20. தற்கொலை செய்யக் கட்டளையா?

20. தற்கொலை செய்யக் கட்டளையா?

உங்களையே கொன்று விடுங்கள் என்று மூஸா நபியவர்கள் கூறிய செய்தி 2:54 வசனத்தில் இடம் பெற்றுள்ளது. இதை நேரடிப் பொருளில் பெரும்பாலான விரிவுரையாளர்கள் விளக்கியுள்ளனர்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:19 PM

21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

 21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

இறைவனை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு இஸ்லாம் அளிக்கும் விடை, முடியாது என்பது தான்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:22 PM

22. தூர் மலையை உயர்த்துதல்

22. தூர் மலையை உயர்த்துதல்

திருக்குர்ஆனின் 2:63, 2:93, 4:154 ஆகிய வசனங்களில் தூர் மலையை அல்லாஹ் உயர்த்தி உடன்படிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளாமல் பல்வேறு விளக்கங்களைச் சிலர் கூறுகின்றனர். ஆனால் தூர் மலையை உயர்த்தியதாகக் கூறப்படுவதை அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:24 PM

23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?

23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?

மீன்பிடித் தொழில் செய்து வந்த முன்னர் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்கு சனிக்கிழமை தோறும் மீன்பிடிக்கக் கூடாது என்று இறைவன் கட்டளை இட்டான். ஆனால் அவர்கள் இக்கட்டளையை மீறினார்கள். இதனால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:25 PM

24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்த

24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல்

மூஸா நபியவர்கள் காலத்தில் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. கொலையாளியைக் கண்டு பிடித்துத் தருமாறு மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டனர். ஒரு மாட்டை அறுத்து, கொல்லப்பட்டவனின் மீது அடித்தால் அவன் உயிர் பெற்று தன்னைக் கொன்றவனை அடையாளம் காட்டுவான் என்று இறைவன் சொன்னான்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:26 PM

25. முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப

25. முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு

தவ்ராத், இஞ்ஜீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு இருந்தது. (பார்க்க : திருக்குர்ஆன் 7:157, 48:29, 61:6)

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:42 PM

26. பொருத்தமில்லாத வசன எண்கள்

26. பொருத்தமில்லாத வசன எண்கள்

திருக்குர்ஆனின் வசன எண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலோ, நபித்தோழர்களாலோ இடப்படவில்லை. பிற்காலத்தில் வந்தவர்கள் தான் எண்களிட்டனர். பல இடங்களில் ஏற்கத்தக்க வகையில் எண்கள் இட்டாலும், சில இடங்களில் பொருத்தமில்லாமலும் எண்கள் இட்டுள்ளனர்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:44 PM

27. வேதம் கொடுக்கப்பட்டோர் என்றால் யார

27. வேதம் கொடுக்கப்பட்டோர் என்றால் யார்?

"வேதம் கொடுக்கப்பட்டோர்' என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையும் மட்டுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:45 PM

28. வானவர்கள் சூனியத்தைக் கற்றுத் தரவி

 

28. வானவர்கள் சூனியத்தைக் கற்றுத் தரவில்லை

பில்லி, சூனியம் என்று மக்களை ஏமாற்றி வந்த யூதர்கள் அதற்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் உள்ளது என்று காட்டுவதற்காக ஜிப்ரீல், மீக்காயீல் என்ற இரு வானவர்கள் வழியாகவே இது தமக்குக் கிடைத்தது எனக் கூறிவந்தனர். அந்த வானவர்களிடமிருந்து ஸுலைமான் நபிக்கு வந்து, அவர் வழியாகத் தமக்கு வந்தது என்றும் பித்தலாட்டம் செய்து வந்தனர்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:47 PM

29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த ந

 

29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்

"ராஇனா' என்ற சொல் இரண்டு அர்த்தங்களுடைய சொல்லாகும். "எங்களைக் கவனித்து வழி நடத்துங்கள்' என்பது ஒரு பொருள். "எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே' என்பது மற்றொரு பொருள்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:50 PM

30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?

 

30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?

இறைவன் அருளிய வசனத்தை அவனே ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் முதலிலேயே சரியாகக் கூறி விட வேண்டியது தானே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:52 PM

31. மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன?

 

31. மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன?

மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று 2:108 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில் தேடிப் பார்க்கும் போது, இறைவன் கண்டிக்கின்ற பாரதூரமான நான்கு விஷயங்களை அவர்கள் மூஸா நபியிடம் கேட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:53 PM

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூ

 

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது

உலகில் உள்ள பல்வேறு மதங்களில் தீண்டாமையின் பீடங்களாக வழிபாட்டுத் தலங்களே அமைந்துள்ளன. குளம், கிணறு, சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் தீண்டாமை ஓரளவு ஒழிக்கப்பட்டாலும் வழிபாட்டுத் தலங்களில் மட்டும் நூறு சதவிகிதம் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வழிபாட்டுத் தலங்களின் மூலஸ்தானம் வரை சென்று வழிபட முடியும் என்ற நிலையை எவராலும் மாற்ற முடியவில்லை என்பதைக் காண்கிறோம்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:55 PM

33. அந்த ஆலயம் என்பது எது?

 

33. அந்த ஆலயம் என்பது எது?

திருக்குர்ஆனின் பல வசனங்களில் அந்த ஆலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆலயம் என்பது கஅபாவையும் அதன் வளாகத்தையும் குறிக்கும்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:56 PM

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்

 

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 12:58 PM

36. நபிகள் நாயகத்தின் நான்கு பணிகள்

 

36. நபிகள் நாயகத்தின் நான்கு பணிகள்

இவ்வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப் பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 5:05 PM

37. நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூ

 

37. நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது

இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்பதைச் சிலர் சரியாக விளங்காமல் இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டி வருகின்றனர். வேறு சிலர் இறைத் தூதர்கள் அனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் எனக் கூறி வருகின்றனர். இவ்விரு கருத்துக்களுமே தவறாகும்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 5:08 PM

38. அல்லாஹ் தீட்டும் வர்ணம்

 

38. அல்லாஹ் தீட்டும் வர்ணம்

ஒருவர் ஒரு மதத்தைத் தழுவும் போது வர்ணம் கலந்த நீரில் அவரைக் குளிப்பாட்டி, அல்லது தெளித்து "'இப்போது நமது மதத்தில் சேர்ந்து விட்டார்'' எனக் கூறும் வழக்கம் அன்று இருந்தது. இஸ்லாத்தில் சேர்வதற்கு இத்தகைய வர்ணம் கலந்த நீரோ, வண்ணப் பொடிகளோ இல்லாததை மற்றவர்கள் ஏளனமாகப் பார்க்கக் கூடும்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 5:09 PM

39. நபிவழியும், கிப்லா மாற்றமும்

 

39. நபிவழியும், கிப்லா மாற்றமும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தக் கிப்லா மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. இது பற்றித் திருக்குர்ஆன் 2:142-145 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

தொடர்ந்து படிக்க July 10, 2009, 5:11 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top