evidence in the Bible about the place, date and year of birth of Jesus Christ. No conclusive point has been reached regarding these issues. There are many confusions and contradictions looming at large.

The birth of Jesus Christ cannot be proved as December 25th. In fact due to the continuing uncertainty many days have been celebrated as the birth day of Jesus. The revelations failed to reveal the true birth date of Jesus. In fact they have ignored this important date of birth.

It is considered that those revelations written during the times of the close friends of Jesus and during the times of his mother and her brother have failed to confirm the birth date of Jesus. This is an important point to be taken into consideration.

Contradictions between Mathew and Luke:

Mathew, one who wrote the history of Jesus, had mentioned about the King Herod who plotted a plan to kill Jesus, but his mother Mary and Joseph took infant Jesus and escaped to Egypt. But Luke had never mentioned anything about this important incident.

It is a mystery why did the holy spirit fail to reveal such an important incident? Instead, Luke is telling that Jesus was brought to the Church publically after 40 days in which days purification was happened . If the king Herod wanted to kill the child, he could use that opportunity. So, Mathew claim that Mary and Joseph escaped with infant Jesus to Egypt. But Lukas claim controversially that Jesus was brought to the Church after the 40th day purification.

The above contradictory incidents clearly indicate that the Bible is made up of fake stories. Br PJ has written about this in detail in his book, ‘This is Bible’ (Ithuthaan Bible).

Situational Glitch:

Now when they had departed, behold, an angel of the Lord appeared to Joseph in a dream, saying, “Arise, take the young Child and His mother, flee to Egypt, and stay there until I bring you word; for Herod will seek the young Child to destroy Him.” When he arose, he took the young Child and His mother by night and departed for Egypt. (Mathew 2:13,14)

Now when Herod was dead, behold, an angel of the Lord appeared in a dream to Joseph in Egypt, saying, “Arise, take the young Child and His mother, and go to the land of Israel, for those who sought the young Child’s life are dead.” Then he arose, took the young Child and His mother, and came into the land of Israel. But when he heard that Archelaus was reigning over Judea instead of his father Herod, he was afraid to go there. And being warned by God in a dream, he turned aside into the region of Galilee. And he came and dwelt in a city called Nazareth, that it might be fulfilled which was spoken by the prophets, “He shall be called a Nazarene.” (Mathew 2:19-23)

But Luke has claimed that there was a very normal situation while Jesus was born. They were in Bethlehem and they used to go and come to Jerusalem for the Pasco celebration every year. Luke 2:15-52

Luke failed to reveal incidents that are Herod’s plot of kill child Jesus, Mary and Joseph’s escape to Egypt, sworn of Herod’s son and hiding life of Mary and Joseph outside of Jerusalem . Luke had said that the situation was very calm and they used to go to Jerusalem without any panic.

If the words were of God, why there are so many contradictions?
Was the situation very normal as Luke had revealed?
Was the situation very fearful as Mathew had revealed?
Did they travel to Jerusalem every year?
Or did they live in hiding as ordered by God to Jesus in his dreams?

Each and everybody had revealed the Biblical story as their assumption and hears. This is a proof that it cannot be the words of God.. Will say it God’s words after these proofs?

No Proofs :

The most important festivals of Christians are Christmas and Easter Sunday. They believe that Christmas is the day Jesus was born and Easter was the day Jesus was resurrected.

Pope has clearly stated that there is no proof for Christmas to be celebrated on December 25th. On analysing with the help of Bible, the very proof about the day of resurrection of Jesus is not on Sunday and hence that celebration is also baseless. Since the two main celebrations of Christians are unauthentic, it is clear that the Bible that they are following is not the words of God.

24.12.2012. 13:28

டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவ

டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம்! – கிறித்தவ மக்கள் அதிர்ச்சி!!

கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.  

 போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்.

தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் :

 16வது "பென்னடிக்ட்" போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் ('Jesus of Nazareth: The Infancy Narratives') என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் "டிசம்பர் 25" என்பது தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை கூறியுள்ளார்.

 டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றீர்களே!அதற்கு பைபிளில் ஆதாரம் உள்ளதா என கிறித்தவ சகோதரர்களிடத்தில் கேட்டால் பதில் இல்லாமல் இருந்து வந்தது. போப் ஆண்டவரின் விளக்கம் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான "போப்" ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.

 இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகம் செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் என்ற இந்த நூல் இதற்கு முன்பு இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் எழுதியுள்ள மூன்றாம் பாகம் என்பது ஏசுவுடைய சிறு வயது முதலான நிகழ்வுகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் போப் அவர்கள் ஏசுவின் பிறப்பு குறித்து பேசும்போதுதான் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

 தற்போது பரவலாக நம்பப் பட்டு வரும் இயேசுவின் பிறந்த வருடம் தவறு என்றும், அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே இயேசுவின் பிறப்பு நிகழ்ந்துள்ளது எனவும் போப்பாண்டவர் அறிவித்துள்ளார்.

 நிகழ்காலத்தில் பெரும்பாலான மக்களால் பாவிக்கப்பட்டு வரும் காலண்டர் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான டியானிசியஸ் எக்ஸிகுஸ் (Dionysius Exiguus) என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர்தான் இந்த ஆண்டுக்கணக்கை தவறாக கூறிவிட்டார் என்று போப் தெரிவித்துள்ளார்.

 இதற்கு முன்னரும் கூட இயேசுவின் பிறந்த தினம் குறித்து கிறித்தவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி.மு6 தொடக்கம் முதல் கி.மு4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதில் வேடிக்கை என்னவென்றால் கி.பி மற்றும் கி.மு என்று பிரிப்பதே இவரது பிறந்த நாளை வைத்துத்தான் எனும்போது அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதிலேயே கருத்து வேறுபாடு வருவது ஏசுவின் வரலாறு எந்த அளவிற்கு பலவீனமான வரலாறாக அமைந்துள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அடுத்த அதிர்ச்சித் தகவல் :

 உலகில் வாழும் சுமார் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான 85 வயதுடைய 16ஆம் பெனடிக்ட் போப்பாண்டவர் அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள மற்றுமொரு கருத்து அனைத்து கிறித்தவ சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தகவல் என்ன தெரியுமா? கிறித்தவ மதத்தில் கழுதைகள் உட்பட ஏனைய விலங்குகள் இயேசுவின் பாரம்பரிய பிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்விலங்குகளுக்கும் கிறித்தவ மதத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையென்றும் கூறியிருப்பதுதான்.

 இது மட்டுமல்லாமல், கிறித்தவ மதத்தில் குறிப்பிடப்படும் தேவதைகள், ஆடு மேய்ப்பவர்களுக்கு இயேசு பிறக்கப் போகிறார் என்று முன்னறிவிப்பு செய்து பாடல் பாடியதாக வரக்கூடிய சம்பவங்களும் பொய் என்றும் அதற்கு எவ்விதமான சான்றுகளும் இல்லை என்றும் போப்பாண்டவர் கூறியுள்ளார்.

மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதும் பொய்யாம்:

 அதுமட்டுமல்லாமல் ஏசு மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததாகக் கூறி மாட்டுத்தொழுவம் போன்று கொழு பொம்மைகளை அமைத்து கிறித்தவர்கள் பில்டப் கொடுப்பார்கள். போப் ஆண்டவர் அவர்கள் அது குறித்த உண்மைகளையும் போட்டு உடைத்துள்ளார். மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 கிறித்தவர்கள் தங்களது மத ஆதாரமாக பைபிளைத்தான் வைத்துள்ளனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ, பிறந்த ஆண்டைப் பற்றியோ பைபிளில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன.

 இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன.

 இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும்போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

மத்தேயுவுக்கும், லூக்காவுக்கும் முரண்பாடு:

 ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மத்தேயு, ஏரோது என்ற மன்னன் இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டியதையும், அதனால் ஏசுவின் தாயார் மரியாளும், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட யோசேப்பும், குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிப் போனதாகவும் கூறுகிறார். ஆனால் லூக்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை.

 இவ்வளவு முக்கியமான நிகழ்வை பரிசுத்த ஆவி ஏன் சொல்லாமல் விட்டது என்று நமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகின்றது. ஆனால், நாற்பது நாட்கள் சுத்திகரிப்பு நிறைவேறிய பின்பு இயேசுவை பகிரங்கமாக ஆலயத்துக்கு கொண்டு வந்ததாக லூக்கா கூறுகிறார். ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.  

 மேற்கண்ட முரண்பாடுகளும் இது குறித்து பைபிளில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கட்டுக்கதைகள்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இது குறித்த செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் தனது "இதுதான் பைபிள்" என்ற நூலில் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார். அது குறித்த செய்தியை கீழே உள்ள செய்தியில் காண்க!

சூழ்நிலைத் தடுமாற்றம்:

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குத் தோன்றி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிப் போய் நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து இரவில் பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குப் போய் ஏரோதுவின் மரண பரியந்தம் அங்கே இருந்தான்.

(மத்தேயு 2:13,14)

 இயேசு பிறந்தபோது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும் அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் அதற்குப் பயந்து இயேசுவின் பெற்றோர் இயேசுவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகிறார். ஏரோது இறந்த பிறகு கூட அவனது மகன் அரகெலாவு என்பவர் ஆட்சிக்கு வந்ததால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு (2:19-23) கூறுகிறார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரணமான நிலை நிலவியதாகக் கூறுகிறார்.

 அவர்கள் பெத்லகேமிலேயே இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும் அவரது பெற்றோர் வருஷம்தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் எனவும் லூக்கா கூறுகிறார்.

(லூக்கா 2:15-52)

 ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும் அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்.

 பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டவற்றில் ஏன் இந்த முரண்பாடு?

 லூக்கா கூறுவது போல் சாதாரணமான நிலைமை இருந்ததா?

 மத்தேயு கூறுவது போல் பயங்கரமான நிலை நிலவியதா?

 ஆண்டுதோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உண்மையா?

 அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்தது உண்மையா?

 ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையெல்லாம் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லாவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?

உண்மையை ஒப்புக்கொண்ட போப்:

 போப் ஆண்டவர் தனது நூலில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் ஏசுவின் பிறப்பு விஷயத்தில் முரண்பட்ட செய்திகளை சொல்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டு அதை சரிக்கட்டுவதற்கு அவர் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் நோக்கம் வரலாற்றை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது அல்ல; மாறாக நம்பிக்கையின் ஒளியை உலகிற்கு பரப்புவதுதான் என்று கூறியுள்ளார்.  

 போப் ஆண்டவர் கூறுவது உண்மையாக இருக்குமேயானால், முரண்பட்ட செய்திகளை அவர்கள் கூறியிருக்கக் கூடாது. அவ்வாறு இருவரும் முரண்பட்ட செய்திகளைக் கூறுவதே அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஒளியை இருளச் செய்துவிடுகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எதற்குமே ஆதரமில்லை:

 கிறித்தவ சகோதரர்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடக்கூடிய இரண்டு பெரும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ்; மற்றொன்று ஈஸ்டர் சண்டே.

 கிறிஸ்துமஸ் என்பது ஏசுவின் பிறந்த தினம் என்றும், ஈஸ்டர் என்பது ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்த தினம் என்றும் கிறித்தவ சகோதரர்கள் நம்புகின்றனர்.

 இதில் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ஆம் தேதி என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதை போப் ஆண்டவர் அவர்களின் ஒப்புதல் வாக்குமுலத்தின் மூலம் அறிந்து கொண்டோம். சரி! ஈஸ்டர் சண்டே என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று பைபிளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் அந்த ஆய்வு முடிவுகளும் கிறித்தவ சகோதரர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது. அது குறித்த அதிர்ச்சித்தகவல்களை ஈஸ்டர் சண்டேவா? ஈஸ்டர் மண்டேவா? என்ற தனிக்கட்டுரையில் காண்க!

18.12.2012. 22:35

ஈஸ்டர் சண்டேவா? – ஈஸ்டர் மண்டேவா?

ஈஸ்டர் சண்டேவா? – ஈஸ்டர் மண்டேவா? – பைபிள் சொல்லும் உண்மை! – அறியாத அப்பாவி கிறித்தவர்கள்!!

கிறிஸ்துமஸ் கொண்டாடும் தேதி தவறு என்ற செய்தியை முதல் பக்கக் கட்டுரையில் கண்டோம். கிறித்தவர்கள் தாங்கள் வேதம் என்று நம்பக்கூடிய பைபிளில் அவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் சண்டே குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தால் பைபிள் அடிப்படையில் அது ஈஸ்டர் சண்டே அல்ல! ஈஸ்டர் மண்டே என்பது தெரியவருகின்றது. அதுகுறித்து பைபிள் சொல்லும் உண்மைகளை கீழே தருகின்றோம். இதை கிறித்தவ சகோதரர்கள் நன்கு ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.

ஏசு மரணித்த நாள்:

 ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை குட் ஃப்ரைடே அதாவது புனித வெள்ளி என்று கிறித்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படியானால் அவர் மரணித்தது வெள்ளிக்கிழமை என்பது உறுதியாகின்றது.

 ஏசு தான் மரணிப்பது குறித்து செய்த ஒரு முன்னறிவிப்பு மத்தேயு என்ற சுவிஷேசத்தில் 12 : 40 ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது.

 அதாவது அவர் மரணித்த பிறகு பூமியில் அடக்கம் செய்யப்பட்டு மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் அவர் இருப்பார் என்பதுதான் அந்த முன்னறிவிப்பு.

 ஏசு மரணித்த பிறகு உயிரோடு எழுந்ததாக சொல்லப்படும் அந்த நாளே ஈஸ்டர் பண்டிகை. இப்போது ஏசு சொன்ன முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும் என்பதை பைபிளின் துணையோடு நாம் கணக்குப்போட்டு பார்க்கலாம்.

 அதாவது ஏசு மரணித்தது வெள்ளிக்கிழமை மதியம் 3மணி. அன்று இரவு அவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அந்த அடிப்படையில், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் அவர் பூமியின் இருதயத்தில் இருந்தாக வேண்டும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிர்த்தெழுந்துவிட்டதாகவும், அதை சிலர் பார்த்ததாகவும் பைபிள் கூறுகின்றது.

 இப்போது பைபிள் சொல்லக்கூடிய கணக்கை காண்போம். ஏசு இறந்து அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை.

வெள்ளிக்கிழமை – 1 இரவு

சனிக்கிழமை காலை – 1 பகல்

சனிக்கிழமை – 1 இரவு

 ஞாயிற்றுக்கிழமை காலை மரகத மரியாள் ஏசு உயிர்த்தெழுந்த போது அவரை பார்த்ததாக பைபிள் கூறுகின்றது.

 ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

 அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாகவும் இருந்தது.

 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

 தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

மத்தேயு 28 : 1 முதல் 6

 கிறித்தவ நம்பிக்கை பிரகாரம் சனிக்கிழமை ஓய்வுநாள். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்திலேயே ஏசு உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகின்றது. அப்படியானால் பைபிள் கூறும் கணக்குப் பிரகாரம் மொத்தம் இரண்டு இரவுகளும், ஒரு பகல் மட்டும்தான் மனுஷ குமாரன் பூமியின் இருதயத்தில் இருந்துள்ளார். எனவே மரியாளுக்கு காட்சி தந்தது பிசாசாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஏசு சொன்ன முன்னறிவிப்பு பிரகாரம் மூன்று இரவும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் ஏசு இருந்திருக்க வேண்டும்.

ஏசு சொன்ன உண்மையான முன்னறிவிப்பின்படி,

வெள்ளிக்கிழமை – 1 இரவு

சனிக்கிழமை காலை – 1பகல்

சனிக்கிழமை – 1 இரவு

ஞாயிற்றுக்கிழமை – 1 பகல்

ஞாயிற்றுக்கிழமை – 1இரவு

திங்கள் கிழமை – 1 பகல்

 மேற்கண்டவாறு கணக்கு போட்டால்தான் மூன்று இரவும், மூன்று பகல்களும் வருகின்றது. அப்படியானால், ஏசு தான் உயிர்த்தெழுவதாக குறிப்பிட்ட நாள் திங்கள் கிழமை இரவுதான். ஆக பைபிளின் அடிப்படையில் பார்த்தால் ஈஸ்டர் சண்டே என்பது முழுக்க முழுக்க தவறு. ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி என்பது நமக்குத்தெரிய வருகின்றது.

 ஆனால் கிறித்தவ நண்பர்களோ மரியாளிடத்தில் விளையாடிய பிசாசைப் பார்த்து அது ஏசு என்று தவறுதலாக விளங்கியுள்ளனர் என்பதும் பைபிளின் அடிப்படையில் தெரியவருகின்றது.

 ஏசு தான் சொன்னபிரகாரம் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் கழித்து திங்கள் கிழமை உயிர்த்தெழுந்தார் எனபதற்கு பைபிள் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் ஏசு செய்த முன்னறிவிப்பும் பைபிள் அடிப்படையில் பொய்யாகிப்போனது. இதன் மூலம் பைபிள் இறைவேதமில்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது.

மொழிபெயர்ப்பு மோசடி:

 அதே நேரத்தில் ஏசுவைப்போல தோற்றமுடைய சாத்தான்தான் இந்த வேளையை ஏசுவுடைய வடிவத்தில் வந்து காட்டியுள்ளார் என்பதற்கு பைபிளிலேயே பலசான்றுகளை நாம் காண்பதால் அது இன்னும் உறுதிசெய்யப்படுகின்றது.

 அதே நேரத்தில் இந்த உண்மையை மறைக்க பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் எத்தகைய மொழிபெயர்ப்பு மோசடியை செய்துள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

பைபிள் ஆங்கில மொழிபெயர்ப்பு:

Jonah was in the stomach of huge fish for three days and three nights. The son of man will be in the grave for three days and three nights. The son of Man will be in grave for three days and three nights.

மத்தேயு 12 : 40

 மேற்கண்ட ஆங்கில மொழிபெயர்ப்பில் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்று தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை கீழ்க்கண்டவாறு மோசடி மொழிபெயர்ப்பு செய்துள்ளனர் இந்த பாதிரிகள்.

 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

மத்தேயு – 12 : 40

 மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்ற வாசகத்தை இரவும் பகலும் மூன்றுநாள் என்று திட்டமிட்டு மோசடி செய்து தங்களது திறமையை காட்டியுள்ளனர் இந்த பாதிரிமார்கள். இவர்களது இந்த மோசடியிலிருந்து கிறித்தவர்கள் மீண்டு வந்து உண்மையான சத்தியக் கொள்கையை விளங்கி பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றிபெற இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.

 ஆக கிறிஸ்துமஸ் எந்த நாள் என்பது தங்களுக்கு தெரியாது. ஈஸ்டர் சண்டே என்பது உண்மையல்ல; ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி என்று நிரூபணமாவதிலிருந்து கிறித்தவர்களின் அடிப்படையே ஆட்டம் கண்டு வருகின்றதை பார்க்கின்றோம். ஒரு கிறித்தவ சகோதரர் மூலம் சென்னையிலுள்ள ஒரு கிறித்தவ பாதிரியாரிடம் ஈஸ்டர் மண்டே என்று சொல்வதுதான் சரியானதாக இருக்குமேயொழிய, ஈஸ்டர் சண்டே என்று சொல்வது சரியில்லை என்பதற்கான மேற்கண்ட ஆதாரத்தை கொடுத்தனுப்பினோம். அதற்கு அந்த கிறித்தவ பாதிரியார் சொன்ன விளக்கம் சிரிப்பை வரவழைப்பதாக அமைந்தது.

 நாம் அனுப்பிய அந்த கிறித்தவ சகோதரர் ஈஸ்டர் சண்டே என்பது தவறு என்பதற்கு இந்த ஆதாரத்தை அந்த பாதிரியாரிடம் காட்டி நமது தரப்பு விளக்கம் என்னவென்று கேட்டதற்கு அந்த பாதிரியார் ஆதாரங்களை வாங்கிப் பார்த்துவிட்டு, பைபிள் அடிப்படையில் ஈஸ்டர் சண்டே என்பது தவறுதான். ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி. ஆனால் உலகமெங்கும் ஈஸ்டர் சண்டே என்றுதான் நம்பிக்கொண்டுள்ளார்கள்.

 அதுமட்டுமல்லாமல் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைதான் விடுமுறை விடுகின்றார்கள். இந்த ஆதாரத்தைக்காட்டி திங்கள் கிழமை விடுமுறை விடச்சொல்ல இயலாது என்பதால் ஈஸ்டர் தினத்தை ஞாயிற்றுக்கிழமைகளிலேயே கொண்டாடி வருகின்றோம் என்று விளக்கமளித்துள்ளார்.

 இப்படித்தான் இவர்களது விளக்கங்களும் நம்பிக்கையும் அமைந்துள்ளது.

18.12.2012. 22:26

யூசர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள

ஆன்லைன்பிஜே வீடியோவில் புதிய யூசர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேயர்கள் அவரவர் கணக்கை துவங்கி இனி வீடியோக்களை அப்லோடு செய்ய ஆரம்பிக்கலாம்.

அப்லோடு செய்யும் நேயர்கள் கவனத்திற்கு:

வீடியோவிற்குரிய தலைப்பை தமிழில் டைப் செய்யாமல் தங்கிலிசில் டைப் செய்யவும். உம் "Iraivan Irukkindrana". இவ்வாறு செய்யும் பட்சத்தில் தமிழ் யுனிகோட் support இல்லாத கணிணி மற்றும் மொபைல்களில் வீடியோக்களை எளிதில் தேடி எடுக்க முடியும்.

வீடியோவின்
Discription னில் வீடியோவில் என்ன இடம் பெற்றுள்ளது. அல்லது வீடியோவின் முழு தலைப்பை தமிழ் யுனிகோடில் குறிப்பிடவும். இது தமிழ் யுனிகோடில் தேடி எடுக்க உதவும்

வீடியோவிற்குரிய tag களை குறிப்பிடும் போது கவனமாக குறிப்பிடவும். related மற்றும் suggestion வீடியோக்கள் இதை வைத்தே தீர்மானிக்கப்படும்.

ஒரு உரையை அப்லோடு செய்தால் அந்த உரையில் பேசப்பட்டுள்ள  விசயங்களை தனி தனி tag களாக கொடுக்கவும். உம்: "ஷிர்கி பித்" என்ற தலைப்பில் உள்ள உரைக்கு , தகடு தாயத்து , மவ்லுது ஓதுவது கூடுமா? , கத்தம் பாத்தியா , சஃபே பராஅத் , இப்படி அந்த தலைப்பில் பேசப்பட்டுள்ள விசயங்கள் ஒவ்வொன்றையும் தனித் தனி tag களாக கொடுக்கவும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை கொண்டு நேயர்கள் தேடும் போது தாங்கள்  அப்லோடு செய்த உரை வந்தால் தேடிய நேயருக்கு பயனுள்ளதாக இருக்கும் என தாங்கள் கருதும் வார்த்தைகளை tag களாக கொடுக்கவும்.

தாங்கள் அப்லோடு செய்யும் உரைகளுக்குரிய உரிய பிரிவை தேர்வு செய்யவும். உரிய பிரிவு பட்டியலில் இல்லை எனில் இணையதளத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும் உடன் சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

தொடர் உரைகளை அப்லோடு செய்யும் போது ஒவ்வொரு பாகத்தின் தலைப்பிலும் பாகம் - 1 பாகம் - 2 Part -1 Part -2 எனக் குறிப்பிடவும்.

அடுத்த பாகத்தின் இணைப்பை முதல் பாக வீடியோவின் Discription ல் கொடுத்துக் கொள்ளலாம்.

தயவு செய்து மார்க்க உரைகள் அடங்கிய வீடியோக்களை மட்டும் அப்லோடு செய்யவும்.


- வெப்மாஸ்டர்




30.10.2012. 15:25

வெளிவந்துவிட்டது


வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்

இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.

குறிப்பாக,

இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை.

இன்னும் பல்வேறு வசதிகளுடன் Youtube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்!

* நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம்.
 
 
பார்த்து விட்டு , வீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்

-வெப்மாஸ்டர்
 


15.10.2012. 11:10

மூளை வரண்டது யாருக்கு?? ஹிஜிரா கும்பல

 நாஷித் அஹ்மத் அவர்கள் மூளை வரண்ட ஹிஜ்ராகும்பலுக்கு தக்க பதிலளித்து ஒரு ஆக்கத்தை அனுப்பியுள்ளார். இது நேயர்களுக்கு பயன்படும் என்பதால் நன்றியுடன் வெளியிடுகிறோம்.

மூளை வரண்டது யாருக்கு??

 

அஸ்ஸலாமு அலைக்கும்.. நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதை மறுக்க இயலாத கூட்டத்தினர், நாளின் துவக்கம் பஜர் என்று பிஜே சொன்னதாக எடுத்துக்காட்டி தங்கள் கொள்கையை நிரூபிக்கக் பாடுபடுகிறது.. இது பற்றி சகோ. பிஜே எழுதிய ஆக்கம் ஒன்றுக்கு (பார்க்க http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/nalin_aramabm_fajru_enru_pj_sonnara/

தொடர்ந்து படிக்க 11.10.2012. 02:22

பிற மதத்தவர்களிடம் அன்பு

 பிற மத்தவர்களிடம் அன்பு:  மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு மகத்தான நற்பண்பு பிற மதத்தவர்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை எனலாம்.

தொடர்ந்து படிக்க 11.09.2012. 01:42

கட்டுரை தொகுப்பு

கட்டுரை தொகுப்பு

30.08.2012. 03:35

மதிப்புரை இஸ்லாம் பெண்கள் உரிமையை

   1989 களிலிருந்து அறிஞர் பிஜே அவர்கள் அல்ஜன்னத்தின் ஆசிரியராக இருக்கும் போது, இஸ்லாத்தின் மீது மாற்றார் தொடுத்த கேள்விகளுக்கெல்லாம்  'மாற்றாரின் பார்வையில் இஸ்லாம்' என்ற தலைப்பில் எழுதி வந்தார். அந்த ஆக்கங்களில் அறிவுபூர்வமாக அவர்களின் விமர்சினங்களுக்கு இஸ்லாத்தில் தக்க பதில்களை முன்வைத்தார்.

தொடர்ந்து படிக்க 08.06.2010. 20:00

காட்டுமிராண்டித்தனமான பத்வா

காட்டுமிராண்டித்தனமான பத்வா

உபியில் முஸ்லிம் மத அறிஞர்கள் காட்டுமிராண்டித்தனான பத்வாவைக் கொடுத்து இஸ்லாத்தையும் பெண்களையும் கேவலப்படுத்தியுள்ளனர். வடநாட்டில் இது போன்ற கிறுக்குத் தனங்களுக்குப் பஞ்சம் இல்லை. அந்தத் தீர்ப்பு குறித்து கீழ்க்கண்ட செய்தி நாளிதழ்களில் வெளியாகியுள்ளது

தொடர்ந்து படிக்க 02.06.2010. 13:10

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

 

 மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

கே.எம். அப்துந் நாசிர், கடையநல்லூர்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். அல்குர்ஆன் 16:125

தொடர்ந்து படிக்க 30.04.2010. 18:43

தமிழ் யுனிகோட் இணையதளத்தை மொபைல் போன

skyfire வேலை செய்ய வில்லை வேறு ஏதம் வழி இருக்கின்றதா என பல நேயர்கள் மின்னஞ்சல் மூலம் கேட்டகின்றனர்.  அவர்களுக்காக..

சமீபத்தில் over load காரணமாக skyfire தனது சேவையை (நாம் இது பற்றி செய்த வெளியிட்டு நமது நேயர்கள் அதிகம் பயனபடுத்தியதாலோ என்வோ) இந்தியாவில் ஜுலை 1 முதல் நிறுத்திவிட்டது.

தொடர்ந்து படிக்க 14.09.2010. 21:09

மொபைல் போனில் பார்க்க

 நமது இணைய தளத்தையும் வேறு எந்த இணைய தளத்தையும் கணிணியில் காண்பது போல் செல்போனிலும் காண முடியும்.

இதற்காக கீழ்க்காணும் இலவச மென்பொருளை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் செல்போனில் நிறுவிக் கொள்ள வேண்டும்

 

www.skyfire.com

 

GPRS என்ற வசதியை செல் போன் நிறுவனங்களிடம் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். யுனிகோட் அடிப்படையில் அமைக்கப்பட்ட எல்லா தமிழ் இணைய தளங்களையும் தெளிவாகப் பார்க்கலாம்.

விண்டோஸ் மொபைல் உட்பட பெரும்பாளான மொபைல் போன்களில் வேலை செய்யக் கூடியது.

வெப்மாஸ்டர்

03.04.2010. 10:51

அவ்லியாக்களின் சிறப்பு

அவ்லியாக்களின் சிறப்பு

பி. ஜைனுல் ஆபிதீன்

 

(இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்த ஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும். அதை இப்போது சில கூடுதல் குறிப்புகளுடன் வாசகர்களின் சிந்தனைக்குத் தருகிறோம்.புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம்.தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

தொடர்ந்து படிக்க 23.03.2010. 18:17

முஸ்லிம்கள் பார்வையில் தெலுங்கானா

 

பற்றி எரியும் ஆந்திரா!

விதைத்ததை அறுவடை செய்யும் காங்கிரஸ்!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் அறுபது ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

தொடர்ந்து படிக்க 14.12.2009. 14:11

லிபரான் அறிக்கை

லிபரான் கமிஷன் அறிக்கை

கூட்டுச் சதி அம்பலம்

சதிகார நரசிம்மராவ் ஆட்சியின் போது 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி திட்டமிட்டு இடித்து தகர்க்கப்பட்டது. இடித்தவர்கள் சங்பரிவார சதிகாரர்கள் என்றாலும் காங்கிரஸ் கயவர்களுக்கும் இதில் சமபங்கு இருந்தது என்பதை நாடே அறியும்.

தொடர்ந்து படிக்க 01.12.2009. 11:18

பொருளாதார நெருக்கடி ஏன்?

 

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன? - ஒரு விரிவான அலசல்

 

(உணர்வு ஹஜ் பெருநாள் சிறப்பிதழுக்காக எழுதி உணர்வில் வெளியான கட்டுரை) பொருளாதார நெருக்கடி இன்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தப் புற்றுநோய் உலகின் பல நாடுகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

தொடர்ந்து படிக்க 01.12.2009. 10:49

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top