299. மக்கள் முன்னிலையில் தண்டனை

299. மக்கள் முன்னிலையில் தண்டனை

திருமணம் செய்தவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் செய்யாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடிகளும் வழங்கப்பட வேண்டும் என்பது நபிவழியில் கிடைக்கும் சட்டமாகும்.

இவ்வசனத்தில் (24:2) நூறு கசையடி மட்டும் தண்டனையாக குறிப்பிடப்பட்டிருக்கும் போது இதற்கு மாற்றமாக இரு வகையான தண்டனைகள் எப்படிச் சரியாகும்? என்பதை அறிய 115வது குறிப்பைக் காண்க!

இது போன்ற தண்டனைகளை நிறைவேற்றும் போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில், அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

எனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்ட முடியும். இதனால் தான் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கட்டும்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

To read this explanation in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: July 11, 2009, 7:21 PM Views: 541

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top