ஜனவரி 2008 தீன்குலப் பெண்மணி

இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை

திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டவர்கள். இவர்களது குடும்பத்தினரின் வாழ்வின் பின்னணியில் நாம் பின்பற்றும் முக்கிய கடமைகளும் உள்ளன. ஹஜ் கடமையில் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் ஓடுதல், குர்பானி கொடுத்தல் போன்ற காரியங்களில், இவர்களது குடும்பம் பின்னணியில் இருப்பதை நாம் மறந்து விட முடியாது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூரும் வண்ணமே இவ்வாறு அல்லாஹ் அமைத்துள்ளான். மேலும் பகுத்தறிவுக் கொள்கையை இவ்வுலகிற்குப் பறை சாற்றியவர்களில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் தரலாம்.

தொடர்ந்து படிக்க 11.02.2010. 16:21

பிப்ரவரி 2008 தீன்குலப் பெண்மணி

சமத்துவப் பொங்கல்

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சமத்துவப் பொங்கல் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் பல கட்சியினர் இதை சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடுகின்றனர். இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர்.

பொங்கல் என்பது தமிழர் திருவிழா! எனவே தமிழர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் இது ஒட்டு மொத்த தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை. இந்து மதத்தின் அடிப்படையில் சாமி கும்பிட்டுத் தான் இந்த விழா காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படிக்க 11.02.2010. 16:38

மார்ச் 2008 தீன்குலப் பெண்மணி

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்

 

பிப்ரவரி 21ல் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷரீஃப் தலைமையிலான கட்சி, பேநசீர் கட்சி, முஷாரஃப் ஆதரவு ஆளும் கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிட்டன. பெரிய மூன்று கட்சிகள் போட்டியிட்டும் மொத்த வாக்குப்பதிவு 35 சதவிகிதம் தான். மொத்தத்தில் இந்த அரசியல்வாதிகள் யாரையும் மக்கள் விரும்பவில்லை என்பதை 65 சதவிகித மக்கள் ஓட்டுப் போடாமல் புறக்கணித்துள்ளனர்.

குண்டு வெடிப்பு, கலவரம் என்று அன்றாடம் பார்க்கும் நிலைக்கு பாகிஸ்தான் வந்து விட்டது மக்களிடையே பெரும் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் ஓட்டுப் போடலாம் என்ற எண்ணம் இருந்தாலும் தம் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா என்று எண்ணி ஓட்டளிக்காமல் பலர் இருந்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க 12.02.2010. 19:02

ஏப்ரல் 2008 தீன்குலப் பெண்மணி

ஏகத்துவ எழுச்சி தஞ்சையை நோக்கி...

 

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்திருந்தாலும் அதன் எழுச்சி வீரியமாக இருக்கவில்லை.

1980ஆம் வருட காலத்தில் தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கையின் எழுச்சி ஏற்பட ஆரம்பித்தது. ஏகத்துக் கொள்கையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் ஏற்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் திருக்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகிய இரண்டு மட்டும் தான் என்று கூறிய போது கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டன.

தாக்கப்பட்டவர்கள், ஊர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், அபராதம் விதிக்கப்பட்டவர்கள், அடக்கம் செய்ய மறுக்கப்பட்டவர்கள் என்று மக்களின் எதிர்ப்பு நீடித்துக் கொண்டே போன அதே நேரத்தில் இக்கொள்கையில் இணைந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போனது.

தொடர்ந்து படிக்க 12.02.2010. 19:23

மே 2008 தீன்குலப் பெண்மணி

கோடை காலம்

குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம் என்று ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் நாம் சந்தித்து வருகிறோம். ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெப்பத்தைச் சந்திப்பதால் இந்தக் காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இந்தக் கோடை காலங்களில் மகிழ்ச்சியாக இருக்க பறவைகளைப் போல் மனிதர்களும் குளிர்ச்சியான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்று வருகின்றனர். இவ்வாறு கோடை காலமாக இருந்தாலும் குளிர் காலமாக இருந்தாலும் உலகத்தைச் சுற்றி, அங்குள்ள இறையருட் கொடைகளையும் அவனது அற்புத ஆற்றலையும் புரிந்து கொள்வற்காகப் பயணிப்பது வரவேற்கத்தக்கது தான்.

தொடர்ந்து படிக்க 25.02.2010. 20:34

ஜுன் 2008 தீன்குலப் பெண்மணி

கல்வியைத் தேடி..

மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது.


தொடர்ந்து படிக்க 26.02.2010. 21:19

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top