310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என
310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு
இன்றைய மக்கா நகரம், நபிகள் நாயகம் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது.
இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து கனிகள் கொண்டு வரப்படும் என இவ்வசனம் (28:57) முன்னறிவிப்புச் செய்கிறது. இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதை ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காண முடியும்.
உலகத்தில் உள்ள எல்லா விதமான கனிவகைகளும் அந்த மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சியை உலகம் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
திருக்குர்ஆன் இறைவேதம் என்பதை நிரூபிக்கும் சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.
To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: 11.07.2009. 10:16 Views: 551

