18. மூஸாவின் நாற்பது இரவுகள்
18. மூஸாவின் நாற்பது இரவுகள்
எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்கள் அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில் பலகைகளில் எழுதப்பட்ட வேதத்தை அவர்களுக்கு இறைவன் வழங்கினான் என்று திருக்குர்ஆன் 2:51, 7:142 வசனங்கள் கூறுகின்றன.
மூஸா நபிக்கு வேதம் வழங்கப்படுவதற்கு முன்பே அவர்கள் இறைத் தூதராக ஆக்கப்பட்டிருந்தார்கள். தமது சமுதாயத்திற்குப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஃபிர்அவ்னை எதிர்த்துப் போராடினார்கள். இதன் பிறகே அவர்களுக்கு வேதம் அருளப்பட்டது.
நபிமார்களுக்கு வேதம் அருளப்படுவதுடன் வேதம் அல்லாத வேறு செய்திகளும் வேறு வழியில் வழங்கப்பட்டன என்பதற்கும், வேதம் மட்டுமே இறைச் செய்தி என்று சிலர் கருதுவது தவறு என்பதற்கும் இது சான்றாகும்.
இது குறித்து மேலும் விபரம் அறிய 27வது குறிப்பையும் காண்க!
10.07.2009. 02:46
