உங்கள் கேள்வி
மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.14.12.2009. 21:53
இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்
Mohamed Rucknudeen 24.12.2009. 22:53
Assalamu Alaikum varh
jamath tholugayil kadaisi saffu poorthiyagi kadaisiyaga varubavar adutha saffil thanithu tholuvatha? allathu mun saffil iruppavarai iluthu than arugil vaithu tholuvatha? vilakkam tharavum
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
பதில் வெளியிடப்பட்டு விட்டது. பார்க்க
இகுவைட் (அப்துல்) ந 24.12.2009. 22:45
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அழைக்கும்
பத்வா என்றல் என்ன?
பத்வா யார், ஏன், எதற்கு கொடுக்கவேண்டும்?
பின் குறிப்பு: குவைதில் நான்கு இமாம்கள் சேர்ந்து உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் ஒரே நாளில் தான் கொண்டாடவேண்டும், நோன்பு பெருநாள் மட்டும் தான் பிறை பார்த்து கொண்டாட படவேண்டும் என்று பத்வா கொடுத்து உள்ளார்கள்.
இப்படிக்கு
இகுவைட் (அப்துல்) நசீர்
குவைத்
ஃபதவா என்ற சொல்லுக்கு தீர்ப்பளித்தல் என்று பொருள். மார்க்கம் சம்மந்தமாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் யாரும் கேட்காமலே குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கு மார்க்கத்தின் கருத்தைச் சொல்வதும் ஃபத்வா தான்.
ஒவ்வொருவரும் எந்தக் கொள்கையில் இருக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஃபத்வா கொடுப்பார்கள். அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. திருகுர்ஆன் ஆதாரத்துடன் அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழி ஆதாரத்துடன் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் தன்னிஷ்டத்துக்கு எதையாவது எழுதினால் அதை நாம் ஏற்கக் கூடாது.
குவைத்தில் கொடுக்கப்பட்டதாகக் கூறும் பத்வா சரியானது அல்ல. அந்தக் கருத்துக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. பிறை ஓர் விளக்கம் என்ற நூலை வாசித்து தெளிவடையலாம்.
குவைத் பத்வா நகல் இருந்தால் அனுப்பி வைக்கவும். அதில் என்ன ஆதாரம் காட்டியுள்ளனர் என்பதைப் பார்த்து விட்டு பதில் தருகிறோம்.
இஸ்லாத்தில் திருமணம் செய்யாமல் அடிமைகளுடன் தாம்பத்ய உறவு கொள்வது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது. இக்காலத்துக்கு இது போருன்ட்டாத சட்டமா. தயவு செய்து தெளிவு படுத்துங்கள்
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
இந்தக் கட்டுரையை அல்லது இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலைப் பார்க்கவும் பார்க்கவும்.
Assalamu Alaikkum..Vara,
Aan kulanthai kidaithal...erandu aadu akkeka kodukka vendum enru islathil ullathu.. athatku pathilaha nan oru maadu akkeeka kodukalama..
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
குர்பானிக்கு மட்டும் தான் இப்படி கூறப்பட்டுள்ளது. அகீகாவுக்கு ஆடுகள் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதால் அதைச் செய்வது தான் நபிவழியாகும். அகீகா பற்றி அறிய குழந்தை வளர்ப்பு என்ற உரை மற்றும் இதற்கு நெருக்கமான பதிலைப் பார்க்கவும்.
dear brother assalamu alaikum!
1.POPULAR FRONT of india, DHARUL ISLAM patri ungal karuthu enna?
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
ஜிஹாத் என்று ஆரம்பித்து இப்போது அரசியல் கட்சியாக மாறியவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட். அவர்கள் எதஎயெல்லம் கூடாது என்று கூறினார்களோ அந்த காரியங்கள் அனைத்தையும் அவர்களே செய்கிறார்கள். இதில் இருந்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் விளக்கம் பெற இவர்கள் குறித்த் நேரடி கேள்விக்கு அளித்த பதிலைக் காணுங்கள்.
தாருல் இஸ்லாம் என்பது நாம் கேள்விப்படாத ஒன்று.
Assalamalaikkum WRB
Br.PJ avarkale TNTJ jamathai thavira matra jamathai PALAPATTARAI jamath entru vimarsanam seythu ulleerkal. Plapattarai entral pala perukku piranthavarkal (vipacharathil piranthavn entu artham undu) Neengal ungal web site il thavaraha ethavathu solliirunthal suttikattunkal thiruthikolkiren entru solliulleerkal. Pathil devai thiruthi kolveerkala allathu intha pechai thodaruveerkala?
Ippadi pesuvathu oru nalla marka arinjarukku thahuma?
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
பலபட்டரை என்பது பலவிதமான வியாபரம் செய்யும் நிறுவனத்துக்குச் சொல்லப்படும் வார்த்தை. ஆனால் சில பகுதிகளில் விபச்சாரத் தொழில் செய்யும் பெண்ணுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று சில சகோதரர்கள் சுட்டிக் காட்டினார்கள். எனவே பலவேசம் என்று மாற்றி விட்டோம். (நீங்கள் சொல்லும் அர்த்தம் அந்தச் சொல்லுக்கு இல்லை.)
அந்தச் சொல்லின் நேரடி அர்த்தம் சரியானது தான். ஆனால் அதை தவறான இடத்தில் மக்கள் பயன்படுத்துவது தெரியாத நிலையில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியதும் சரி தான். அதற்கு வேறு அர்த்தம் சில பகுதிகளில் உள்ளது தெரிந்த் பின் அதை மாற்றிக் கொண்டதும் சரிதான். இதையே மூன்றாவது தடவையாக நீங்கள் கேட்பது தான் சரி இல்லை.
Eng Buruhanudhdheen 24.12.2009. 12:01
அஸ்ஸலாமுஅலைக்கும் எனது நண்பரின் வியாபாரம் கண்ணாடிக் கடை. இவ்வியபாரத்தின்போது உருவப்படங்கள் மற்றும் மார்க்கத்துக்கு முரணான படங்களை பிராம் போட்டு கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. பிராம் போட்டு கொடுப்பது இல்லாவிடில் இவ்வியபரம் இல்லை. இது ஹலாலாகுமா?
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
ஹராமான காரியத்துக்கு துணை புரியும் இது போன்ற தொழிலை முஸ்லிம்கள் செய்யக் கூடாது.
கூடுதல் விபரம் அறிய இதற்கு நெருக்கமான இந்த பதிலைப் பார்க்கவும்
பொருளாதாரம் குறித்து முழுமையாக் அறிய இந்த உரையைக் கேளுங்கள்.
rajamohammed.eranakulam 24.12.2009. 10:49
ASSALAMU ALIKKUM ANNANN PJ AVARAKALUKKU.. TMAILAN T V OLIPARAPPAHUM MAKKAL MANTRAM PAARPAHUNDA ? MARIMUHAMA UNGALAI PATRI VIMASANAM SEYYAPATUHIRATHU VILKKAM THARAVUM.
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
காதியானிகள் உள்ளிட்ட அனைவரையும் முஸ்லிம்கள் வட்டத்தில் சேர்த்து அவர்களது கருத்துக்களையும் பரப்பும் தளமாக அது உள்ளது. அனைவரையும் ஒன்று படுத்தப் பொகிறேன் என்று கூறிக் கொண்டு தனி நபர் விளம்பரத்துக்காக அது நடத்தப்படுகிறது. நம்மையும் அழைத்தனர். எங்களைத் தவிர மற்ற் அனைவரையும் முதலில் ஒன்று படுத்திக் காட்டி விட்டு எங்களைக் கூப்பிடுங்கள். எங்களுக்கு வெலை இருக்கிறது. எருமை மாட்டைச் சிறைக்கும் வேலைக்கு எங்களைக் கூப்பிட வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விட்டோம். நம்மை தாக்காவிட்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும்..
அஸ்ஸலாமு அலைக்கும் வீடு கட்டும் போது ஆடு பலி கொடுக்க வேண்டுமா
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
இது இந்துக்களிடம் கற்றுக் கொண்ட மூட நம்பிக்கையாகும். கண்டிப்பாக இதைத் தவிர்க்க வேண்டும்
assalamu alikum annan pj avargaluku nan ipodhu saudil irukean ennaku oru sandehgam muslim ennbavan sex visayatheil evlavu jakrathiyaga iruka veandum suya inbam seiyalama konjam thelivou paduthtavum
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
பதில் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க
இறைவனின் திருபெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்
1.விரலை அசைப்பது சரியா? தவறா? இதில் எதற்கு ஆதாரம் உள்ளது எது நபி வழி?
2.தொப்பி அணிந்துதான் தொழ வேண்டுமா?
3.சூனியம்,மந்திரம் உண்மையா?
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
இவை அனைத்துக்கும் நமது இணைய தளத்தில் முன்னரே பதில் உள்ளது.
1- விரலை அசைப்பது குறித்து அறிய விலரசைத்தல் நபிவழியா
2- தொப்பி அணிவது குறித்து அறிய தொப்பி அணிவது அவசியமா1- தொப்பி அணிவது அவசியமா2 தொப்பி அணிவது அவசியமா3
3- சூனியம் மந்திரம் பற்றி அறிய கட்டுரை1- கட்டுரை-2 கட்டுரை-3 கட்டுரை-4
Nizar Ahamed 23.12.2009. 18:30
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள பிஜெ அவர்களுக்கு
பாபர் மஸ்ஜித் போராட்டங்களை புதிய வியூகங்கள் அமைத்தால் என்ன.? அத்வானி, வாஜ்பாய், உமா பாரதி, பிரவீன் தொகடிய போன்ற தேச துரோக நாய்களின் இருப்பிடங்களை முற்றுகை இட்டு, பாபர் மஸ்ஜிதை இடித்தது போல அந்த நாய்களின் வீடுகளையும் இடித்தால் என்ன ..?
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
நேற்று முடிவு எடுத்து இன்று பள்ளிவாசலை இடிக்கவில்லை. 1949 ல் சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து அப்பாவிகளுக்கு வெறியூட்டி 1992ல் தான் இடித்தார்கள். 43 ஆண்டுகள் இதற்காக படிப்படியாக காய் நகர்த்தினார்கள். அது போல் பாபர் மசூதி இடத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ள தற்காலிகக் கட்டடத்தை இடிக்கலாம். ஆனால் இதற்கு கடுமையான விலையைக் கொடுக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் குறிப்பாக உபியில் இதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அது வரை வேறு விதமான போராட்டங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்பதிக் கொண்டிருக்க வேண்டியது தான். ஆனால் அவர்களின் வீட்டை இடிப்பது என்பது சரியானதல்ல. இந்துத்துவாவின் பலம் அதிகரிக்க இது உதவும். அப்பாவி இந்துக்களை அவர்கள் பக்கம் தள்ளும் வகையில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது.
sheikh muhammad 23.12.2009. 17:51
இணை வைக்கும் இமாமை பின்பற்றுவது பற்றி இன்னொரு இணைய தளத்தில் இருப்பதை ஆராயவும் .நீங்கள் எழுதியுள்ள கட்டுரையில் அந்த லிங்கில் இருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு போதுமான விளக்கம் இல்லை. விரிவாக பதில் வேண்டுகிறேன் .
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பதற்கு நாம் அளித்த விளக்கம் எந்தவகையில் போதுமானதாக இல்லை. எந்த வாதத்துக்கு பதில் சொல்லப்படவில்லை என்று குறிப்பிட்டு எழுதுங்கள் விளக்கம் தருகிறோம். இந்தப் பிரச்சனையுடன் தொடர்பு இல்லாத விஷயங்களை யாராவது எழுதி இருந்தால் அதை நாம் கண்டு கொள்வதில்லை.
jahir hussain 23.12.2009. 17:39
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரதட்சனை ஒழிப்பு பொது கூட்டங்கள் முன்பு போல் அதிகமாக நடைபெறுவது இல்லை. அறியாமல் வரதட்சனை வாங்கியவர்கள் திருப்பி கொடுப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்மேடையில் பார்த்த பல பெற்றோர்கள் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது இன்ஷா அல்லாஹ் மீண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகமான வரதட்சனை ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும் செய்யுமா? a.ஜாகிர் உசேன saudi
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
தலைமைக்கு இந்த யோசனையைத் தெரிவித்தால் இன்ஷா அல்லாஹ் செயல்படுத்துவார்கள்
sheikh muhammad 23.12.2009. 17:32
காது மூக்கு குத்தலாமா ?
<br> <br> <b> Admin Rpl </b> ? va alaikumus salam
பதில் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க
அஸ்ஸலாமு அழைக்கும்
ஒரு ஆண் பெண்களுக்கு மட்டும் இமாம் ஜமாஅத் நடத்த முடியூமா?
<br> <br> <b> Admin Rpl </b> va alaikumus salam
ஆண்கள் பெண்களுக்கு இமாமத் செய்யக் கூடாது என்று கூறுவத்ற்கு எந்த ஆதர்ரத்தையும் காண முடியவில்லை.
ஒரு ஆண் இரவில் தன் மனைவியை எழுப்பி இருவரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாக்வோ இரண்டு ரகாத்துகள் தொழுதால் அவர்கள் இறைவனை நினைவு கூர்ந்தவர்கள் பட்டியலில் எழுதப்படுவார்கள் என்பது நபி மொழி அபூதாவூத்.1114
இருவரும் சேர்ந்து தொழுதல் ஆண் இமாமாக் நிற்பதையே குறிக்கும்.
Assalamu Alaikum.
Naam tholuthu kondirukkum poluthu, nammai pinnal thottuvittu namakku pin jamathil serukirargal.thodapattvarum kuralai uyarthi,jamath nadathugirar. Itharkku Markathil anumathi unda?
Ayyampet ALEEM
Dubai
<br> <br> <b> Admin Rpl </b> va alaikumus salam
இந்த பதிலை வாசிக்கவும்
raj mohammed 23.12.2009. 13:57
how to share the father's property between three sons and one daughter. pls explain
<br> <br> <b> Admin Rpl </b> va alaikumus salam
தந்தை இறக்கும் போது அவருக்கு மனைவி தாய் தந்தை இல்லாமல் நீஙகள் குறிப்பிடும் வாரிசுகள் மட்டும் இருந்தால் அவரது சொத்தை ஏழு பாகமாக பிரித்து மூன்று மகன்களூகு தலா இரண்டு, மகளுக்கு ஒன்று எனப் பிரித்துக் கொள்ள வேண்டும்
neega thapa saymategala?
<br> <br> <b> Admin Rpl </b> va alaikumus salam
தப்பு செய்யா விட்டால் அவன் மனிதன் இல்லை. ஆனால் மார்க்கத்தின் பெயரால் தப்பு என்று தெரியும் எந்தத் தீர்ப்பையும் வழங்கியதில்லை. நானே கடைப்பிடிக்காத தாக் இருந்தாலும் எனக்கு எதிராக இருந்தாலும் அதைச் சொல்லியே வந்துள்ளேன். மனிதன் என்ற முறையில் நான் தப்பு செய்பவன் தான் எனனை விட குறைவாக தப்புச் செய்யும் மக்கள் நிறைய உள்ளனர்.
a.m.anwer sadath 23.12.2009. 12:02
அஸ்ஸலாமு அழைக்கும் ,
சகாத் எந்த எந்த பொருளுக்கு எவளவு, எப்போது கொடுக்க வேண்டும் என்பனவற்றை அறிய எந்த சீடியை பார்க்க வேண்டும்.
a.m.anwer sadath,reading,uk
கீழ்க்காணும் ஹதீஸ்களைப் பார்தால் போதும்
1454அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பப்பட்டதும் அபூபக்ர் (ரலி) எனக்குக் கடிதம் எழுதினார். அதில், பிஸ்மில்லாஹிர்ரமானிர்ரஹீம் இது அல்லாஹ் தனது தூதருக்கு ஏவி அவர்கள் முஸ்லிம்கள் மீது கடமையாக்கிய ஸகாத் (பற்றிய விவரம்) ஆகும். முஸ்லிம்களில் யாரும் கணக்குப்படி ஸகாத் கோரப்பட்டால் அதை வழங்க வேண்டும். கணக்குக்கு மேல் கோரப்பட்டால் கொடுக்க வேண்டாம்.
இருபத்து நான்கு ஒட்டகங்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் ஒவ்வொரு ஐந்து ஒட்டகத்திற்கும் ஓர் ஆடு ஸகாத் கொடுக்க வேண்டும்.இருபத்தைந்து ஒட்டகம் முதல் முப்பத்தைந்து வரை ஒரு வயது பெண் ஒட்டகம், முப்பத்தாறு முதல் நாற்பத்தைந்துவரை, இரண்டு வயது பெண் ஒட்டகம், நாற்பத்தாறு முதல் அறுபது வரை மூன்று வயதுள்ள, பருவமான பெண் ஒட்டகம், அறுத்தொன்றிலிருந்து எழுபத்தைந்துவரை நான்கு வயது பெண் ஒட்டகம், எழுத்தாறிலிருந்து தொண்ணூறு வரை இரண்டு வயதுள்ள இரண்டு பெண் ஒட்டகங்கள், தொண்ணூற்றொன்றிலிருந்து நூற்றியிருபதுவரை மூன்று வயதுள்ள, பருவமடைந்த இரு பெண் ஒட்டகங்கள் ஸகாத் ஆகும். நூற்றியிருபதுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நாற்பது ஒட்டகங்களும் இரண்டு வயது பெண் ஒட்டகம் ஒன்றும் ஒவ்வொரு ஐம்பதுக்கு மூன்று வயது பெண் ஒட்டகம் ஒன்றும் ஸகாத் ஆகும். யாரிடம் நான்கு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளதோ அவற்றிற்கு ஸகாத் இல்லை - உரிமையாளர் நாடினாலே தவிர! அவை ஐந்து ஒட்டகங்களாகிவிட்டால் அதற்குரிய ஸகாத் ஒரு ஆடு ஆகும். காடுகளில் மேயும் ஆடுகள் நாற்பதிலிருந்து நூற்றியிருபதுவரை இருந்தால், அதற்கு ஸகாத் ஓர் ஆடு ஆகும். நூற்றியிருபதுக்குமேல் இருநூறுவரை இருந்தால் இரு ஆடுகளும், இருநூறுக்கு மேல் முன்னூறு வரை மூன்று ஆடுகளும் முன்னூறுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடும் ஸகாத் ஆகும். காடுகளில் மேயக்கூடிய ஆடுகளில் நாற்பதில் ஒன்று குறைந்துவிட்டாலும் உரிமையாளர் நாடினாலே தவிர அதில் ஸகாத் இல்லை. வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டுமேயிருந்தால் உரிமையாளர் நாடினாலே தவிர ஸகாத் இல்லை.
புஹாரி 1454
ஐந்து ஒட்டங்களுக்குக் குறைவாக இருந்தால் அதில் ஸகாத் இல்லை
1459அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து வஸக்குகளைவிடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஸகாத் இல்லை; ஐந்து ஊக்கியாக்களைவிடக் குறைவாக உள்ள வெள்ளியில் ஸகாத் இல்லை; ஐந்து ஒட்டகங்களைவிடக் குறைவானவற்றிலும் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புஹரி 1459
குதிரைக்காக முஸ்லிம் ஸகாத் கொடுக்க வேண்டியது இல்லை
1463அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
புஹாரி 1463
1483அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புஹாரி 1483
மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்
* = கட்டாயம் தேவையான தகவல்