349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னு
349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்கு தண்டனை!
ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால் இவ் வசனத்தில் (40:46) யுகமுடிவு நாளில் இவர் களைக் கடும் தண்டனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது.
இது தான் கப்ரின் வேதனை என்று நபி மொழிகள் கூறுகின்றன. இது பற்றி அதிக விபரம் அறிய 332, 166 ஆகிய குறிப்புகளைப் பார்வையிடுக!
11.07.2009. 19:08
