பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாத
பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையில் கடந்த 28/07/2011 அன்று பாதிரியார்களுக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயீக்களுக்கும் இடையே விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கிருத்தவ சங்கத்தின் சார்பில் விவாதிப்பதற்காக பாதிரியார் ஜெரால்டு, பாதிரியார் அந்தோணி மரிய ஜோஸப் , பாதிரியார் ரிச்சர்டு ஆகியோரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சகோ.கலீல் ரசூல், சகோ.சையது இப்ராஹீம், சகோ.இ.பாரூக், சகோ.தாங்கல் ஹபிபுல்லா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்த இந்த விவாதத்தில் கிருத்தவ மார்க்கத்தில் இருந்தும் பைபிளில் இருந்தும் பலவகையான சந்தேகங்கள் கேள்விகள் கேட்கப்பட்டன. 45 வருடங்களாக ஊழியம் செய்கிறோம், பைபிளையும் குர்ஆனையும் படித்து எங்களின் விரல் நுனியில் வைத்திருக்கிறோம் என்று முதலில் கூறிய பாதிரியார்கள், பல இடங்களில் நெளிந்ததையும், பல இடங்களில் மழுப்பி டிராக் மாறியதையும் காணமுடிந்தது.
ஒரு கட்டத்தில், இந்த பைபிளில் உள்ளதை எவ்வித கேள்விகளும் கேட்காமல்., என்ன இருக்கிறதோ அதைக் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதே விசுவாசம் எனக் கூற ஆரம்பித்தனர்.
அனல் பறக்க நடந்த இந்த விவாதத்தின் முடிவுகளை கிருத்தவ மற்றும் இஸ்லாமிய பொதுமக்களின் கைகளிலேயே வழக்கம் போல நாம் ஒப்படைத்து விடுகின்றோம்.
பாகம்: 1
பாகம்: 2
பாகம்: 3
பாகம்: 4
பாகம்: 5
Published on: August 4, 2011, 9:48 PM Views: 656

