இசை ஓர் ஆய்வு

 சை ர் ய்வு

நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.

மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசையும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம்.

ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், தற்காலத்தில் தோன்றிய யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ  இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள்.

இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள். எனவே இவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவு சரியானதா என ஆய்வு செய்ய வேண்டிய ஒரு நிலை அண்மைக் காலத்தில் ஏற்பட்டது.

இசை தொடர்பாக மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும் என்பதற்காக டிசம்பர் 29ம் தேதி சென்னையில் ஆய்வுக் கூட்டம் இருப்பதாகவும், எனவே விரிவாக ஆய்வு செய்து விட்டு குறிப்பிட்ட தேதியில் வருமாறு தவ்ஹீத் ஜமாஅத்தின் சில மாநிலப் பேச்சாளர்களுக்கு, தலைமையிலிருந்து அறிவிப்புச் செய்யப்பட்டது. திட்டமிட்டவாறு டிசம்பர் 29ம் தேதி அன்று ஆய்வுக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. அங்கு வந்த ஒவ்வொருவரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியாக ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்ற கருத்துத் தான் சரியானது என்ற முடிவுக்கு எல்லோரும் வந்தோம்.

இசை கூடாது என்று கூறக் கூடியவர்கள் புகாரியில் இடம்பெற்ற பின்வரும் செய்தியையே பெரும்பாலும் முதன்மையான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

ஆதாரம்: 1

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது)

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

நூல்: புகாரி 5590

'விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப் பட்டிருப்பதாலும், 'இவற்றை ஆகுமாக்குவார்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என விளங்கிக் கொள்ளலாம்' என்று இசை கூடாது என்று வாதிடுபவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம் பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத் தன்மை மட்டும் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்து விளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமான நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள்.

ஒருவர் நல்ல மனனத் தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பி விட்டால், அவர் நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டு விட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது.

மனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா? அல்லது பின்பு அறிவித்ததா? என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவு கிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலுள்ள ஹதீஸில் இடம்பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்குச் சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் தான் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று இமாம் அபூஹாத்தம் கூறியுள்ளார்.

அடிப்படையில்லாத நானூறுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக இமாம் அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போது அதையெல்லாம் இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார்.

நூல்: தஹ்தீபுல் கமால் பாகம்: 30, பக்கம்: 242

இவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்தி தான் சரியானது என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். எனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா? அல்லது பின்பு அறிவித்தாரா? என்ற தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை, இசை கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது.

இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

நூல்: அஸ்ஸனனுல் குப்ரா பாகம்: 3, பக்கம்: 272

இந்தச் செய்தியை அறிவிப்பவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். குறை சொல்லப்படாதவர்கள். எனவே மார்க்கத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்கு இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்த ஹதீஸ் போதிய ஆதாரமாக உள்ளது.

பைஹகீயில் உள்ள இந்தச் சரியான ஹதீஸைப் போன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்தி உள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.

ஆதாரம்: 2

நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள்.

அவர்கள் '(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?' என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, 'எனக்குக் கேட்கவில்லை' என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள்.

'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன்' என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 4307

குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஆதாரம்: 3

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் 1619

ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டு விடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக் கருவிகள் ஷைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால், நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள்.

இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸம் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

ஆதாரம்: 4

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 2494

மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடைசெய்யப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

17.06.2010. 13:35

தர்கா வழிபாட்டைத் தகர்த்தெறிவோம்

தர்கா வழிபாட்டைத் தகர்த்தெறிவோம்

  • பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டுமே வீடியோ மற்றும் ஆடியோ

  • தவ்ஹீத் எழுச்சி வீடியோ மற்றும் ஆடியோ

  • தவ்ஹீத் என்றால் என்ன வீடியோ மற்றும் ஆடியோ

  • ஏகத்துவமும் தூதுத்துவமும் வீடியோ மற்றும் ஆடியோ

  • ஸுன்னத ஜமாஅத்தினர் யார் வீடியோ மற்றும் ஆடியோ

  • தர்கா வழிபாடும் பேய் பிசாசு நம்பிக்கையும் வீடியோ மற்றும் ஆடியோ

  • இறைவனை நம்புவது எப்படி வீடியோ மற்றும் ஆடியோ

  • இறை நேசர்களும் அற்புதங்களும் வீடியோ மற்றும் ஆடியோ

  • எதிர்ப்பை வென்ற ஏகத்துவம் வீடியோ மற்றும் ஆடியோ

  • எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் வீடியோ மற்றும் ஆடியோ

  • எதிரொலிக்கும் ஏகத்துவம் வீடியோ மற்றும் ஆடியோ

  • ஏகத்துவமும் எதிர்வாதமும் வீடியோ மற்றும் ஆடியோ

  • ஈமானின் கிளைகள் வீடியோ மற்றும் ஆடியோ

  • அல்லாஹ்வைப் புரிந்து கொள்வது வீடியோ மற்றும் ஆடியோ

  • தவ்ஹீதுக்கு எதிரான வாதங்கள் வீடியோ மற்றும் ஆடியோ

  • ஓரிறைக் கொள்கையும் ஒற்றுமைக் கோஷமும் வீடியோ மற்றும் ஆடியோ

  • ஏகத்துவத்தின் எதிர்ப்புகள் வீடியோ மற்றும் ஆடியோ

  • அல்ஹம்து அத்தியாயத்தின் விளக்க உரை வீடியோ மற்றும் ஆடியோ

  • அல்லாஹ்வின் சான்றுகள் வீடியோ மற்றும் ஆடியோ

  • அல்லாஹ்வின் கருணை வீடியோ மற்றும் ஆடியோ

  • மகான்களுக்கு ஆற்றல் உண்டா வீடியோ மற்றும் ஆடியோ

  • இறைத்தூதர்களும் அற்புதங்களும் வீடியோ மற்றும் ஆடியோ

  • இறை நேசர்க்ளும் மனிதர்களே வீடியோ மற்றும் ஆடியோ

  • தர்கா வழிபாடு வீடியோ மற்றும் ஆடியோ

  • நபியல்லாதவர்கள் அற்புதம் செய்தல் வீடியோ மற்றும் ஆடியோ

  • அல்லாஹ்வின் அற்புதங்கள் வீடியோ மற்றும் ஆடியோ


16.05.2010. 14:13

மத்ஹப்களும் தரீக்காக்களும் இஸ்லாத்

மத்ஹப்களும் தரீக்காக்களும் இஸ்லாத்துக்கு எதிரானவை

  • மத்ஹபைப் பின்பற்றாத மத்ஹப்வாதிகள் - வீடியோ மற்றும் ஆடியோ

  • மத்ஹப்களும் தரீக்காக்களும் வீடியோ மற்றும் ஆடியோ

  • நபிவழிக்கு முரணான மத்ஹப்கள் தரீக்காக்கள் வீடியோ மற்றும் ஆடியோ

  • மறுமையில் வெற்றி பெற மாநபி வழியா மத்ஹப் வழியா வீடியோ மற்றும் ஆடியோ

  • பெண்களுக்கு எதிரான மத்ஹப் சட்டங்கள் வீடியோ மற்றும் ஆடியோ

  • மறுமையில் வெற்றி பெற இரண்டா நான்கா? வீடியோ மற்றும் ஆடியோ

  • எதில் வெற்றி உள்ளது வீடியோ மற்றும் ஆடியோ

  • இஸ்லாத்தை தூய வடிவில் பின்பற்றுவோம் வீடியோ மற்றும் ஆடியோ

  • இஜ்மா கியாஸ் என்றால் என்ன? வீடியோ மற்றும் ஆடியோ

  • குர் ஆனும் நபிவழியும் வீடியோ மற்றும் ஆடியோ

  • தூதர் காட்டிய வழி வீடியோ மற்றும் ஆடியோ

  • குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் வீடியோ மற்றும் ஆடியோ

  • புறக்கணிக்கப்படும் மாநபிவழி வீடியோ மற்றும் ஆடியோ

  • எது சத்தியம் வீடியோ மற்றும் ஆடியோ

  • நபிவழி நடந்தால் நரகமில்லை வீடியோ மற்றும் ஆடியோ

  • நான்கு மத்ஹப்களும் நவீன பிரச்சனைகளும் வீடியோ மற்றும் ஆடியோ


16.05.2010. 14:11

கருத்து வேறுபாடுள்ள சட்டங்கள்

கருத்து வேறுபாடுள்ள சட்டங்கள்

 

16.05.2010. 14:08

மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!

மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!

பி. ஜைனுல் ஆபிதீன்

குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!

இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடிக்கடி எடுத்து வைக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து படிக்க 23.03.2010. 17:26

ஜனநாயகம்நவீன இணை வைத்தலா?

ஜனநாயகம்நவீன இணை வைத்தலா?

பி. ஜைனுல் ஆபிதீன்

இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.

தொடர்ந்து படிக்க 11.03.2010. 00:09

தாடி ஓர் ஆய்வு

தாடி ஓர் ஆய்வு

சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் ஏகத்துவம் இதழுக்காக எழுதிய இந்த ஆய்வை நேயர்கள் பயனடைவதற்காக வெளியிடுகிறோம்.

ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்..

தொடர்ந்து படிக்க 24.02.2010. 16:00

அனைவரும் ஒன்று பட முடியாதா?

அனைவரும் ஒன்று பட முடியாதா?
உங்கள் கேள்வியில் உங்கள் நல்ல எண்ணம் தெரிகிறது. நாம் எதை ஆசைப்பட்டாலும் அது சத்தியமாகுமா என்பதை அடிப்படையாக வைத்துத் தான் ஆசைப்பட வேண்டும். அறிவுப்பூர்வமாக சிந்தித்துப்பார்த்துத் தான் ஆசைப்பட வேண்டும்.

தொடர்ந்து படிக்க 23.01.2010. 00:22

வெள்ளிக்கிழமை கஹ்பு ஓதுவது

வெள்ளிக்கிழமை கஹ்பு ஓதுவது சிறப்பானதா

 கேள்வி: ஜும்மா நாளில் கஹ்ஃப் அத்தியாயம் ஓதுவது ஸுன்னதா பித்அத்தா ஆதாரத்துடன் விளக்கவும்.

  சாபிர்

இது குறித்து தீன்குலப் பெண்மணி இதழில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. யூசுப் பைஜீ அவர்களின் அந்த ஆய்வுக்கட்டுரை சரியான தகவலைக் கொண்டுள்ளதால் அதை இங்கே வெளியிடுகிறோம்

தொடர்ந்து படிக்க 15.01.2010. 19:56

ஸிஹ்ர் ஓர் ஆய்வு9

ஸிஹ்ர் ஓர் ஆய்வு9

சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது. அப்படிக் கூறும் ஹதீஸ்கள் எந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும் அது பொய்யான செய்தி தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்கள் வருமாறு:

தொடர்ந்து படிக்க 11.01.2010. 20:02

ஸிஹ்ர் ஓர் விளக்கம்-1

ஒன்று முதல் ஒன்பது தொடர்களும்

ஸிஹ்ர் ஓர் விளக்கம்-1
தொடர் 1

(ஸிஹ்ர் பற்றிய ஆய்வாக இது இருப்பதால் இது தனித் தொடராக வெளிவரும்)

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் புகுந்த இஸ்மாயில் ஸலஃபி அந்தத் தலைப்பின் கீழ் தனது வாதத்தை அறவே நிரூபிக்காமல் ஸிஹ்ர் என்ற தலைப்பில் தான் முழுத் தொடரையும் அமைத்திருந்தார்.

தொடர்ந்து படிக்க 18.11.2009. 11:49

பெண்கள் தங்க நகை அணியலாமா முழுமை

பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த சிலர் அர்த்தமற்ற வாதங்களைச் செய்து வருவது நம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்களின் ஆய்வு முற்றிலும் அபத்தமாகவும் உளறலாகவும் அமைந்திருந்ததால் மக்களுக்கு உண்மையை விளக்குவதற்காக இரண்டு மறுப்புத் தொடர்கள் வெளியிட்டோம். அந்த மறுப்புகளுக்கு எதிராக நன்பர் என்பவர் அபத்தமான மறுப்புக் கட்டுரையை மூன்று தொடர்களாக வெளியிட்டிருந்தார். அவரது மறுப்பு அவரது ஆய்வைப்போலவே அபத்தமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அந்த மூன்று தொடர்களுக்கும் தக்க மறுப்பு வெளியிட்டோம். இவை அனைத்தும் தனித் தனி கட்டுரைகளாக இடம்பெற்றதால் வாசிக்க சிரமம் ஏற்படும் என்பதைக் கவணத்தில் கொண்டு அனைத்தயும் ஒன்றன் பின் ஒன்றாக தொகுத்து வெளியிட்டுள்ளோம்.

தொடர்_1

இந்தப் பிரச்சனை குறித்து அப்பாஸ் அலி அவர்கள் ஆய்வு செய்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாற்றம் செய்து வெளியிடுகிறோம்- பீ.ஜைனுல் ஆபிதீன்

தொடர்ந்து படிக்க 30.12.2009. 20:58

இரண்டாம் ஜமாஅத்

இரண்டாம் ஜமாஅத்

ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்த (தங்க நகை கட்டுரையில் இதை அம்பலப்படுத்தியுள்ளோம்.) இலங்கை நவ்பர் என்பார் ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்றும் வாதிட்டு வருகிறார்.

தொடர்ந்து படிக்க 23.11.2009. 11:28

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்ற ஹதீஸ் பலவீனமானதா?

பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன் படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒரு அறிஞர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும்.

தொடர்ந்து படிக்க 08.11.2009. 12:34

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டும

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா

பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள்;எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். உண்மையா?

தொடர்ந்து படிக்க 17.10.2009. 23:02

<< First < Previous [1 / 2] Next > Last >>



கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
4502812
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
47 நபர்கள்

புது வரவுகள்

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):